Saturday, December 18, 2010

"மகளிர் மட்டும்" வங்கிகள் : கர்நாடகா அதிரடி

கர்நாடக மாநிலத்தில், பெண்கள் தன்னம்பிக்கை உடையவர்களாக திகழ்வதாகவும், அவர்‌களை மேலும் மேம்படுத்தும் பொருட்டு, மாநிலத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் பெண்கள் மட்டும் செயலாற்றத்தக்க வகையிலான கட்டமைப்புடன் கூடிய "மகளிர் மட்டும்" வங்கிகளை அமைக்க தீர்மானித்திருப்பதாக, முதல்வர் எ‌டியூரப்பா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, முதல்வர் எடியூரப்பா பிறப்பித்துள்ள அறிக்கையில் தெரிவித்துளளதாவது : தங்களது அரசு, ஏற்கனவே, மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு உதவி செய்து வருவதாகவும், இதுவரை கிராம பஞ்சாயத்துகளுக்கு, பெண்கள் சுய உதவிகுழுக்களின் மூலம், ரூ. 5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. பெண்கள் நலன் தொடர்பான திட்டங்களில் தமது அரசு தீவிர கவனம் செலுத்தி வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, December 14, 2010

புதுமனை புகுவிழா : பசு நுழைவதன் பலன்

கட்டடம் உறுதியாக இருக்க வேண்டும் என்பதற்காக நாம் பசுவை கொண்டு செல்வது கிடையாது. விருத்தி அம்சத்திற்காகத்தான் பசுவை நாம் கொண்டு செல்கிறோம். இந்தக் கட்டடம் 200 வருடம் இருந்தது, 300 வருடம் இருந்தது என்பது முக்கியம் கிடையாது. இப்பவும், சில இடங்களுக்கு, சில வீடுகளுக்கு இந்த வீட்டிற்கு வந்தோம், 4 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்தது. தற்பொழுது குழந்தை பிறந்திருக்கிறது. அது அந்த வீட்டின் ராசி என்றெல்லாம் சொல்கிறார்கள்.

சிலரெல்லாம் வீடு கட்டி கோலாகலமாக கிரகப் பிரவேசம் செய்து குடியேறுகிறார்கள். ஆனால் அங்கு சென்ற பிறகு ஒவ்வொன்றாக இழக்கிறார்கள். சிலர் ஒவ்வொன்றாய் பெறுகிறார்கள். பசு என்பது விருத்தி அம்சத்திற்குரிய ஜீவராசி. அது காலடி எடுத்து வைத்தால் விருத்தி வரும். நிறைய பணம் வைத்திருப்பார்கள். ஆனால் நோயாளியாக இருப்பார்கள். பசுவை கொண்டு செல்வது சாந்தம், சாத்வீகம், செளபாக்கியம் என எல்லா அம்சங்களும் வரவேண்டும் என்பதற்காகத்தான். பணம், குணம், நிம்மதி என அனைத்து செளபாக்கியமும் பெறவேண்டும் என்ற காரணத்தினால்தான் பசுவை கொண்டு செல்கிறோம்.

இந்திய மண் என்பது பரிகார பூமி. இன்றைக்கும் சொல்கிறார்கள், தொழிலைக் கற்றுக்கொள்ள வேண்டுமா? சீனாவிற்குப் போ, படிப்பு சம்பந்தப்பட்டதற்கு அமெரிக்காவிற்குப் போ, ஆன்மீகத்தைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டுமா? இந்தியா போ என்று ஆன்மீகத்திற்கு இனம்காட்டக் கூடிய நாடாகத்தான் இந்த நாடு இருக்கிறது. அப்படிப்பட்ட இந்த நாட்டில் பசுவினுடைய பங்களிப்பு என்பது மிக அதிகம்.

எனக்குத் தெரிந்த வேற்று மத சாமியார் ஒருவர், எங்களுடைய வழக்கப்படி பசுவை வைத்தெல்லாம் செய்ய முடியாது. ஆனால் எனக்குப் பசு மீது பெரிய நம்பிக்கை உண்டு. அதை நான் யதார்த்தமாகவும் பார்த்திருக்கிறேன். ஒரு வேலையாகப் கிளம்பும் போது எதிராக பசு வந்தால் அது எவ்வளவு பெரிய வேலையாக இருந்தாலும் அன்றைக்கு அது முடிந்துவிடும். ஆனால் எங்களுடைய மதத்தவர்களிடம் சொன்னால், என்னை மதத்தை விட்டே தள்ளி வைத்துவிடுவார்கள். அதனால், இப்பொழுது கிரகப் பிரவேசம் செய்யலாம் என்று இருக்கிறேன். பசுவை வரவழைத்தால் என்னை ஒதுக்கியே வைத்துவிடுவார்கள். வேறு எதாவது செய்ய முடியுமா என்று கேட்டார்.

பசு மடத்தில் பசு 10, 15 வருடமாக படுத்திருந்த ஒரு கல், பெரிய பாறையை எப்படியாவது கேட்டு வாங்கித் தருகிறேன். அதை நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னேன். அவரும் ஒருவரிடத்தில் கேட்டு வாங்கி கொண்டு சென்று அதை வைத்துக்கொண்டு சிலவற்றை செய்து கொண்டிருக்கிறார். இப்படி பல சொல்ல முடியாத விஷயங்களெல்லாம் கூட, நம்பிக்கையே இல்லாதவர்கள் கூட சிலவற்றைப் பார்த்துவிட்டு இதுமாதிரி இருந்தால் நன்றாக இருக்கும் என்றெல்லாம் கேட்கிறார்கள்.

அதனால், பசு என்பது விருத்தி அம்சத்திற்கான அடையாளம். முழுமை, ஒரு பசு ஒரு வீட்டில் காலடி வைக்கிறதென்றால் ஒரு முழுமை பெறுகிறது. அங்கு ஒரு ஜீவ சக்தி உருவாகிறது. தானாக பசு வருவதும். வந்த இடத்தில் பசு தானாக கோமியம் இடுவது என்பதும், சாணமிடுவது என்பதும் பெரிய விஷயம். ஆனால், தற்பொழுது அதை வரவழைக்கிறோம். விருப்போ, வெறுப்போ ஏதாவது ஒரு வகையில் பசு வந்துவிட்டாவது செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் கிரகப் பிரவேசத்தில் அதுபோல செய்கிறோம்.

Friday, December 10, 2010

ஊழலில் இந்தியாவிற்கு 9வது இடம்

புதுடில்லி : காமன்வெல்த் போட்டி ஊழல், ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழல், 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு என நாடே ஊழலில் திளைத்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவில் சர்வதேச ஊழல் ஒழிப்பு தினம் கொண்டாடப்படுவது அதைவிட கேலிக்குரியது. சர்வதேச அளவில் இந்தியா ஊழலில் 9வது இடத்தைப் பிடித்திருப்பது மக்களுக்கு சற்று ஆதரவளி்க்கும் செய்தியாக உள்ளது. சர்வதேச அளவில், 91 ஆயிரம் பேரிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டதாகவும், தேசிய அளவில் ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், இந்தியாவில் 54 சதவீதம் லஞ்சம் தருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் (அடைப்புக்குறிக்குள் சதவீதம்) முதலிடத்தில் லைபீரியா (89%), அதனைத்தொடர்ந்து வரும் இடங்களில் உகாண்டா (86%), கம்போடியா (84%), சியரோ லியோன் (71%), நைஜீரியா (63%),  ஆப்கானி்ஸ்தான் (61%), போர் பதற்றமிக்க ஈராக் மற்றும் செனகல் (56%), இதற்கடுத்து இந்தியா (54%) உள்ளது.  கல்வி, நீதித்துறை, மருத்துவ சேவைகள், காவல்துறை, பத்திரப்பதிவு மற்றும் அனுமதி சேவைகள், வசதிகள், வரி, நிதி மற்றும் சுங்க துறைகளை கணக்கில் கொண்டு நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில் இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் கடந்த 3 ஆண்டுகளில் லஞ்சம் பெறுவது பெருமளவில் அதிகரித்து வருவதாகவும், இந்தியாவில் கடந்த 12 மாதங்களில் இது உச்சகட்ட அளவை எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில், இதில் இந்தியாவின் பங்கு 25 சதவீதமாகவும், ஆசிய பசிபிக் நாடுகளின் அடிப்படையில் 11 சதவீதமாக உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லஞ்சம் பெறுவதில் அரசியல்வாதிகளை மிஞ்ச யாருமில்லை என்ற கருத்து இந்திய மக்களிடையே மேலோங்கி இருப்பதாகவும், 5 துறைகளை மட்டும் கணக்கில் கொண்டதில், அரசியல்வாதிகள் 5க்கு 4.2 சதவீதமும், காவல் துறை (4.1 சதவீதம்), பார்லிமெண்ட் மற்றும் சட்டத்துறை (4 சதவீதம்), அரசு அதிகாரிகள் (3.5 சதவீதம்), தனியார் துறை, என்ஜிஓ மற்றும் நீதித்துறை (3.1 சதவீதம்), மீடியா துறை (3 சதவீதம்) , மத சார்பிலான அமைப்புகள் (2.9 சதவீதம்), ராணுவம் (2.8 சதவீதம்) என்ற அளவில், சர்வதேச அளவில் லஞ்சம்/ஊழல் நீக்கமற நிறைந்திருப்பதாக அந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற உலகின் விலையுயர்‌ந்த கோட் சூட்

புதுடில்லி பைனஸ்ட் பேப்ரிக் ஆடைகள் தயாரிப்பில் சர்வதேச அளவில் முன்னணியில் உள்ள இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் டோர்மியூலி நிறுவனம், உலகிலேயே விலையுயர்ந்த கோட் சூட்டை அறிமுகம் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது..இந்த விலையுயர்ந்த கோட் சூட் "வான்குஷ் 2" என்ற பேப்ரிக்கால் தயாரிக்கப்பட்டு உள்ளதாகவும், அனைவரையும் கவரும் வகையில் இதன் வேலைப்பாடு உள்ளதாகவும் விலையின் அடிப்படையில், இது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்க உள்ளதாக இந்த ஆடையை வடிவமைத்த ஆடை கலை நிபுணர் அலெக்சாண்டர் அமோசு தெரிவித்தார். இதுகுறித்து, நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : இந்த கோட் சூட்டின் விலை ரூ. 51 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது (அமெரிக்க டாலர்கள் மதிப்பில் 1,13,000 டாலர்கள்). இந்தியாவில் பொருளாதார ஸ்திரத்தன்மை உள்ளதாகவும், இதனை கருத்தில் கொண்டு இந்தியாவில் மார்க்கெட்டிங் துறையை அமைக்க திட்டமிட்டுள்ளது. தற்போது இந்திய சந்தையில் களமிறங்கி உள்ள தங்கள் நிறுவனம், அண்டை நாடுகளான இலங்கை, நேபாளம் உள்ளிட்ட நாடுகளில களம் காண இருப்பதாக அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, December 9, 2010

காதலுக்கு ஒரு சோதனை கதை...

ஒரு அரசன் தன் மகள் ஒரு எழ்மையானவனை காதலிக்கிறாள். என்று தெரிந்து தன் மகளிடம் பேசிபார்த்தார் ஆனால் மகள் பிடிவாதமாக"அவனைத்தான் கல்யாணம் செய்து கொள்வேன். இல்லையென்றால் நான் செத்துவிடுவேன்" என்று மிரட்டினால்...'காதல் சாகவும் துணியும்' என்று எண்ணிய அரசன் மகளின் காதலின் உண்மை தன்மையை புரியவைக்கவேண்டும். என எண்ணி தன் மகளிடம் ஒரு நிபந்தனை வைத்தார். அதாவது "உங்களை ஒருநாள் 24 மணிநேரம் முழுவதும் ஒருவர் ஒருவரை  பார்க்க முழு நிர்வாணமாக கட்டி வைத்து விடுவோம்...நீங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து  அந்த 24 மணி நேரத்தை கடந்தால் உங்கள் காதலுக்கு எனக்கு முழுசம்மதம்" என்கிறார். இதற்கு காதலர்கள் சம்மதிக்கிறார்கள். ஏனென்றால் அந்த காதல் பல கவிதைகள் எழுதி, பாடி, பேசி வாழ்ந்த காதல் அல்லவா.."இது என்ன பெரிய நிபந்தனை  நாங்க வெற்றிபெற்று காதலில் ஜெயித்து காட்டுகிறோம்" என்று காதலர்கள் சொல்ல...அரசன் இருவரையும் எதிர் எதிரே கட்டி போடா ஆணையிட்டான். இருவரையும் முழு நிர்வாணமாக ஒரு தூணில் நிற்கவைத்து கட்டி போட்டார்கள். அப்போது இருவருக்கும் கொஞ்சம் வெட்கி தலை குனிந்து ஒருவரை ஒருவர் ஓரக்கண்னால் பார்த்து தம் காதல் வெற்றியடையும் என்று எண்ணி பூரிப்பில் இருந்தார்கள். நேரம் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்துகொண்டிருந்தது. இப்போது சில நேரம் சென்றுவிட்டது. காதலனுக்கு சிறுநீர் கழிக்கணும் போல ஒரு உணர்வு ஆனால் அதை அடக்கி கொண்டான். இதேபோன்று அந்த பெண்ணுக்கும்...இருவரும் அடக்க முயற்சி செய்து பார்த்தார்கள். முடியவில்லை வெளியேற்றி விட்டார்கள். இப்போது வெளியேறிவிட்டது. அந்த இடமே நாற்றம் அடிக்க ஆரம்பித்து விட்டது. இருந்தும் முக சுளிப்புடன் சமாளித்தார்கள். ஆனால் காதலனின் வயிறு சாமாளிக்க முடியவில்லை அடுத்த மலகடனை வெளிற்ற நேரம் வந்து விட்டது. இந்த முறை அவன் முயற்சி செய்தும் பலன் இல்லை மலத்தை வெளியேற்றிவிட்டான். நாற்றம் முன்னரை விட இப்போது ரொம்ப அதிகமாகிவிட்டது. என்ன செய்வான்பாவம் அவன் முயற்சிக்கு இயற்கை உபாதைகள் கட்டுப்படவில்லை அந்தவேளையில் கட்டுபாட்டை மீறி கொண்டு வந்துவிட்டது. இப்போது காதலின் முகம் பல கோணல்களை வெளிபடுத்தி விட்டது. "என்னடா நம் காதலன் இப்படி ஒரு நிலையில் இருக்கிறானே..என்ன ஒரு அருவருப்பான நிலை" என்று மனதுக்குள் எண்ணி வெறுப்படைந்தால். இப்போது காதலர்கள் ஒரு முகத்தை ஒருவர் பார்க்கவே அருவருப்பாக இருந்த நிலை முகத்தை திருப்பி கொண்டு தங்களை விடுவித்தால் போதும் என்று எண்ணினார்கள். காதலர்களை விடுவித்தாகிவிட்டது. ஆனால் அவர்களுக்குள் முன்னே இருந்த காதல் இல்லை...

காதல் எனபது உணர்வில் ஏற்படுவதை விட கவர்சியில்தான் ஏற்படுகிறது. அது கவிதையாக, வசனமாக, வீரமாக எல்லாம்  ஒன்றன் பின் ஒன்றாக கொழுந்துவிட்டு எறியும் ஆனால் அவையெல்லாம் உடல் சூட்டின் வேகம் தணியும் வரை...நடைமுறையில் உள்ள காதலர்களை எது சொல்லியும் சமாதானபடுத்த முடியாத சூழ்நிலைதான்  இருக்கும். அவர்களே உண்மை தன்மை உணர்ந்துவிட்டால். உணர்ந்து ஒருவேளை கடந்துவிட்டால்  உண்மை காதலையும் அவர்கள் உணரலாம்...அதன்பின் அந்த காதலில் 'பிரிவு' என்றுமே இருப்பதில்லை. அதனால் உண்மை காதலை காதலியுங்கள். கவர்ச்சி ஒரு தேவைமட்டும்தான் அது என்றுமே காதலுடன் வருவதில்லை....

Wednesday, December 8, 2010

சிசேரியனுக்கு போட்டியாக ஹிப்னோபெர்த்திங்.........

இந்தியாவில் சுமார் 18- 25% பிறப்புகள் சிசேரியன் என்றாலும்,சில நாடுகளில் 50 -50% பிஸ்கேட் அளவிற்கு சிசேரியன் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.

இதை எப்படிக் குறைக்கலாம் என்று ரூம் போட்டு யோசித்துகொண்டிருக்கிறார் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குனர் டாக்டர். மார்கரெட் சேன்.

சிசேரியன் தேவைப்பாடாத சூழலில் வலுக்கட்டாயமாக செய்வது இரண்டு விதத்தில் பாதிக்கும். ஒன்று தாயின் ஆரோக்கியம் கெடும். இரண்டு பிறக்கும் பிள்ளையின் உளவியலை பாதிக்கும். அதாவது குழந்தை பிறக்கும் காலம் நெருங்கும்போது உள்ளுணர்வாக அதன் வெளியேறும் பாதையை பற்றி உணர்ந்து,நாம் இப்படி தான் வெளியே செல்லவேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும்,திடீரென பிளேடு போட்டு பாதையை மாற்றினால் வயிற்றில் இருக்கும் பச்சைபிள்ளைக் குழம்பிபோகும். நினைத்தது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கிறதே என்ற முரண்பட்ட எண்ணம் அங்கே உருவாகும். மேலும் பிரசவ காலத்தில் தாயின் வேதனைகள் ஒரு அலை இயக்கமாக குழந்தைகள் மனதில் பதியும்.மேலும் C-Section பண்ணும்போது பயன்படுத்தபடும் ஆயுதங்கள், பூ போல வர வேண்டிய குழந்தைக்கு ஒரு மிரட்சியான உணர்வை தந்து மிரட்டும். இப்போது சொல்லுங்கள் உங்கள் செல்லக் குழந்தை உளவியல் ரீதியாக பயப்பட உங்கள் தாய்மை உணர்வு அனுமதிக்குமா?

“..........................................?!!!!! ”

கவலைபடாதீர்கள் ! என்னிளம் தாய்மார்களே....உங்களை இந்த கவலையில் இருந்து மீட்க வருகிறது ஹிப்னோபர்த்திங் என்றொரு உளவியல் பயிற்சி.

அதென்ன ஹிப்னோபர்த்திங்....?.

“ஹய்யா பிள்ளை இனி நாங்க பெத்துக்க தேவலையா? ”என்று குதிக்கும் இளம் தோழிகளே ஒரு நிமிடம்...!..நாட்டுக்கு ராணியாக இருந்தாலும் வீட்டுக்கு பிள்ளையை நீங்கள்தான் பெற்றுதரவேண்டும்..! ஆனால் குறைந்த வலியோடு நிறைந்த ஜாலியான அனுபவமாக,அதாவது பிள்ளையார் கோயிலுக்கு சென்று சுண்டல் வாங்கி சாப்பிடுவது எப்படி சுலபமோ அத்தனை சுலமாக....? இல்லை ! இல்லை! சுகமாக அத்தனை சுலமாக பிள்ளை பெற்றுக்கொள்ளும் நுட்பம்தான் ஹிப்னோபர்த்திங்.

அந்த காலத்தில் கூட்டு குடும்பமாக இருக்கும். நாலைந்து பிள்ளை பெற்ற பெரிய மனுஷிகள் நாலு பேர் இருப்பார்கள்.அதைவிட பழம் தின்று கொட்டை போட்ட பாட்டி என்ற ஒரு உறவு இருக்கும்.கர்ப்பிணிகள் வீட்டில் இருக்கும்போது,இந்த சொந்த பந்தங்கள் சூழ்ந்தகொண்டு சொந்த கதை சோகக் கதையோட பத்து பிள்ளை பெத்த கதையும் சொல்லி திரியும். புதிதாக கருத்தரித்த பெண்கள் இந்த கதைகளை அதில் உள்ள சவால்களை கேட்டுகொண்டு வரும்போது உளவியல் ரீதியாக பிள்ளை பேறுக்கு தயாராகிவிடுவார்கள். அந்த பரவசமான அனுபவத்தை உணரவேண்டும் என்ற ஆவல் மேலோங்கி நிற்கும். மேலும் பிரசவங்கள் பெண்கள் பிறந்த வீட்டில் நிகழ்ந்தன.ஏனெனில் முன்பின் தெரியாத மருத்துவமனை சூழலில், பிள்ளை பெற்றுக் கொள்வதை விட வீட்டில் பெண்களின் மனோநிலை மிக இளகுவாக இருக்கும். குழந்தை எந்தவிதமான சிரமும் இன்றி வெளியேறி விடும் காலப்போக்கில் வீட்டில் நிகழும் பிரசவங்களில் சரியான அனுபவமின்றி அணுகியதால் உயிரழப்புகள் நிகழ்ந்தன. அதன் பின்பு மருத்துவமனைகளில் பெற்றுக்கொள்வதுதான் பாதுகாப்பு என்று வலியுறுத்தப்பட்டது.

கூட்டுக் குடும்ப உறவுகள் முறிந்தபின் பெரும்பாலும் தனிமைதான்.இறுக்கமான மனநிலை,மற்றும் தேவையற்ற தகவல்களை மனதில் போட்டு உளைத்துகொள்ள நிறைய சந்தர்ப்பங்கள் வர, பிள்ளைப்பேறு கடினமான ஒன்றாகிவிட்டது.

சரி இது வர்த்தக உலகம். இதில் என்ன செய்யமுடியும் !

எளிதான பிள்ளைப்பேறுக்கு யோகாவெல்லாம் இருக்கிறதே என்கிறீர்களா ? அதைவிட மிகவும் சுலபமான உளவியல் முறைதான் ஹிப்னோபர்த்திங்.

பிரசவங்களின் போது எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கெல்லாம் காரணம், பிரசவத்தை பற்றிய தேவையற்ற அச்சம்,தவறான தகவல்களை ஆழ்மனதில் பதிந்து கொள்வது. தேவையற்ற குழப்பங்கள், இதன் தொடர்ச்சியாக வரும் மன அழுத்தம்தான்.

சரி...! ஹிப்னோபர்த்திங்கில் என்ன நடைபெறுகிறது. இந்தியாவில் ஹிப்னோபர்த்திங் பயிற்சி தருவதில் முன்னனி வகிக்கும் உளவியல் சிகிச்சை நிபுணர் திருமதி.அனுராதா ஜெயச்சந்தர் ( info@basixinc.org ) என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

மனதில் இரண்டு வகை உண்டு. ஒன்று மேல் மனம், இதனை (Conscious Mind ) என்றும், இரண்டாவது ஆழ்மனம் (Sub Conscious Mind ).மேல் மனம் எப்போது கூடுதல் எச்சரிக்கை உணர்வோடு செயல் படும்.எது செய்தாலும் நூறு கேள்வி கேட்கும். இப்படி கேள்வி கேட்பதும் அதீத எச்சரிக்கை உணர்வும் சில நேரங்களில் இயல்பான பிள்ளை பேறுக்கு தடையாகிவிடும். அதாவது குழந்தை வெளியேறும் போது அதன் பாதை இலகுவாகி வழி விட வேண்டும்.மனம் இறுக்கமாகும் போது பாதை இறுக பிள்ளை பேறு சிரமமாகிவிடுகிறது.

ஏன் எனில் காலம் காலமாக பிள்ளை பேறு பற்றி கேள்விப் படும் தகவல்கள், பார்த்த அனுபவங்கள் உங்கள் மேல் மனதில் ஒரு தவறான பிம்பத்தை உண்டாக்கி அதனை ஆழ் மனதில் பதிய செய்கிறது. ஆழ்மனதில் பதியபட்ட அச்சம் தான் இத்தகைய வலிமிகு பிள்ளைப் பேற்றுக்கெல்லாம் காரணம்.

ஆனால் ஆழ்மனதின் ஒரு ஆச்சர்யதக்க இயல்பு என்னவெனில் அதில் நீங்கள் ஒரு நம்பிக்கையான பதிவை ஏற்படுத்திவிட்டீர்கள் எனில், அது கேள்வி கேட்காமல் சொன்னதை செய்யும்.
உதாரணமாக ஹிப்னோ பர்த்திங் பயிற்சியின் போது இந்த ஆழ்மனதில் குழந்தை பேறு, குழந்தை , உறவுகள் பற்றி மகிழ்ச்சியான மற்றும் மென்மையான தகவல்கள் பதியப்படும். தொடர் பயிற்சியில் வயிற்றில் உள்ள குழந்தையோடு தாய் பேசவும், அதற்கு குழந்தை ஒத்துழைப்பதையும் அனுபவப்பூர்வமாக உணரமுடியும் பிரசவகாலத்தில் அதே உணர்வோடு குழந்தையோ மானசீகமாக உரையாடி வலியின்றி,சிரமமின்றி வெளியே கொண்டு வரமுடியும்.

ஹிப்னோபர்த்திங் உளவியல்ரீதியான ஒரு அணுகுமுறை.இப்பயிற்சி பல்வேறு நிலைகளில் மனோவசிய நுட்பத்தின் அடிப்படையில் தரப்படுகிறது.

முதல் நிலை : தேவையற்ற எண்ணங்களை போக்குவது ( De Conditioning the Mind ).கருவுற்ற தம்பதிகளிடம் பேசி அவர்கள் மனதில் கர்ப்பம் பிள்ளைபேறு பற்றிய அச்சம் மற்றும் சந்தேகங்களை ஹிப்னோஸிஸ் மூலம் நீக்குவது.

இரண்டாவது நிலை : எண்ணத்தை நெறிப்படுத்துவது ( Re Conditioning the Mind ) கர்ப்பம் குறித்து ஆரோக்கியமான எண்ணங்களை மனதில் பதியசெய்வது.

மூன்றாவது நிலை : மூச்சு பயிற்சி உட்பட எளியமுறையில் உடல்வலிமை காக்கும் பயிற்சிகள்.

நான்காவது நிலை : வயிற்றில் உள்ள குழந்தையுடன் மானசிகமாக பேசுவது. நாம் புராணக்கதைகளில், அபிமன்யூ சக்கரவியூகம் பற்றி அறிந்த கதை படித்துள்ளோம் அல்லவா அதுபோலதான் இதுவும். ஆச்சர்யத்தக்க செய்தி என்னவெனில் நீங்கள் மானசீகமாக பேசத்தொடங்கிய சில நாட்களில் உங்கள் செல்லபிள்ளை நீங்கள் சொல்வதை கேட்பதை அசைவின் மூலம் உணரமுடியம். கதையல்ல நிஜம்...உங்கள் குரல் அல்லது உங்கள் கணவரின் குரலை கேட்கும்போது வயிற்றில் குழந்தையின் அசைவின் மூலம் அதன் செயல்பாட்டை உணரமுடியும்.

ஐந்தாவது நிலை : மனோவசியகலையில் சுயவசியம் என்று ஒரு நுட்பம் உள்ளது. குறிபிட்ட முறையில் உங்கள் ஆழ்மனதை அறிந்து உங்களுக்கு தேவையான கட்டளைகளை தரமுடியும். ஏறக்குறைய நாம் தியானம் செய்து சங்கல்பம் மேற்க்கொள்வது போலதான். சுயவசிய முறையில் ஒரு கற்பனை பிள்ளை பேற்றை நீங்களே பாவனையில் அனுபவிக்கவேண்டும். அவ்வாறு அணுகும்போது அது எத்தனை சுலமாக அமையவேண்டுமோ அத்தனை சுலபமான நிகழ்வாக பாவனை செய்யுங்கள். நீங்கள் தரும் கட்டளைதான் உங்கள் ஆழ்மனம் செயல்படுத்தும்.

கவலைவேண்டாம் மேற்கண்ட நான்கு பயிற்சிக்கு பின் உங்கள் மனம் நீங்கள் சொல்வதை மட்டுமே கேட்கும் என்பதால்,பாவனையான பிள்ளைபேற்றில் ஆழ்மனதில் ஆரோக்கியமான பதிவை மட்டுமே செய்யும்.

ஒரு குழந்தை வெளிவரும் போது சிரமமின்றி ஒரு இணக்கமான சூழலில் தாயின் மனம் இருக்கும்போது, குழந்தை இயல்பாகவே மனவலிமை மற்றும் ஆரோக்கியத்துடன் இருக்கும்.ஹிப்னோபர்த்திங் மூலம் பிறக்கும் குழந்தைகள், சாதாரணமான முறையில் பிறக்கும் குழந்தைகளைவிட கூடுதல் அறிவுக் கூர்மையுடன் இருக்கும்.வயிற்றில் இருக்கும்போதே தாய் தன் குழந்தையுடன் உரையாட தொடங்கிவிடுவதால்,குழந்தை பிறந்தவுடன் பெற்றோரின் சொல்லுக்கு மறுவார்த்தை பேசாமல் சமர்த்தாக இருக்கிறது என்கிறார்கள் பிள்ளைப் பெற்றவர்கள்.

மேற்கத்திய நாடுகளில் பரவி வரும் இந்த ஹிப்னோ பர்த்திங் முறை இப்போது இந்தியாவிலும் பரவி வருகிறது. மேற்கத்திய நுட்பத்துடன் இந்தியாவின் பாரம்பர்யமான யோகமுறைகளையும் இணைத்து பயிற்சி தருவதால் வெளிநாட்டினரும் இங்கே படையெடுக்கின்றனர்.

குழந்தைகள் உலகின் எதிர்கால நட்சத்திரங்கள்.குழந்தை பெற்றுக்கொள்வதில் ஒரு திட்டமிடல் வேண்டும். “SUNDAY- னா ரெண்டு” என்ற அலைபாய்ந்துவிட்டு MONDAY வில் இருந்து ஓய்ந்துவிடக்கூடாது. குடும்பவாழ்க்கையை தேர்ந்தெடுத்தபின் எதிர்கால ஆரோக்கியமான நிர்மாணிக்கும் பொறுப்பும் ஆற்றலும் இருக்கிறது என்பதை உணர்ந்து செயல்படவேண்டும்.

நீங்கள் உங்கள் வாரிசை உருவாக்கவில்லை, தேசத்தின் ஏன் உலகின் வருங்காலத் தலைவர்களை உருவாக்குகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Monday, December 6, 2010

மக்களின் ஒழுக்கத்தை சோதிக்கும் அரசு!

சென்னையில், யோகிராம் சுரத்குமார் ஜெயந்தி விழா சமீபத்தில் நடந்தது. இதில், "அமுதசுரபி' ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் பேசும் போது, "தனியே நடந்து சென்ற பிரம்மசாரி ஒருவனை, அவ்வழியே, தலையில் கள் பானை, இடுப்பில் குழந்தை, கையில் அரிவாளுடன் சென்ற வேசி இடைமறித்தாள். "உனக்கு மூன்று வாய்ப்பு தருகிறேன். ஒன்று, என் ஆசைக்கு இணங்கு அல்லது இந்த மதுவை குடி, இல்லை இந்த குழந்தையை கொல். ஏதேனும் ஒன்றை செய்தால் தான், உன்னை போக விடுவேன் என்றாள். ஆசைக்கு இணங்கினால், பிரம்மசாரியத்திற்கு இழுக்கு; குழந்தையை கொன்றால் பாவம்; மது குடித்தால் பிரச்னை இல்லை என நினைத்து, அதை குடித்தான். "போதை தலைக்கேறியது; முதலில், ஆசைக்கு தடையாக இருந்த குழந்தையை கொன்றான்; பின் வேசியை அடைந்தான். எந்த பாவமும் செய்யக்கூடாது என நினைத்த பிரம்மசாரியை, அனைத்து பாவங்களையும் செய்ய வைத்தது மது' என்றார். இதை கேட்ட ஒருவர், "மக்களோட ஒழுக்கத்தை சோதிக்க தான், நம்ம அரசே மது விற்பனை செய்யுது போல...' என, முணுமுணுத்தார்.

Saturday, December 4, 2010

கும்பாபிஷேகம் : சில தகவல்கள் ...

கும்பாபிஷேகத்தின் போது என்னென்ன சடங்குகள் நடத்தப்படும் என்பதை பார்த்திருப்பீர்கள். அவற்றிற்குரிய விளக்கத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

ஆவாஹனம்

ஆவாஹனம் என்றால் கும்பத்தில் உள்ள நீருக்குள் மூர்த்திகளை எழுந்தருள செய்தல் என்பது பொருள். கும்பத்தை முதலில் கோயிலில் உள்ள தெய்வத்திருவின் அருகில் வைத்து தர்ப்பை, மாவிலை ஆகியவற்றைக் கொண்டு மந்திரங்கள் ஓதி, பிம்பத்தில் விளங்கும் மூர்த்தியை கும்பத்தில் எழுந்தருளச் செய்வார்கள். பிறகு அந்த கும்பத்தை யாகசாலைக்கு எழுந்தருளச் செய்வார்கள். தர்ப்பையின் மூலம் கும்பத்தில் உள்ள தெய்வீக சக்தியை பிம்பத்திற்கு மீண்டும் செலுத்துவார்கள்.

கும்பம்

யாகசாலையில் மந்திரம், கிரியை, தியானம் ஆகியவற்றுடன் வளர்க்கப்பட்டு எழும் புகையுடன் வேத ஒலி, சிவாகம ஒலி, மறை ஒலி ஆகியவற்றுடன் பக்தர்களின் நல்ல எண்ணங்களும், எங்கும் நிறைந்திருக்கின்ற திருவருள் சக்தியை தூண்டிவிட்டு கும்பத்தில் விளங்கச் செய்யும். அப்போது கும்பம் தெய்வீக சக்தி பெறும். இந்த கும்பத்தை சிவனின் வடிவமாக ஆகமங்கள் கூறுகின்றன.

பாலாலயம்

கும்பத்தை கோயிலில் உள்ள தெய்வச்சிலை அருகில் வைப்பார்கள். தர்ப்பை, மாவிலை கொண்டு மந்திரங்கள் ஓதி, தெய்வ வடிவில் விளங்கும் மூர்த்தியை கும்பத்திற்கு மாற்றுவார்கள். பின்பு அதை வேறிடத்திற்கு எழுந்தருளச் செய்வார்கள். இதை  பாலாலய பிரவேசம் என்பர்.

கிரியைகள்

கும்பாபிஷேகம் நடக்கும்போது ஒரு காலத்தில் 64  கிரியைகள் செய்யப்பட்டன. காலப்போக்கில் 55 கிரியைகள் செய்யப்பட்டன. ஆனால் தற்போது எல்லா கிரியைகளும் செய்யப்படுவதில்லை. 64ல் முக்கியமான 13 கிரியைகளை மட்டும் தேர்ந்தெடுத்து கும்பாபிஷேகத்தை நடத்துகின்றனர்.

ஆசாரியவர்ணம்

கும்பாபிஷேகத்திற்கென கிடைக்கும் பொருளுக்கு பூஜை செய்ய வேண்டும். இதை தன பூஜை என்பர். பூஜை செய்த பணம் அல்லது பொருளில் ஒரு பகுதியை கட்டட வேலைக்கும், ஒரு பகுதியை நித்திய, மாதாந்திர, விசேஷ நட்சத்திர பூஜை உற்சவத்திற்கும், மூன்றாவது பாகத்தை ஆபரணங்கள் வாங்கவும் ஒதுக்குவார்கள். இப்படியே கோயில் காரியங்கள் சம்பந்தப்பட்ட 11 பாகமாக இந்த செல்வத்தை பிரிப்பார்கள். கும்பாபிஷேகத்தை நடத்தும் பிரதான ஆசாரியரை வணங்கி, இந்த செல்வத்தைக் கொண்டு குடமுழுக்கு நடத்தி தாருங்கள் என கேட்டுக்கொள்ள வேண்டும். இதையே ஆசாரியவர்ணம் என்பர்.

அனுக்ஞை

கோயில் பழுது பார்க்கப்பட்டு திருப்பணிகள் நிறைவு பெற்ற பிறகு, ஒரு நல்ல நாளில் கும்பாபிஷேக நிகழ்ச்சியை முன்னின்று நடத்தி வைப்பதற்கு தகுதியான ஒருவரை தேர்ந்தெடுப்பதையே அனுக்ஞை என்கிறார்கள். விநாயகர் சன்னதி முன்பு இந்த நிகழ்ச்சி நடக்கும். சம்பந்தப்பட்டவரே கும்பாபிஷேகத்தை நடத்தித் தர அனுமதி தரவேண்டும் என விநாயகரிடம் வேண்டி கேட்டுக்கொள்வதே அனுக்ஞை ஆகும்.

பிரவேசபலி

கும்பாபிஷேகம் செய்யும் இடத்திலிருந்து எட்டு திசைகளிலும் வசிக்கின்ற ராட்சதர் முதலான தேவதைகளுக்கு உணவு கொடுத்து எழுப்பி, அவர்களை கடல், மலை, காடு, ஆறு, மயானம் ஆகிய இடங்களில் சென்று இருங்கள் என திருப்திப்படுத்தி வழி அனுப்புவதே பிரவேச பலி ஆகும். கும்பாபிஷேகங்களில் மட்டுமின்றி, கோயில்களில் திருவிழா நடக்கும்போதுகூட இதை செய்ய வேண்டுமென்று ஆகமங்கள் கூறுகின்றன.

வாஸ்துசாந்தி

ஆகமங்களிலும், சிவமகா புராணத்திலும் வாஸ்து பற்றி கூறப்பட்டுள்ளது. அந்தகாசுரன் என்பவனை கொல்வதற்காக தேவர்கள் சிவபெருமானிடம் கோரிக்கை வைத்தனர். சிவபெருமான் தனது வியர்வைத் துளியிலிருந்து ஒரு பூதத்தை உருவாக்கி அந்தகாசுரனை வதைத்தார். அந்த பூதம் சிவனிடம் பல வரங்கள் பெற்று உலகத்தை வருத்தியது. சிவபெருமான் பூதத்தை அடக்க அதிபவன் என்பவரை சிருஷ்டித்து அனுப்பினார். அதிபவன் அந்த பூதத்தின் உடலின்மீது 53 தேவதைகளை வசிக்க செய்து, மாயக்கயிறுகளால் கட்டினார். இதனால் இவர் வாஸ்துபுருஷன் என பெயர் பெற்றார். வாஸ்து புருஷனால் குடமுழுக்கு கிரியைக்கு இடையூறு நேராதபடி 53 தேவதைகளுக்கும் பூஜை, பலி, ஹோமம் ஆகியவற்றால் சாந்தி செய்ய வேண்டும். இதுவே வாஸ்துசாந்தி ஆகும்.

ரக்ஷா பந்தன்

காப்பு கட்டுதல் என இதற்கு பொருள். சிவாச்சாரியார்கள் நாகராஜனுக்கு பூஜை செய்து, மந்திரித்த மஞ்சள்கயிறை வலது மணிக்கட்டில் கட்டிக்கொள்வார்கள். கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ளும் சிவாச்சாரியார்களின் குடும்பத்தில் எதிர்பாராதவகையில் ஏதாவது தீட்டு ஏற்பட்டால் காப்பு அவிழ்க்கப்படும்வரை அந்த தீட்டு அவர்களை பாதிக்காது.

கடஸ்தாபனம்

கும்பாபிஷேகத்தில் மிக முக்கியமானது கடஸ்தாபனம்.  கலசம் நிறுவுதல் என்பது இதன் பொருள். தங்கம், வெள்ளி, தாமிரம், மண் ஆகிய ஏதாவது ஒன்றில் கும்பங்கள் செய்யப்படும். கும்பங்களை இப்படித்தான் அமைக்க வேண்டும் என்ற வரையறைகள் உள்ளன. இவ்வாறு அமைக்கப்பட்ட கும்பங்களை குறைகள் இல்லாமல் மந்திரித்து, அக்னியில் காட்டுவார்கள். சிவப்பு மண்ணை கும்பத்தின் மீது பூசி, நூல் சுற்றி ஆற்றுநீர் அல்லது ஊற்று நீரால் நிரப்புவார்கள். கும்பத்தின் மேல் வாய் பகுதியில் மாவிலைகளை செருகி, தேங்காய் வைப்பார்கள். கும்பத்திற்குள் நவரத்தினம், தங்கம், வெள்ளி, நவதானியம் ஆகியவற்றை பரப்புவார்கள். எந்த மூர்த்திக்கு குடமுழுக்கு நடக்கிறதோ அந்த மூர்த்தியின் உடலாக அந்த கும்பம் கருதப்படும்.

அஷ்டபந்தனம்

கும்பாபிஷேகத்தை அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் என சொல்வதுண்டு. பீடத்தின்மீது வைக்கப்படும் தெய்வ திருவுருவங்கள் அசையாமல் உறுதியுடன் நிலைத்து நிற்க, கொம்பரக்கு, சுக்கான்தான், குங்குலியம், கற்காவி, செம்பஞ்சு, ஜாதிலிங்கம், தேன்மெழுகு, எருமையின் வெண்ணெய் ஆகிய எட்டுவகை மருந்துகளை கலந்து சார்த்துவார்கள். அஷ்டம் என்றால் எட்டு என பொருள். இந்த எட்டுவகை மருந்துகளை சார்த்துவதற்கே அஷ்ட பந்தனம் என பெயர்.

மிகுத்சம்கிரஹணம்

இதற்கு மண் எடுத்தல் என பொருள். கும்பாபிஷேகத்தின்போது அங்குரார்ப்பணம் எனப்படும் முளையிடுதல் நிகழ்ச்சி நடக்கும். மண்ணைத்தோண்டி பாலிகைகளில் இட்டு, நவதானியங்களை தெளித்து, முளைப்பாலிகை அமைப்பார்கள். இதுவே மிகுத்சம் கிரகஹணம் எனப்படும்.

Friday, December 3, 2010

நிகழ்கால பீனிக்சாக உருவெடுத்த விக்கிலீக்ஸ்

ஸ்டாக்ஹோம் : அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் இரகசிய பரிமாற்றங்களை வெளியிட்டுவரும் விக்கிலீக்ஸின் இணையத் தள முகவரி ‘கொல்லப்பட்ட’ 6 மணி நேரத்தில் புதிய இணைய முகவரியுடன் அது உயிர்த்தெழுந்துள்ளது. விக்கிலீக்ஸ் இணையத் தளத்தின் சர்வர்களை ‘கொல்ல’ முயன்று அது முடியாமல் போன நிலையில், அதன் இணைய முகவரியான wikileaks.org கொல்லப்பட்டது. இப்படியெல்லாம் தாக்குதல் வரலாம் என்பதை எதிர்பார்த்து காத்திருந்ததுபோல், ஒரு புதிய இணைய முகவரியுடன் wikileaks.ch என்ற பெயரில் 6 மணி நேரத்தில் அந்த இணையத் தளம் மீண்டும் உயிர்பெற்றுள்ளது. விக்கிலீக்ஸ் இணையத் தளத்தின் நிறுவனர் ஜூலியன் அசாங்காவை சர்வதேச போலீஸ் சிவப்பு அறிக்கை வெளியிட்டுத் தேடிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.க்யூ

' ஐ.க்யூ ' வளர்க்கச் சில ஐடியாக்கள்...
* நிறைய வாசியுங்கள்.
* இளமையோடு இருக்க வேண்டும் என்றால், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் ஆர்வமாக இருங்கள். காரணம், வயதான நரி புதிய தந்திரங்களைக் கற்றுக்கொள்ளாது.
* நீங்கள் வலது கைப் பழக்கம் உடையவராக இருந்தால், இடது கையாலும்.... இடது கைப் பழக்கம் உடையவராக இருந்தால் வலது கையாலும் எழுதிப் பழகுங்கள். இதன் மூலம் மூளையின் வேகமும் கவனமும் அதிகரிக்கும். தர்க்க அறிவை வளர்த்துக்கொள்வதற்கு இது ஒரு சின்ன எக்சர்சைஸ் !
* குறுக்கெழுத்துப் புதிர்கள், சுடோகு புதிர்கள் ஆகியவற்றுக்கு விடை காண முயலுங்கள்.
* ஒரு பிரச்சனைக்குத் தீர்வு காணாமல், இன்னொன்றுக்கு தாவிப் பழகாதீர்கள் !

நோபல் பரிசுக்கு தகுதியானவர் கருணாநிதி : ஜெ.,

உண்மையைச் சொல்லப் போனால் கோயில் பிரசாதத்தை சாப்பிட்டு வளர்ந்தவர் தான் கருணாநிதி, அவர் கூட்டங்களில் பேச ஆரம்பித்த போது அவருக்குக் கிடைத்த சம்பளம் ஒரு சிங்கிள் டீயும், இரண்டு வடையும் தான் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கருணாநிதியிடம் கணக்கு கேட்டு அதைத் தராததன் காரணமாக எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட இயக்கம் தான் அதிமுக. அதை மறந்து, 'கணக்கு காட்டுகிறேன்; கண்ணுடையோர் காண' என்ற தலைப்பிலே கருணாநிதி தன்னுடைய கணக்கைக் காட்டியிருப்பது நகைப்புக்குரியதாக இருக்கிறது. இதை கடந்த நூற்றாண்டு மற்றும் இந்த நூற்றாண்டின் இணையற்ற ஜோக் என்று சொல்லலாம்.

இப்படிப்பட்ட சிறந்த நகைச்சுவைக்காக மாநில அளவிலோ, தேசிய அளவிலோ, ஏன் உலக அளவிலோ கூட கருணாநிதிக்கு விருது கிடைத்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

திருவாரூரில் இருந்து திருட்டு ரயில் மூலம் சென்னைக்கு வந்ததாக கருணாநிதியே பல முறை பேசி இருக்கிறார். இது குறித்து 'வனவாசம்' புத்தகத்தின் முதல் பதிப்பில் கருணாநிதியின் நெருங்கிய நண்பராக இருந்த கவியரசர் கண்ணதாசன் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார். உண்மையைச் சொல்லப் போனால் கோயில் பிரசாதத்தை சாப்பிட்டு வளர்ந்தவர் கருணாநிதி.

இவர் கூட்டங்களில் பேச ஆரம்பித்த போது இவருக்குக் கிடைத்த சம்பளம் ஒரு சிங்கிள் டீயும், இரண்டு வடையும் தான். இப்படிப்பட்ட கருணாநிதி இப்பொழுது திடீரென்று 'கணக்கு காட்டுகிறேன்' என்ற தலைப்பில், தன்னுடைய குடும்பம் ஓரளவு வசதியுள்ள குடும்பம் என்று ஒரு புதிய தகவலை தற்போது வெளியிட்டு இருக்கிறார்.

16.1.1946 அன்று கமலாம்பிகா கூட்டுறவு நகர வங்கியில் பங்காளியாக சேர விண்ணப்பித்த போது, அந்த விண்ணப்பப் படிவத்தில் தனக்கு நஞ்சை, புஞ்சை நிலங்கள் ஏதுமில்லை என்றும், வீட்டு மனை ஏதுமில்லை என்றும் தெரிவித்து, தன் வசம் 'நகை, பாத்திரம் வகையறா சுமார் ரூ. 1,000' இருக்கிறது என்று கருணாநிதியே கைப்பட எழுதியிருக்கிறார்.

கருணாநிதியின் தந்தை முத்துவேலர் வசம் என்ன இருந்தது என்பதெல்லாம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த கூட்டுறவு மாத இதழில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

கருணாநிதியும், கவியரசர் கண்ணதாசனும் சென்னையில் இருந்து சேலத்திற்கு ரயிலில் பயணம் செய்த போது, உணவு வாங்கி சாப்பிட பணமில்லாத நிலை இருந்த போது, 'தனக்கு பசி தாங்கவில்லை' என்று கவியரசர் கண்ணதாசன் கருணாநிதியிடம் சொன்னதாகவும், அதற்கு பதில் அளித்த கருணாநிதி, அருகில் இருந்த பழக் கூடையை காட்டி 'திருடலாமா?' என்று கேட்டதாகவும், கவியரசர் கண்ணதாசன் தன்னுடைய 'வனவாசம்' புத்தகத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.

கருணாநிதி தன்னுடைய அறிக்கையில் 1949ம் ஆண்டே மாத ஊதியமாக 500 ரூபாய் சம்பாதித்ததாக கூறியிருக்கிறார். 'மணமகள்' திரைப்படத்திற்கு கதை வசனம் எழுதி 10,000 ரூபாய் பெற்றதாகவும், 'இருவர் உள்ளம்' திரைப்படத்திற்காக 20,000 ரூபாயை பெற்றதாகவும் கருணாநிதி கூறி இருக்கிறார். அப்படி என்றால் கருணாநிதி எந்த ஆண்டிலிருந்து வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்து கொண்டு வருகிறார்? முதன் முதலில் வருமான வரி தாக்கல் செய்த போது அவருடைய ஆண்டு வருமானம் என்ன? அப்போது எவ்வளவு வருமான வரி கட்டினார்? ஆண்டுதோறும் செலுத்திய வருமான வரி எவ்வளவு? என்பதை முதலில் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதல்வர்களுடைய வீடுகளை விட வசதி குறைவான வீட்டில் எளிமையாக வாழ்ந்து வருவதாகவும், அரசு நிலத்தை ஆக்கிரமிக்கவில்லை என்றும் கருணாநிதி தன்னுடைய அறிக்கையில் கூறியிருக்கிறார்.

கருணாநிதிக்கு கோபாலபுரத்திலே ஒரு வீடு, சி.ஐ.டி. காலனியில் ஒரு பங்களா; கருணாநிதியின் மகன் மு.க. ஸ்டாலினுக்கு வேளச்சேரியில் ஒரு பங்களா; சென்னை போட் கிளப்பில் ஒரு மாளிகை; பேரன் கலாநிதி மாறனுக்கு சென்னை போட் கிளப்பில் பிரம்மாண்டமான மாளிகை, பேரன் தயாநிதி மாறனுக்கு போட் கிளப்பில் மிகப் பெரிய பங்களா, மகள் செல்விக்கு பெங்களூரில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் மாளிகைகள், பண்ணை வீடுகள்; தென் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் 25க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி சேனல்கள், நாளிதழ்கள், வார இதழ்கள், பேரன் பெயரில் ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம், சன் ஏர்லைன்ஸ்,

மு.க. அழகிரிக்கு மதுரையில் பல ஏக்கர் நிலங்கள், பண்ணை வீடுகள்; வர்த்தக பலமாடி கட்டடங்கள்; பொறியியல் கல்லூரி; மு.க. தமிழரசு, மு.க. முத்து, கனிமொழி என அனைவரும் மாடமாளிகைகளில் வாழ்ந்து கொண்டு மக்கள் சொத்தை கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றனர்.

பேரன்கள், பேத்திகள் உட்பட, கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தனித் தனி ஆடம்பர மாளிகைகளும் ஏராளமான அசையா சொத்துக்களும் உள்ளன.

கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து சினிமாத் துறையையே கபளீகரம் செய்துவிட்டனர். தன்னுடைய கோபாலபுரத்தின் பின் பகுதியில் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 700 சதுர அடி நிலத்தை கருணாநிதி ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்.

டாடா நிறுவனம் கருணாநிதியின் துணைவிக்கு ரூ. 300 கோடி மதிப்பில் மிகப் பெரிய மாளிகை கட்டித் தர இருப்பதாக நீரா ராடியா- ராசாத்தி உரையாடல்களில் இருந்து தெரிய வருகிறது.

செல்வி மற்றும் ஸ்டாலின் மூலமாக ரூ. 600 கோடியை தயாளு பெற்றுக் கொண்டுதான் தயாநிதி மாறனுக்கு மந்திரி பதவியை கொடுத்ததாக அதே நீரா ராடியா உரையாடல்கள் தெரிவிக்கின்றன.

உண்மை நிலை இவ்வாறிருக்க, கருணாநிதி தன்னை யோக்கியர் போல சித்தரித்துக் கொண்டிருப்பது எள்ளி நகையாடத்தக்கது.

கருணாநிதி தன்னுடைய அறிக்கையில், 2005ம் ஆண்டு அக்டோபர் மாதம், சன் தொலைக்காட்சி நிறுவனத்தின் சார்பில் ரூ. 100 கோடி தரப்பட்டதாகவும், அதில் ரூ. 22 கோடி அளவிற்கு வருமான வரி கட்டியதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார். பத்திரிகை எரிப்பு சம்பவத்திற்கு பிறகு, 200ம் ஆண்டு இறுதியில், 'முழு' தொகை கருணாநிதிக்கு தரப்பட்டதாக பத்திரிகையில் செய்தி வெளியானது.

அதனையடுத்து 'கண்கள் பனித்தன, இதயம் இனித்தது' என்று கருணாநிதியும் அறிவித்தார். அதற்கு வருமான வரி கட்டியதாக கருணாநிதி அறிவிக்கவில்லையே?.

இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி கருணாநிதியின் ஆட்சி. வீராணம் ஊழல், பூச்சிகொல்லி மருந்து ஊழல், மஸ்டர் ரோல் ஊழல், மணல் கொள்ளை, ரேஷன் பொருட்கள் கடத்தல், கள்ள லாட்டரி சீட்டு விற்பனை என அனைத்திற்கும் மூலக் காரணமானவர் கருணாநிதி. விஞ்ஞானப் பூர்வமாக ஊழல் செய்வதில் வல்லவர் என்று சர்க்காரியா கமிஷனிடம் சான்றிதழ் பெற்றவர்.

இப்படி இருக்கும் கருணாநிதி, லஞ்சம், ஊழல் ஆகியவற்றைப் பொறுத்தவரை தான் ஒரு நெருப்பு என்று கூறியிருப்பது நகைப்புக்குரியதாக உள்ளது. பஞ்சுப் பொதியிலே தீப்பொறி பட்டால் எப்படி தீப்பிடித்துக் கொள்ளுமோ அது போல, தன்னிடம் உள்ள ஊழலை உலகம் முழுவதும் பரப்புவதில் தான் ஒரு நெருப்பு என்ற அர்த்தத்தில் கூறி இருக்கிறார் போலும்!.

பொருளாதாரம், விஞ்ஞானம், இலக்கியம், சமாதானம் போன்றவற்றிற்காக நோபல் பரிசு கொடுக்கப்படுகிறது. சிறந்த நகைச்சுவைக்கு நோபல் பரிசு கொடுக்கப்பட்டால், அந்தப் பரிசுக்குத் தகுதியானவர் கருணாநிதி தான். அந்த அளவுக்கு 'கணக்கு காட்டுகிறேன்; கண்ணுடையோர் காண' என்ற தலைப்பில் வெளி வந்துள்ள கருணாநிதியின் அறிக்கையை படித்து தமிழக மக்கள் விலா எலும்பு வலிக்க சிரித்து உடல் வலி வந்தது தான் மிச்சம்!.

தனது 60 ஆண்டுகால பொது வாழ்வில், ஏழை மக்களை ஏமாற்றி, 'தன்' குடும்ப மக்களை ஏற்றிவிட்டிருக்கும் கருணாநிதி, ஆட்சி முடியும் தருவாயில் பொய்க் கணக்கை காட்டி மீண்டும் மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்.

கருணாநிதியின் பொய்க் கணக்கிற்கு பலமான பதிலடி கொடுக்க மக்கள் தயாராகிவிட்டார்கள். இவ்வாறு தனது அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

1994ல் 175...............இன்று 1 லட்சம்!!

புதுடில்லி : அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் கன்சல்டிங் சேவை வழங்கும் முன்னணி நிறுவனமான காக்னிஜண்ட், 1 லட்சம் ஊழியர்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளது. இதன்மூலம், இந்த சேவை வழங்கும் மற்ற ஜாம்பவான் நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ் மற்றும் விப்‌ரோ நிறுவனங்களுடன் கைகோர்க்கும் நி‌லை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக, காக்னிஜண்ட் நிறுவன தலைவரும் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான பிரான்சிஸ்கோ டி ஷோசா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : 1994ம் ஆண்டு 175 ஊழியர்களுடன் துவங்கப்பட்ட தங்கள் நிறுவனம், 16 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி பெற்று, தற்போது 1 லட்சம் ஊழியர்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளதாகவும், இது தங்கள் நிறுவனத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்றும், இந்த 1 லட்சம் ஊழியர்களில் இந்தியாவின் பங்கு 75 சதவீதம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மைல்கல் வெற்றியைத் தொடர்ந்து, (அடைப்புக்குறிக்குள் ஊழியர்களின் எண்ணிக்கை) மற்ற முன்னணி நிறுவனங்களான டிசிஎஸ் (1.74 லட்சம்), இன்போசிஸ் (1.22 லட்சம்) மற்றும் விப்ரோ (1.15 லட்சம்), தங்கள் நிறுவனம் நான்காவது இடத்தை காக்னிஜண்ட் ( 1 லட்சம்) பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, December 1, 2010

எல்லாப் புகழும் தமிழகத்துக்கே!!!!

மற்ற மாநிலங்களை விட, தொழில் துறையில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. தமிழகத்தில் தான், மின் கட்டணம், பஸ் கட்டணம் குறைவு. மத்திய அரசுக்கு நிகரான சம்பளத்தை உயர்த்தும் முதல் மாநிலம் தமிழகம். மற்ற ஊழல்களை விட, அதாவது மாட்டுத் தீவன ஊழல், 1,000 கோடி ரூபாய் (பீகார்), நில ஊழல், 400 கோடி (மகாராஷ்டிரா), மருத்துவ உபகரண ஊழல், 500 கோடி, போபர்ஸ் ஊழல், 65 கோடி, சர்க்கரை ஊழல், 650 கோடி ரூபாயை விட, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவால், தமிழகம் ஊழலிலும் முதலிடம் பிடித்துள்ளது. சுதந்திரம் பெற்ற பின், தமிழகத்தில் காங்கிரசை ஓரம் கட்டிவிட்டு, கழக ஆட்சி வந்தது. அன்று முதல் முதலாக, விஞ்ஞானப்பூர்வ ஊழலை செய்தது
ம், "கழகம்' தான். அதிலும், தமிழகம் தான் முதல் இடம். ராஜா, ஸ்பெக்ட்ரம் ஊழல் செய்த பின்தான், "சொல்லாததையும் செய்வோம்' என்பதின் அர்த்தம் புரிகிறது. இப்போது விலைவாசியெல்லாம் ஏறிவிட்டது. எனவே, வரும் தேர்தலில், ஓட்டுக்கு ஐந்தாயிரம் ரூபாய் என்ற கணக்கில் தி.மு.க., தரும். அதையும் நிறைவேற்றி, தமிழகம் முதலிடம் என்பதை தக்க வைத்துக்கொள்ள வேண்டுகிறேன்.

எஸ்டிடிக்கு "கதம் கதம்" : ‌அசத்தியது பிஎஸ்என்எல்

புதுடில்லி: அனைத்து மாநிலங்களுக்குகிடையேயான எஸ்டிடி அழைப்பு கட்டணத்தை பிஎஸ்.என்.எல்., நிறுவனம் குறைத்துள்ளது.இந்த  கட்டணம குறைப்பு  தரைவழி தொலைபேசிக்கு மட்டுமே பொருந்தும். நாடு முழுவதும்பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு  32 மில்லியன் சந்தாதாரர்கள் உள்ளனர். இவற்றில் 26.2 மில்லியன் மக்கள் லேண்ட்லைன் எனப்படும் தரைவழி தொலைபேசியையும்,5.8 மில்லியன் மக்கள் வில் என்றழைக்கப்படும் வசதியை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது 2 நிமிடங்கள் வரை பயன்படுத்தும் எஸ்டிடி கட்டணம் 80 பைசா என  வசூலிக்கப்படுகிறது. இனிமேல் இவை 3 நிமிடங்களுக்கு 80 பைசா என வசூலிக்கப்பட உள்ளது. இந்த கட்டணம்  அனைத்து பிசிஓக்களுக்கும் பொருந்தும். முதல் 300 கால்களுக்கு , 3 நிமிட கால அளவிற்கு 80பைசா என்ற கட்டணத்திலும், அதற்குமேல் பயன்படுத்ததும் போது அதிகபட்சமாக ஒரு ரூபாய் இருபது பைசா என்ற விகிதத்தில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம்  எஸ்டிடி கட்டணம்  நீக்கப்பட்டு உள்ளூர் அழைப்பு கட்டணமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tuesday, November 30, 2010

தெருவிளக்குகளாகும் மரங்கள்.......

மின் சக்தியில்லாமல் தானாக ஒளிரக்கூடிய மரங்களை தாம் உருவாக்கிவருவதாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எதிர்காலத்தில் இம்மரங்களை தெருவிளக்குகளுக்கு பதிலாக உபயோகப்படுத்தமுடியும்.

இதற்காக உடலில் இருந்து வெளிச்சத்தை வெளிப்படுத்தும் சிலவகையான பூச்சிகள் மற்றும் விலங்குகளின் மரபணுக்களில் சோதனை நடத்தப்பட்டுவருகின்றது. பயோலுமினசென்ஸ் எனப்படுவது (Bioluminescence) உடலில் இருந்து வெளிச்சத்தை வெளிப்படுத்தும் ஆற்றலாகும்.

இவ்வாற்றலானது குறிப்பிட்ட சில ஜீவராசிகளுக்கே சாத்தியமாக உள்ளது.இவற்றின் மரபணுக்களும் இதற்கான ஒரு காரணமாகும்.

எனவே மின்மினிப்பூச்சிகள் மற்றும் சில மின்னும் கடல்வாழ் பக்டீரியாக்களின் மரபணுக்களைக் கொண்டும் ஆராய்ச்சி நடத்தப்பட்டுள்ளது.இவை வெற்றிகரமான முடிவுகளைத் தந்துள்ளன.

இவை மரங்களுக்கு மட்டுமன்றி ஒளிரும் பல்வேறு பல்வேறு பொருட்களுக்கும் பயன்படுத்த முடியுமெனவும் ஆராய்ச்சியாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

Saturday, November 27, 2010

Kamalhassan : விளம்பரப் படங்களில் நடிக்கிறார் கமல்ஹாசன்

ஒன்று இரண்டு படங்களில் தலை காட்டிய ஹீரோக்கள் கூட இன்று விளம்பரப் படவுலகில் சிறந்த வியாபாரிகளாக வலம் வந்துகொண்டிருக்க, ஐம்பது வருடத்தை கடந்து தமிழ் சினிமாவில் சாம்ராஜ்யம் நடத்திக்கொண்டிருக்கும் கமல்ஹாசன், ஏகப்பட்ட வாய்ப்புகள் வந்த போதிலும் விளம்பரப் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். தற்போது ஒரு நல்ல செயலுக்காக விளம்பரப் படங்களில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் உலகநாயகன். ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுகளின் கல்வி, ஊட்டச்சத்தான உணவு மற்றும் மருத்துவ சிகிச்சைகள் போன்றவற்றுக்கு நிதி திறட்டும் நோக்கத்தோடு தமிழக எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் சார்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. "பெற்றால்தான் பிள்ளையா" என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், "எச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உரிமைகளை பாதுகாப்பது நாம் ஒவ்வொருவரின் கடமை. இதை நான் செய்வதற்காக என்னை யாரும் பாராட்ட வேண்டாம். கடமையை செய்ய எதற்கு பாராட்டு. இது போல செய்ய இன்னும் நிறைய இருக்கிறது. இதுபோன்ற குழந்தைகளுக்காக உதவிகளை செய்ய வேண்டும் என்பதற்காக நான் ஒரு முடிவு எடுத்திருக்கிறேன். 25 வருடமாக நான் செய்யாத ஒரு விஷயத்தை செய்யப்போகிறேன். நான் வேண்டாம் என்று ஒதுக்கி வந்த ஒன்று. விளம்பரப் படங்களில் நடிப்பதை இந்த குழந்தைகளுக்காக செய்யப்போகிறேன். நான் ஒரு பொருளை விற்பனை செய்ய வியாபாரி இல்லை. நான் நடிகன் அதனால் என்னுடைய நடிப்பு வேலையை செய்துவந்தேன். இப்போது எச்.ஐ.வி. குழந்தைகளின் நலனுக்காக விளம்பரப் படங்களில் நடிக்க முடிவெடுத்திருக்கிறேன். விளம்பரப் படத்தில் நடிப்பதால் எனக்கு கொடுக்கப்படும் சம்பளத்தை வரி இல்லாமல் அப்படியே எச்.ஐ.வி. குழந்தைகளின் நலனுக்கு கொடுக்க எந்த நிறுவனம் தயாராக இருக்கிறதோ அந்த நிறுவனத்தின் விளம்பர படத்தில் நான் நடிக்க தயார். அதுபோல அரசாங்கத்திடமும் ஒரு கோரிக்கை வைக்கிறேன். இதுபோன்ற குழந்தைகளுகளூக்கு என்னை போன்றவர்கள் செய்வதை விட இரண்டு மடங்கு அதிகமாக அரசாங்கம் செய்ய வேண்டும்" என்றார். அரசாங்கம் இரண்டு மடங்கு உதவிகளை செய்ய வேண்டும் என்று சொல்கிறீர்களே, நீங்கள் இந்த குழந்தைகளுக்காக ஏதாவது குறிப்பிட்ட தொகை நிர்ணயித்திருக்கிறீர்களா? என்ற கேள்விக்கு, "என்னை வைத்து விளம்பரப் படம் எடுக்கும் நிறுவனங்கள் எனக்கு எவ்வளவு சம்பளம் தருகிறார்களோ அதை அப்படியே நான் கொடுத்து விடுவேன். அதில் ஒரு பைசாவை கூட நான் எடுத்துக்கொள்ள மாட்டேன். அது ஐந்து கோடியாக இருந்தாலும் சரி. அப்போது அரசாங்கம் பத்து கோடியாக இவர்களுக்கு கொடுக்க வேண்டும்" என்று பதில் அளித்த கமல்ஹாசன், "எச்.ஐ.வி யால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் இருவரை என்னிடம் அழைத்து வந்தார்கள் அவர்களை பார்த்தபோது நமக்கு இன்னும் கடமைகள் இருக்கிறது என்று எனக்கு தோன்றியது. அந்த கடமை பத்திரிகையாளர்களாகிய உங்களுக்கும் இருக்கிறது. அதனால்தான் நாம் இணைந்து செயல்படுவோம் என்றேன்" என்றார்.

Twitter : புது அவதாரம்

டுவிட்டர் சோஷியல் நெட்வொர்க் தளமானது வெகு விரைவில் செய்திச் சேவையினை ஆரம்பிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த இணையத்தளத்தில் பல லட்சக்கணக்கான குறுந்தகவல்கள் தினமும் பரிமாறப்படுவதால் செய்திகளை உடனுக்குடன் வழங்குவதில் சிரமமிருக்காது எனத் தெரிவிக்கப்படுகிறது. டுவிட்டர் இணையத்தள ஸ்தாபகர்களில் ஒருவரான பிஸ் ஸ்டோன் இது குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். “டுவிட்டர் செய்திச் சேவையினூடாக உலகில் எந்தப் பாகத்திலும் நடக்கும் செய்திகளையும் நிகழ்வுகளையும் உடனுக்குடன் வழங்க முடியும் என எதிர்பார்க்கிறோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார். டுவிட்டர் இணையத்தளமானது செய்திச் சேவை தொடர்பாகவும் தனது பாவனையாளர்களின் பங்களிப்பு தொடர்பாகவும் தற்போது பரீட்சார்த்தமாக ஆராய்ந்துவருகிறது. சுமார் 190 மில்லியன் எண்ணிக்கையிலான இணையப்பாவனையாளர்கள் டுவிட்டர் கணக்கினை தன்னகத்தே கொண்டுள்ளனர். 2010 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி செக்கன் ஒன்றுக்கு சராசரியாக 750 டுவிட்டர் தகவல்கள் தரவேற்றப்படுகின்றன. இவ்வருட ஜூன் மாத புள்ளிவிபரங்களின் அடிப்படையில் நாளொன்றில் 65 மில்லியன் டுவிட்டர் தகவல்கள் பதிவேற்றப்படுகின்றன. இதனால் முன்னிலையிலுள்ள சமூக வலைப்பின்னல் இணையத்தளங்களில் பேசப்படும் ஒன்றாக டுவிட்டர் மாறிவருகிறது. இந்நிலையில் டுவிட்டர் இணையத்தளமானது செய்திச்சேவையை ஆரம்பிக்குமானால் ஏனைய தளங்களைவிட மக்கள் மத்தியில் அதிகமாகப் பேசப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும் பிந்திக் கிடைத்த தகவலின்படி, டுவிட்டர் இணையத்தளத்தின் தொடர்பாடல் பிரிவுத் தலைவர் மாறுபட்ட கருத்தொன்றை தெரிவித்துள்ளார். டுவிட்டர் சமூக வலைப்பின்னல் இணையத்தளத்துக்கு செய்திச்சேவை செய்யவேண்டிய தேவை தற்போது இல்லை என்றும் அது சரியான தீர்வாக அமையாதென்றும் குறிப்பிட்டுள்ளார். இருவரினதும் மாறுபட்ட கருத்துக்கள், தலைமையின் போட்டித் தன்மையை வெளிப்படுத்துவதாக இணையப் பாவனையாளர்கள் கூறியுள்ளதுடன் இந்த விடயம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Friday, November 26, 2010

"தண்ணீ"ரில் தத்தளித்த மதுரை.......








1 மாத மின்கட்டணம் 70 லட்சம் : இந்தியாவில் தான் இந்த நிலை!

மும்பை : இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான முகேஷ் அம்பானி சமீபத்தில் புதிதாக குடியேறிய அரண்மனை வீட்டின் முதல் மாத மின் கட்டணம் ரூ.70 லட்சம் வந்துள்ளதாம். மும்பையில், 27 மாடிகளுடன் கூடிய வீட்டைக் கட்டியுள்ளார் முகேஷ் அம்பானி. உலகிலேயே மிகவும் ஆடம்பரமான வீடாக இது வர்ணிக்கப்படுகிறது. பெரும் பணக்காரரான பில் கேட்ஸுக்குக் கூட இப்படி ஒரு வீடு இல்லையாம். இந்த வீட்டில் முகேஷ் அம்பானி, அவரது மனைவி நீத்தா மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார் முகேஷ். புது வீட்டுக்குப் போய் ஒரு மாதம்தான் ஆகிறது. இந்த மாபெரும் அரண்மனை வீட்டுக்கு சமீபத்தில்தான் குடி புகுந்தார் முகேஷ் அம்பானி. இப்போது இந்த வீட்டின் முதல் மாத மின்சார உபயோகக் கட்டணமாக ரூ.70 லட்சத்து 69 ஆயிரத்து 488 வந்துள்ளதாம். ஒரு வீட்டுக்கு இவ்வளவு அதிக கட்டணம் வந்திருப்பது மும்பை வரலாற்றில் இதுவே முதல் முறையாம். ஒரு மாதத்தில் மட்டும் 6 லட்சத்து 37 ஆயிரத்து 240 யூனிட் மின்சாரத்தை உபயோகப்படுத்தியுள்ளனர். ஒரு சாதாரண இந்தியக் குடும்பத்தில் அனைத்து மின்சார சாதனப் பொருட்களின் பயன்பாட்டையும் கூட்டிப் பார்த்தால் சராசரியாக 300 யூனிட் வரை பயன்படுத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் என்ன விசேஷம் என்றால், கட்டணத்தை சரியாக கட்டியதால் முகேஷ் அம்பானிக்கு பில்லில், ரூ. 48 ஆயிரத்து 354 தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாம். இதைக் கழித்து விட்டுத்தான் இந்த 70 லட்சம் ரூபாய் கட்டணம் கட்டியுள்ளாராம் முகேஷ் அம்பானி. முகேஷ் அம்பானி கட்டியுள்ள இந்த ஒரு மாத பில் கட்டணம், 7000 வீடுகளுக்கான மின்சாரக் கட்டணத்திற்கு சமம் என்கிறார்கள்.

Wednesday, November 24, 2010

கேப்டன் இனி டாக்டர் கேப்டன்

அரசியல் தலைவர்கள், கல்விச்சேவை, மனிதநேய சேவை உள்ளிட்ட சேவைகளை செய்யும் சமூக சேவையாளர்கள், சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்படும் கவுரவ டாக்டர் பட்டம் நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்துக்கும் வழங்கப்பட இருக்கிறது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள, "இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் சர்ச் மேனேஜ்மென்ட் (ஐ.ஐ.சி.எம்.,) என்ற பல்கலைக்கழகம், கவுரவ டாக்டர் படத்திற்கு நடிகர் விஜயகாந்தை தேர்வு செய்துள்ளது. சிறப்பான முறையில் சமூக சேவையாற்றி வருவதற்காக இந்த பட்டம் வழங்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு இரு தினங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து டாக்டர் பட்டம் வழங்கும் விழாவை, சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் வரும் டிசம்பர் 3ம்தேதி நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்கான அழைப்பிதழ் அச்சடிப்பு, நிகழ்ச்சி ஏற்பாடு உள்ளிட்ட பணிகளில் தே.மு.தி.க., மாநில நிர்வாகிகள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அப்போ இனிமே கேப்டர் விஜயகாந்த் இல்ல... டாக்டர் விஜயகாந்த்னு சொல்லுங்க! 

Tuesday, November 23, 2010

ஈ.வெ.ரா.,வின் கொள்கை அது நேற்று..... இது இன்னிக்கு!!!!!!

இது இன்று (23-11-10)

முதல்வர் கருணாநிதி வெளியிட்ட கேள்வி பதில் அறிக்கை : நேற்று (22-11-10)

ஈ.வெ.ரா.,வின் கொள்கைகளையும், அண்ணாதுரையின் கோட்பாடுகளையும் நான் அடகு வைத்துவிட்டதாக ஜெயலலிதா பெயரில் அறிக்கை வெளிவந்துள்ளது. விநாயகர் சதுர்த்தி, சரஸ்வதி பூஜை போன்ற நிகழ்ச்சிகளுக்கெல்லாம் வாழ்த்துச் செய்தி கொடுத்தும், ஸ்ரீரங்கம் கோவிலுக்கு விமானத்தில் பறந்து சென்று, ரங்கநாதருக்கு பூஜை, நைவேத்தியம் செய்தும் ஈ.வெ.ரா.,வின் கொள்கைகளையும், அண்ணாதுரையின் கோட்பாடுகளையும் ஜெயலலிதா காப்பாற்றுவதை போல, நான் காப்பாற்றவில்லை என்கிறார் போலும்.என் அரசியல் குருகுலம் ஈ.வெ.ரா.,வின் ஈரோட்டில் தொடங்கியது என்பதை தமிழக மக்கள் அறிவர். ஜெயலலிதாவின் குருகுலம் எது என்பதையும் தமிழக மக்கள் நன்கறிவர். எனவே, என் கொள்கை, கோட்பாடு பற்றி விமர்சிக்க அவருக்கு தகுதி போதாது.

நியூயார்க் டைம்சிலும் ஸ்பெக்ட்ரம் செய்தி

ஸ்பெக்ட்ரம் முறைகேடு, சர்வதேச அளவில் பேசப்படும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி விட்டது. " தி நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகையிலும் இதுகுறித்த செய்திகள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவிலிருந்து வெளியாகும் "தி நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகையில், ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து இடம் பெற்ற செய்தியை, இந்தியாவின் பிரபல ஆங்கில செய்தி சேனல் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவின் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் சார்பில், ஒதுக்கீடு செய்யப்பட்ட ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. தொலைத் தொடர்புத் துறையிலோ, வர்த்தகத்திலோ, பின்னணி இல்லாத ராஜா என்பவர், தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். சர்வதேச அளவில் மொபைல் போன் சந்தை மிக, வேகமாக வளர்ந்து வருகிறது. இதற்கு சற்றும் பொருத்தம் இல்லாத நபர், அத்துறையின் அமைச்சராக் கப்பட்டார். மத்திய அரசுக்கு தலைமை ஏற்றுள்ள, காங்கிரஸ் கட்சியின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர் என்ற பலம் மட்டுமே இவருக்கு உண்டு. இதுகுறித்து புகார் எழுந்ததை அடுத்து, அமைச்சர் பதவியில் இருந்து அவர் ராஜினாமா செய்துவிட்டார். மேலும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் சமீபகாலமாக ஊழல் புகாரில் சிக்கி தவித்து வருகின்றனர். இவ்வாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற ஊழல்கள் அதுகுறித்து பேட்டிகள் என விலாவாரியாக வெளிவந்திருக்கிறது.

http://www.nytimes.com/2010/11/22/world/asia/22india.html?_r=1&scp=1&sq=raja&st=cse

Monday, November 22, 2010

சிலபசை தயாரித்த பிளஸ் 2 மாணவர்

இன்டர்நெட் பாதுகாப்பு குறித்த பாடத்திட்டத்தை தயாரித்து, பெங்களூரு மாணவன் சாதனை புரிந்துள்ளார். இந்த பாடத்திட்டம் விரைவில் அவர் படிக்கும் பள்ளிக்கூடத்தில் அறிமுகப்படுத்தப்படுகிறது. பெங்களூருவில் உள்ள இன்டஸ் சர்வதேச பள்ளியில், பிளஸ் 2 படித்து வரும் மாணவர் சவுர்யா சலுஜா (17). பேஸ்புக், ஆர்குட் போன்ற சமூக வலைதளங்களிலும், இன்டர்நெட்டிலும் மாணவர்கள் மூழ்கிக் கிடப்பதையும், இதனால் அவர்களின் கல்வி பாதிக்கப்படுவதையும், கண்கூடாக பார்த்த சலுஜாவிற்கு, இதுகுறித்த விழிப்புணர்வை அவர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் எண்ணம் துளிர்விட்டது. இதை தொடர்ந்து, இன்டர்நெட் பயன்படுத்தும் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முறைகளை அடிப்படையாக வைத்து, பாடத்திட்டம் தயாரிக்கும் பணியில் சுறுசுறுப்பாக களமிறங்கினார். தனது எண்ணத்துக்கு உயிர் கொடுக்க, பஞ்சாபை சேர்ந்த இன்டர்நெட் பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்தின் உதவியை நாடினார். அங்கு இன்டர்நெட் பாதுகாப்பு குறித்து இரண்டு வாரங்கள் பயிற்சி பெற்ற சலுஜா, பெங்களூரு திரும்பியதும் இன்டர்நெட் பாதுகாப்பு பாடத்திட்டம் தயாரிக்கும் பணியில் மும்முரமாக களமிறங்கினார். இன்டர்நெட் நன்னெறிகள் (சைபர் எத்திக்ஸ்), வலைதளங்களும் நீங்களும் (நெட்வொர்க்ஸ் அண்ட் யூ), இன்டர்நெட் தற்காப்பு (புரோக்டெக்டிங் யுவர்செல்ப்), இன்டர்நெட் சட்டங்கள் (சைபர் லாஸ்) ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் பாடத்திட்டங்களை தயாரித்தார். இந்த பாடத்திட்டத்தை அவர் படிக்கும் இன்டஸ் சர்வதேச பள்ளி நிர்வாகம் ஆய்வு செய்தது. பின் தங்கள் பள்ளி மாணவர்களுக்கு இன்டர்நெட் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஒன்பது முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு இந்த பாடத்திட்டத்தை சேர்க்க முடிவு செய்து, விரைவில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சவுர்யா சலுஜா கூறியதாவது: நான் மலேசியாவில் படித்து கொண்டிருந்த போது, இதுபற்றிய பலர் என்னிடம் பேசுவர். இதனால் அங்கு மாணவர்களிடையே விழிப்புணர்வு அதிகம். ஆனால் இங்கு இன்டர்நெட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, மாணவர்களிடம் யாரும் பேசுவதில்லை. எனவே இதை பாடத்திட்டமாக தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் எழுந்தது. அனைத்து பள்ளிகளிலும் இதை பாடத்திட்டமாக அறிவிக்க வேண்டும் என்பதே என் விருப்பம். இவ்வாறு சலுஜா கூறினார்.

Friday, November 19, 2010

காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வி்த்தியாசம்

ஒரு ஞானியை அணுகிய சீடன்,காதலுக்கும், திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான்.அதற்கு அந்த ஞானி,''அது இருக்கட்டும்.முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ.அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ,அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை.நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது.''என்றார்.கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான்.ஞானி,''எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி?''என்று கேட்டார். சீடன் சொன்னான்,'குருவே,வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது.அதை விட உயரமான செடி இருக்கக் கூடும்என்று தொடர்ந்து நடந்தேன்.இன்னும் உயரமான ரோஜாச் செடிகள் தென்பட்டன.அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன்.அதன் பிறகு தென்பட்டதெல்லாம் குட்டையான ரோஜாச் செடிகளே.வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர முடியாமல் போய் விட்டது.'

புன்முறுவலோடு ஞானி சொன்னார்,''இது தான் காதல்.''

பின்னர் ஞானி,''சரி போகட்டும்,அதோ அந்த வயலில் சென்று உன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரிய காந்திச் செடியைப் பிடுங்கி வா. ஆனால் இப்போது கூடுதலாக ஒரு நிபந்தனை.ஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு ஒரு செடியைப் பிடுங்கக் கூடாது.''

சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரிய காந்திச் செடியுடன் வந்தான்.ஞானி கேட்டார்,''இது தான் அந்தத் தோட்டத்திலேயே அழகான சூரிய காந்திச் செடியா?''சீடன் சொன்னான்,'இல்லை குருவே,இதை விட அழகான செடிகள் இருக்கின்றன.ஆனால் முதல் முறை கோட்டை விட்டது போல் இந்த முறையும் விட்டு விடக் கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்த செடியைப் பிடுங்கி வந்து விட்டேன்.நிபந்தனைப்படி,ஒரு செடியைப் பிடுங்கியபின் வேறு செடியைப் பிடுங்கக் கூடாது என்பதால் அதன் பிறகு இதை விட அழகான செடிகளை நான் பார்த்தபோதும் பறிக்கவில்லை.'

இப்போது ஞானி சொன்னார்,''இது தான் திருமணம்.''

Thursday, November 18, 2010

ரெட்டை அர்த்த நகரத்திற்கு போகலாம் வாரீகளா !!!!

சிங்கப்பூர் பூவுலகின் சொர்க்கம், அழகின் உச்சம், மனிதனின் சாதனை நகரம், உலகின் சுற்றுலா ரசிகர்களின் முக்கிய  இடம் இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம், ஃபைன் சிட்டி(fine city) என்று இரட்டை அர்த்தத்தில்  சொல்லப்படும்... ஒன்று அழகான சிட்டி என்றும் இன்னொன்று அபராதம் விதிக்கப்படும் சிட்டி என்றும் இரட்டை  பொருளில் சொல்லப்படும்...

உலகில் குடிசைப்பகுதியில்லாத(slum) ஒரே நாடு, சிங்கப்பூரின் பெரும்பாலான குடிமகன்களுக்கு சொந்தவீடு,  எங்கெங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்பதையே பார்த்துள்ள நமக்கு ஊழல் என்பது கிட்டத்தட்ட இல்லாத(nil)  நாடாகவும் குற்றச்செயல்கள் என்பதும் மிகக்குறைந்த அளவிலேயே இருக்கும் நாடு சிங்கப்பூர்...

இரவு 12 மணிக்கு உடல்முழுக்க நகையணிந்து தனியே ஒரு பெண் செல்லும் நாள் என்னும் காந்தி கனவை தினம்  தினம் நனவாக்கி கொண்டிருக்கும் நாடு...

என் மொழியை மட்டுமே படிக்கவேண்டும் என் மதம் மட்டுமே இருக்க வேண்டும் என் இனம் மட்டுமே என்று  இனவெறி பிடித்தலையும் கொலைகார நாடுகளை பார்த்துக்கொண்டிருக்கும் உலகில் அவரவர் தாய் மொழியை  படியுங்கள், அவரவர் தாய்மொழியை மதியுங்கள், அவரவர் மதங்கள் அவரவர்களுக்கு என்று பல்தேசிய மக்களும்  ஒன்றிணைந்து வாழும் சிங்கப்பூர் உலகின் அதிசயங்களில் ஒன்று...

சிங்கப்பூர் சிறிய நாடு என்பது பெரும்பாலும் அறிந்ததே, சிறியது என்றால் தமிழ்நாடு அளவு இருக்குமா? இலங்கை  அளவு இருக்குமா என்றுதான் முதலில் நினைத்தேன், அதனினு சிறிது கிட்டத்தட்ட பாதி பெங்களூர், கால்வாசி  சென்னை அவ்வளவுதான்.


சிங்கப்பூரின் கடைக்குட்டியான சிங்கப்பூர் ஃப்ளையர் எனப்படும் உலகின் மிக உயரமான Observation  wheel என்பதிலிருந்து சிங்கப்பூரின் பழமையை காண்பிக்கும் புலாவுபின் தீவு வரை எக்கச்சக்கமான சுற்றுலா  தளங்கள்...

சென்னை 2 சிங்கப்பூர் செல்ல நிறைய விமான சேவைகள் உள்ளன, விசா நடைமுறைகளும் ஓரளவுக்கு  எளிதானவையே... சென்னையில் உள்ள சிங்கப்பூர் துணை தூதரகத்திலேயே சுற்றுலா விசா பெற்றுக்கொள்ளலாம், 

டூரிஸ்ட் விசா பெற மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது

1. உங்களுடைய கடவுச்சீட்டு(Passport) குறைந்த ஆறுமாதத்திற்காவது(at least 6 months  validity) இருக்க வேண்டும்

2.சிங்கப்பூர் சென்று மீண்டும் திரும்பி வருவதற்கான வானூர்தி சீட்டு இருக்க வேண்டும்(A confirmed  onward/return ticket),

3. உள்ளூர்(சிங்கப்பூர்) அழைப்பாளர்(sponsor) இல்லாத நிலையில் சில நூறு அமெரிக்க / சிங்கப்பூர்  டாலர்கள் அல்லது கடன் அட்டை(credit card) காண்பிக்கப்பட வேண்டும்.

இவைகளுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் சிங்கப்பூர் விசாவுக்கான படம்(அறிவுறுத்தப்பட்ட  அளவுகளில்)கொடுத்தால் மூன்றிலிருந்து நான்கு வேலை நாட்களுக்குள் விசா கிடைத்துவிடும்.

விசா வாங்கியாச்சா? பாஸ்போர்ட் தயாரா? அப்புறமென்ன கிளம்புங்க சிங்கப்பூருக்கு......

Wednesday, November 17, 2010

எங்கே உக்காந்து தான் யோசிப்பாங்களோ!!!!!

படித்து விட்டு வேலைக்காக பரீட்சை எழுதிக் கொண்டிருக்கும் நண்பர் ஒருவர், "ஆப்ஜக்டிவ் டைப்' தேர்வுகளில் (இவ்வகைத் தேர்வுகளில், ஒரு கேள்வி கேட்டு, அதற்கு நான்கு பதில்களைக் கேள்வித் தாளில் கொடுத்து இருப்பர்... அந்த நான்கில் எது சரியான விடை என்பதை, "டிக்' செய்தால் போதும்!) "புதுவிதமாக, காப்பி நடக்கிறது... அதை நீங்கள் நேரில் பார்த்தால், "இன்ட்ரஸ்டிங்' ஆக இருக்கும்... தேர்வு நடக்கும் நேரத்தில் சொல்கிறேன்... வருவீர்களா?' எனக் கேட்டார்...
"ஓ, வருகிறேன்... ஆனால், தேர்வு நேரங்களில் வெளியாட்களை உள்ளே விட மாட்டார்களே...' என்றேன்.
"கவலையை விடுங்கள்... நான் அழைத்துச் சென்று, வசமான இடத்தில் உங்களை உட்கார வைக்கிறேன்... அந்த இடத்தில் இருந்தே தேர்வு அறையின் உள்ளே நடப்பதை நீங்கள் தெளிவாகக் காணலாம்...' என்றார்.
அந்த நாளும் சமீபத்தில் வந்தது. நண்பர், தன் தேர்வு எழுதும் கல்லூரிக்கு அழைத்துச் சென்று, அவர் கூறியபடியே பாதுகாப்பான இடத்தில் அமர வைத்தார்.
மணி அடித்தது... அதுவரை பரபரப்பாக இருந்த கல்லூரி வளாகம் அமைதியானது. தேர்வு எழுத வந்தவர்கள் அவரவர் இருக்கையில் அமர, பரீட்சை பேப்பர் வினியோகம் ஆரம்பமானது.
எல்லாம் வழக்கப்படி நடக்க, ஒரு விஷயம் மட்டும் வினோதமாகப் பட்டது.
அது —
தேர்வு எழுத வந்தவர்களில் பலரும் நான்கு பேனாக்கள், பென்சில்கள், ரப்பர்கள் என மேசை மீதும், தத்தம் சட்டைப் பைகளிலும் வைத்து இருந்தனர். இரண்டு பேனாவும், ஒரு பென்சிலும், ஒரு ரப்பருமே அதிகப்படி எனும் போது, இத்தனை எதற்கு என எண்ணிக் கொண்டிருக்கும் போதே, தேர்வு எழுத வந்தவர்களின் சேஷ்டைகள் ஆரம்பமானது.
ஒரு பேனாவைத் தூக்கிக் காட்டுவதும், இரண்டு பேனாக்களைத் தூக்கிக் பிடிப்பதும், பேனா, பென்சில், ரப்பர் என எடுத்துக் காட்டுவதுமாக இருந்தனர்.
வாசகர் சொன்ன, "டுபாக்கூர்' வேலை இது தான் என்பது தெரிந்தாலும், விஷயம் முழுமையாகப் புரியவில்லை... தேர்வு முடித்து வந்த அந்த வாசகர் பின்னர் விளக்கினார்:
"நம்ம மக்கள் எந்த அளவுக்கு புத்திசாலிகள் என்பதற்கு ஓர் உதாரணத்தைப் பார்த்தீர்களா... சரியான விடை தெரிந்தவர்களிடமிருந்து விடைகளைப் பெற, மற்றவர்கள் சங்கேத அடையாளங்களை பயன்படுத்துகின்றனர். இதன்படி தலையைச் சொறிந்தால், முதல் விடை சரியானது. நெற்றியைத் தொட்டால், இரண்டாவது விடை சரியானது. அதே போல கண்ணைத் தொட்டால், மூன்றாவது விடையும், மூக்கைத் தொட்டால், நான்காவது விடையும் சரியானவை.
"சரி... கேள்விகள் நூறு வரை இருக்குமே... இதை எப்படி சொல்கின்றனர்...' எனக் கேட்டேன்.
"பேனா மூடி காட்டினால் ஒன்று. பேனாவைக் காட்டினால் இரண்டு, பென்சில் ஐந்து, ரப்பர் பத்து என மதிப்பு கொடுத்துள்ளனர்... கர்சிப் ஜீரோ. விடை கேட்பவர்கள் பேனா, பென்சில், ரப்பர் போன்றவற்றில் தலா மூன்று நான்கு வைத்திருப்பர். உதாரணமாக, இருபத்தாறாவது கேள்விக்கு விடை கேட்க வேண்டும் என்றால், ஒரு பேனா அதை அடுத்து ஒரு பென்சில், அதன் மேல் ஒரு பேனா மூடி என வைத்து விட்டு தேர்வு எழுத வந்திருக்கும் புத்திசாலியான நண்பனை ஒரு பார்வை பார்ப்பர். அவர் தலையையோ, மூக்கையோ, சொறிந்து சரியான விடையைச் சொல்வார். அதே போல், ஐம்பதாவது கேள்விக்கு விடை தேவை என்றால், பென்சிலை வைத்து அதை அடுத்து கர்சிப்பை வைப்பர்.
"இந்த சங்கேத அடையாளத்தை போட்டித் தேர்வு எழுத வருபவர்களும், கல்லூரி மாணவர்களும் பரவலாகப் பயன்படுத்துகின்றனர்!' என்றார் வாசகர்.
— இப்படி பரீட்சை பாஸ் பண்ணிட்டு வர்றவங்ககிட்ட இருந்து என்ன, "குவாலிட்டி' எதிர்பார்க்க முடியும்? 

Tuesday, November 16, 2010

ஆன்லைன் வர்த்தகம் பாதிக்கப்படுமா?- கட்டாயமாகிறது விபிவி மற்றும் எம்எஸ்சி

RBI  வெளியிட்டுள்ள தகவல் குறிப்பில் CW2 எனப்படும் செக்யூரிட்டி இப்பொழுது எல்லாவிதமான கிரிடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கும் January 01, 2011 யிலிருந்து கட்டாயமாக்கப்படுகிறது. அது வெளிநாட்டவர் இந்திய வெப்தளங்களில் செய்யும் Money Transactions அல்லது இங்குள்ளோர் வெளிநாட்டவர் தளங்களில் செய்யும் Transactions என எதுவாக இருந்தாலும் மேலும் இது IVR க்கும் பொருந்தும் என கூறியிருக்கிறது.

Verified by Visa, Mastercard Secure இந்த இரண்டும் இப்பொழுது எல்லா வகையான ஆன்லைன் சேவைகளிலும் (Card not present) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது இந்த ஆண்டு ஆகஸ்டு 1 ம் தேதி முதல் அமுலில் உள்ளது. ஆனால் இது அமேரிக்க எக்ஸ்பிரஸுக்கு பொருந்தாது ஏனெனில் அது ஏற்கனவே billing address verification ஐ தன்னுடைய API யில் சேர்த்திருக்கிறது.

இது வேப் அப்ளிகேஷனான Ngpay யில் உள்ளதா என எனக்கு தெரியவில்லை. மொபைல் ப்ரொவுசரை பேங்க் தளத்திற்கு ரீடைரக்ட் செய்து பிறகு அது முடிந்தபின்பு மீண்டும் பழைய நிலைக்கு வருமா? இது J2ME யில் சாத்தியாமா என நீங்களதான் சொல்லவேண்டும்.

இந்த அதிகப்படியான செக்யூரிட்டி ஒரு விதத்தில் சரியென்று என சொன்னாலும் இதனால் பத்தில் ஒரு டிரான்சேக்ஷன் பாதிக்கபடுகிறது என்கின்றனர். வெளிநாட்டவர் வைத்துள்ளதுபோல் billing address verification, date of birth verification வைத்தால் அனைவருக்கும் ஞாபத்தில் வைக்க சுலபாக இருக்கும் என்கின்றனர் ஒரு சிலர். இதனால் Cash Mode வியாபாரம் சூடுபிடிக்கிறது. ITZ cash வைத்து IRCTC யும் NGPAY வும் வாழ்கிறது என்றால்  அது மிகையாகாது.

RBI யின் அறிக்கை இதுதான்

RBI Notice (source)
RBI/2010-2011/243
RBI / DPSS No.914/02.14.003/2010-2011
October 25, 2010
The Chairman and Managing Director / Chief Executive Officers
All Scheduled Commercial Banks including RRBs /
Urban Co-operative Banks / State Co-operative Banks /.
District Central Co-operative Banks
Authorised card payment networks
Madam / Dear Sir
Credit/Debit Card transactions- Security Issues and Risk mitigation measures for Card Not Present Transactions.
We had vide our circular RBI/2008-2009/ 387, DPSS No. 1501 / 02.14.003 / 2008-2009, dated February 18, 2009, mandated that with effect from August 01, 2009, banks shall provide an “additional authentication/validation based on information not visible on the cards for all on-line card not present transactions”. (This mandate has been extended to all IVR transactions with effect from January 01, 2011, vide our circular RBI/2009-2010/420, DPSS No. 2303 / 02.14.003 / 2009-2010 April 23, 2010)
2. We have been receiving references regarding the applicability of this mandate for online transactions effected using cards issued by banks outside India on Indian merchant sites, and the use of Indian cards for transactions on foreign websites.
3. In this regard, it is clarified that the mandate shall apply to all transactions using cards issued in India, for payments on merchant site where no outflow of foreign exchange is contemplated. The linkage to an overseas website/payment gateway cannot be the basis for permitting relaxations from implementing the mandate.
4. The mandate is not presently applicable for use of cards issued outside India, on Indian merchant sites.
Yours faithfully
G. Padmanabhan
Chief General Manager

Saturday, November 13, 2010

இ-மெயில் சேவையை துவக்குகிறது பேஸ்புக்

சோஷியல் நெட்வொர்க் இணையதளங்களின் ஜாம்பவானாக திகழும் பேஸ்புக், விரைவில் இ-மெயில் சேவையை துவக்குகிறது. இது மைக்ரோசாப்ட, யாகூ, கூகுள் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களுக்கு கடும்போட்டியாக அமையும் என்று நாளிதழ்கள் அவ்வப்போது செய்தி வெளியிட்ட வண்ணம் உள்ளன. ஆனால் இதுகுறித்த அறிவிப்பு பேஸ்புக் தரப்பிலிருந்து வரவில்லை. இந்நிலையில், அமெரிக்காவின் சிலிக்கான வேலி பகுதியில் இருந்து வெளியாகும் தொழில்நுட்ப வலை இதழான டெக்கிரஞ்ச்சில், இதுகுறித்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில் தெரிவித்துள்ளதாவது : சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வெப் பேஸ்டு இ-மெயில் சேவையை பேஸ்புக் துவக்க இருப்பதாகவும், இந்த மெயில் அட்பேஸ்புக்.காம் என்று முடியுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக்கிற்கு, சர்வதேச அளவில் 500 மில்லியன் பயனாளர்கள் இருப்பதாகவும், மற்ற முன்னணி நிறுவன்ஙகளான கூகுள், யாகூ, மைக்ரோசாப்ட் நிறுவனங்களை முறியடிக்கும் பொருட்டு இந்த சேவை‌ துவக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் டிராக்கிங் நிறுவனமான காம்ஸ்கோர் நிறுவனம், சமீபத்தில் நடத்திய கருத்துக்கணிப்பின்படி, கடந்த செப்டமபர் மாத நிலவரப்படி, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஹாட்மெயிலுக்கு 361.7 மில்லியன் பயனாளர்களும், யாகூமெயிலுக்கு 273.1 மில்லியன் பயனாளர்களுகும், கூகுள் நிறுவனத்தின் ஜிமெயிலுக்கு 193.3 மில்லியன் பயனாளர்கள் இருப்பத‌ாகவும் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் பார்த்தால், பேஸ்புக்கிற்கு 500 மில்லியன் பயனாளர்கள் இருப்பதால், யாகூ, கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்களை எளிதில் பின்னுக்குத் தள்ளலாம் என்ற முடிவில் இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெக்கிரஞ்சில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : பேஸ்புக் நிறுவனம், இந்த திட்டத்தை ரகசியமாக வைத்திருந்ததாகவும், இந்த திட்டத்தி்ற்கு "புராஜெக்‌ட் டைட்டன்" என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும், சுருங்கக் கூறினால், "ஜிமெயில் கில்லர்" என்று பொருள் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இ-மெயில் சேவையை துவக்குவதற்கான பணிகள் ஆரம்பக்கட்ட நிலையிலேயே உள்ளதாகவும், விரைவில் இ-மெயில் சேவையை துவங்க உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday, November 12, 2010

2012 ல் விண்டோஸ் 8 தொகுப்பு

விண்டோஸ் 8 இயங்குதளமானது (Operating System) 2012 இல் வெளியிடப்படுமென மைக்ரோசொப்ட் தெரிவிக்கின்றது.

இது தொடர்பான செய்தியை மைக்ரோசொப்ட் தனது ' டச்சு' மொழி வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளது.


இறுதியாக மைக்ரோசொப்ட் தனது விண்டோஸ் 7 இயங்குதளத்தினை 2009 ஆம் ஆண்டு வெளியிட்டது.

விண்டோஸ் விஸ்டா இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதே விண்டோஸ் 7 ஆகும்.

அண்மையில் அப்பிள் தனது மெக். ஒ.எஸ் எக்ஸ் 10.7 லயன் (Mac OS X 10.7 Lion) இயங்குதளத்தினை வெளியிட்டிருந்தது.

மேலும் இதில் அப்பிளின் அப் ஸ்டோர் (App Store) போன்ற வசதியையும் அப்பிள் உள்ளடக்கியிருந்தது.

மைக்ரோசொப்டும் இது போன்ற வசதியினை உள்ளடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விண்டோஸ் 7 ஐப் போல விண்டோஸ் 8 உம் பல புதிய மாற்றங்களை உள்ளடக்கியிருக்கலாம் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

தற்போது மைக்ரோசொப்ட், விண்டோஸ் போன் 7(Windows 7 mobile) மற்றும் எக்ஸ் பொக்ஸ் 360 இக்கான கைநெக்ட்(kinect) மோசன் சிஸ்டம் தொடர்பில் அதிக அக்கறை செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சூரிய கிரகணம் - கிரகணநாளில் பிறந்த புதிய கண்டுபிடிப்புகள்....

Photo courtesy NBC news வான்பரப்பில், சந்திரன் சூரியனை விட 400 மடங்கு சிறியதாக உள்ளது. இதன் காரணமாக, சந்திரன் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே...