Tuesday, November 23, 2010

நியூயார்க் டைம்சிலும் ஸ்பெக்ட்ரம் செய்தி

ஸ்பெக்ட்ரம் முறைகேடு, சர்வதேச அளவில் பேசப்படும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி விட்டது. " தி நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகையிலும் இதுகுறித்த செய்திகள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவிலிருந்து வெளியாகும் "தி நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகையில், ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து இடம் பெற்ற செய்தியை, இந்தியாவின் பிரபல ஆங்கில செய்தி சேனல் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவின் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் சார்பில், ஒதுக்கீடு செய்யப்பட்ட ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. தொலைத் தொடர்புத் துறையிலோ, வர்த்தகத்திலோ, பின்னணி இல்லாத ராஜா என்பவர், தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். சர்வதேச அளவில் மொபைல் போன் சந்தை மிக, வேகமாக வளர்ந்து வருகிறது. இதற்கு சற்றும் பொருத்தம் இல்லாத நபர், அத்துறையின் அமைச்சராக் கப்பட்டார். மத்திய அரசுக்கு தலைமை ஏற்றுள்ள, காங்கிரஸ் கட்சியின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர் என்ற பலம் மட்டுமே இவருக்கு உண்டு. இதுகுறித்து புகார் எழுந்ததை அடுத்து, அமைச்சர் பதவியில் இருந்து அவர் ராஜினாமா செய்துவிட்டார். மேலும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் சமீபகாலமாக ஊழல் புகாரில் சிக்கி தவித்து வருகின்றனர். இவ்வாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற ஊழல்கள் அதுகுறித்து பேட்டிகள் என விலாவாரியாக வெளிவந்திருக்கிறது.

http://www.nytimes.com/2010/11/22/world/asia/22india.html?_r=1&scp=1&sq=raja&st=cse

No comments:

Post a Comment

தென்கலை - வடகலை பஞ்சாயத்துதான் என்ன?

இன்று சைவம் - வைணவம் ஆகிய இரு மதங்களே இந்தியாவின் பெரும்பான்மை மதங்களாக உள்ளன. இந்த இரண்டு மதங்களுடன் "ஸ்மார்த்தம்"  எனும் வட வேத ...