ஸ்பெக்ட்ரம் முறைகேடு, சர்வதேச அளவில் பேசப்படும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி விட்டது. " தி நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகையிலும் இதுகுறித்த செய்திகள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவிலிருந்து வெளியாகும் "தி நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகையில், ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து இடம் பெற்ற செய்தியை, இந்தியாவின் பிரபல ஆங்கில செய்தி சேனல் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவின் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் சார்பில், ஒதுக்கீடு செய்யப்பட்ட ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. தொலைத் தொடர்புத் துறையிலோ, வர்த்தகத்திலோ, பின்னணி இல்லாத ராஜா என்பவர், தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். சர்வதேச அளவில் மொபைல் போன் சந்தை மிக, வேகமாக வளர்ந்து வருகிறது. இதற்கு சற்றும் பொருத்தம் இல்லாத நபர், அத்துறையின் அமைச்சராக் கப்பட்டார். மத்திய அரசுக்கு தலைமை ஏற்றுள்ள, காங்கிரஸ் கட்சியின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர் என்ற பலம் மட்டுமே இவருக்கு உண்டு. இதுகுறித்து புகார் எழுந்ததை அடுத்து, அமைச்சர் பதவியில் இருந்து அவர் ராஜினாமா செய்துவிட்டார். மேலும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் சமீபகாலமாக ஊழல் புகாரில் சிக்கி தவித்து வருகின்றனர். இவ்வாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற ஊழல்கள் அதுகுறித்து பேட்டிகள் என விலாவாரியாக வெளிவந்திருக்கிறது.
http://www.nytimes.com/2010/11/22/world/asia/22india.html?_r=1&scp=1&sq=raja&st=cse
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த வைகை நதி ஓடும் மாநகரத்தில் வாழும் எளிமையானவன். தான் அறிந்த தகவல்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் கொள்பவன்
Subscribe to:
Post Comments (Atom)
இதை நான் இன்னைக்கு கண்டுபுடிச்சது
தென்மாவட்டத்தைச் சேர்ந்த பெரும்பாலான ஆண்களின் குரல் கொஞ்சம் கரடு முரடாக ரொம்ப Deep Base குரலாக இருக்கிறது...குறிப்பாக மதுரை, தேனி, திருநெல...
-
காதலித்து மணந்தவளை இறந்து விட்டாள் என நினைத்து சந்தர்ப்பவசத்தால், வேறு ஒரு பெண்ணை மணப்பார். இறந்தவளாக கருதப்பட்டவர் பார்வை இழந்த நிலையில் ...
-
சொந்தமாக கார் வாங்குவது பெரிய விஷயமல்ல. அதற்கு இன்சூரன்ஸ் எடுத்து முறையாக பிரிமியம் தொகை கட்டுவது தான் பெரிய விஷயம். அந்த வகையில் கார்களுக்க...
-
ஆற்றோரத்தில் ஜெபம் கூட்டம் ஒன்று நடைபெறுகிறது. ஒரு குடிகாரனும் ஜெபத்தில் கலந்துக்கொள்ள நேறிடுகிறது வருகிறான்.குடிகாரன் பாதிரியாரின் அருகில...

No comments:
Post a Comment