Wednesday, April 27, 2011

கர்ப்பம் தரித்து குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆண் உயிரினம்


கண்களை எந்தப் பக்கமும் திருப்புதல், குதித்து குதித்து ஓடும் ஒருவகை மீன் இனம், குதிரை போன்ற முக அமைப்பு, குரங்கு போன்ற வால், ஆண் இனங்கள் இனப்பெருக்கம் செய்தல் இப்படியாக பல்வேறு சிறப்புகளையுடைய அரியவகை கடல்வாழ் உயிரினமான கடல் குதிரைகள் பல்வேறு காரணங்களால் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவருவதை அரசு தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.


உடலமைப்பை பொருத்தவரை நன்கு நீண்டு வளையங்களால் அமைந்தது போன்றும் வாய் நீண்டு குழல் போலவும் மார்புப் பகுதி சற்று அகன்று விரிந்தும் காணப்படுகிறது. உடலில் பக்கவாட்டுக் கோடுகள் மற்றும் நீண்ட புள்ளிகள் தென்படுகின்றன. சுமார் 6 செ.மீ முதல் 17 செ.மீ வரை நீளமும் எடை 4 கிராம் முதல் 14 கிராம் வரையும் இருக்கிறது.


பெண் கடற்குதிரைகள் தங்களின் முட்டைகளை (200) ஆண்களின் வால் பகுதியில் உள்ள இனப்பெருக்கப் பைகளில் விட்டுவிடும். அதனை ஆண் கடற்குதிரைகள் கங்காரு போல நன்கு பேணி ஆறு வாரங்கள் பாதுகாத்து குஞ்சுகளாகப் பொரிக்கின்றன. குஞ்சுகளின் எண்ணிக்கையும் 50 முதல் 100 வரை இருக்கும். பிறக்கும் குஞ்சுகளின் நீளம் ஏறத்தாழ ஒரு செ.மீட்டராக இருந்தாலும் பெற்றோரின் பாதுகாப்பு அதிகமாகவே இருக்கும்.


மீன் இனத்தைச் சேர்ந்த உயிரினம்தான் கடல்குதிரை. பார்ப்பதற்கு முதலைக் குட்டியைப் போலிருக்கும். ஆண் கடல் குதிரையின் வாலின் கீழே பை போன்ற அமைப்பு இருக்கும். ஆண் கடல் குதிரைகளின் இந்தப் பையில்தான் பெண் கடல் குதிரைகள் முட்டையிடுகின்றன. முட்டைகள் பொரிவதும் வெளிவரும் குஞ்சுகள் சிறிது காலம் வளர்வதும் இந்தப் பையில்தான். முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவரும் நேரத்தில் அப்பா கடற்குதிரைக்கு பிரசவ வலி வரும். அப்போது அது நீருக்கடியில் உள்ள புதற்களுக்கிடையே கிடந்து மிகவும் சிரமப்படும். உடலை முன்னும் பின்னுமாக அசைத்து வளைக்கும். இப்படி வளையும்போது பையின் தசைகள் விரிவடையும். ஒவ்வொரு முறை வளையும்போதும் ஒவ்வொரு குஞ்சு வெளிவரும்.


இதில் பிரச்சனை என்னவென்றால் கடல்குதிரையின் இனப்பெருக்க வேகம் மிகவும் குறைவு. மனிதர்களுக்கு வேகத்தைத் தரும் கடல் குதிரைகளுக்குத் தான் வேகம் வருவதில்லை. இப்படியே போனால் எதிர்காலத்தில் கடல் குதிரைகள் என்கிற இனம் என்ன ஆகுமென்று யாருக்கும் தெரியாது.


"உலகத்திலேயே கடல் குதிரை தான் ஆண் வர்க்கத்தில் கர்ப்பம் தரித்து குழந்தை பெற்று கொள்ள முடியும்"

Tuesday, April 19, 2011

வருமானம் குறைந்தாலும் மில்லியனராக வலம்வரும் ஒபாமா

வாஷிங்டன் : கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல, நிதியாண்டில் வருமானம் குறைந்தாலும் மில்லியனராகவே நீடித்துக் கொண்டிருக்கிறார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா. சமீபத்தில், அதிபர் ஒபாமா, அவரது மனைவி மிச்செல் ஒபாமா, இருவரும் சேர்ந்து வருமான வரியை தாக்கல் செய்துள்ளனர். அதில் அவர்களின் வருமானம் மூ்னறில் 2 பங்கு கு்றைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, வெள்ளை மாளிகையின் செய்தித்தொடர்பாளர் ஜே கார்னி வெளியிட்டுள்ள ‌அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அதிபர் ஒபாமா, அவரது மனைவி மிச்செல் ஒபாமா இருவரும் இணைந்து, 2010ம் ஆண்டிற்கான வருமானவரி கணக்கை தாக்கல் செய்துள்ளனர். இதில், 2009ம் ஆண்டில் இருந்ததைவிட, 2010ம் ஆண்டில் தங்களது வருமானம் மூன்றில் 2 பங்கு சரிந்துள்ளதாக தெரிவித்தனர். 2009ம் ஆண்டில், 5.5 மிலலியன் அமெரிக்க டாலர்களாக இருந்த ஒபாமா குடும்பத்தின் வருமானம், இந்த ஆண்டில் 1.73 மில்லியன் அமெரிக்க டாலர்களாக காட்டப்பட்டுள்ளது. அதிபர் புத்தகங்களை விற்பனை செய்ததன் மூலம‌ே, வருமானத்தின் பெரும்பகுதி ஈட்டபட்டதாகவும், ஒபாமா குடும்பத்தினர் மொத்த பெடரல் வரியாக 4,53,770 அமெரிக்க டாலர்களை கட்டியுள்ளனர். மேலும் அவர்கள் தங்களது வருமானத்தில் 14.2 சதவீதம் அதாவது, 2,45,075 அமெரிக்க டாலர்களை தொண்டு நிறுவனங்களுக்கு நிதியுதவி செய்துள்ளனர். இவற்றில், பிஷ்ஷர் ஹவுஸ் பவுண்டேசனுக்கு அதிக அளவாக 1,31,075 அமெரிக்க டாலர்களாக நிதியுதவியாக வழங்கியுள்ளனர். இல்லினாய்ஸ் நகரில் இவர்கள் தாக்கல் அறிக்கையில், மாகாண வருமான வரியாக 51,568 அமெரிக்க டாலர்களை செலுத்தியுள்ளனர். அதேபோல், துணை அதிபர் ஜோ பீடன் மற்றும் அவரது மனைவி இருவரும் சேர்ந்து வருமான வரியை தாக்கல் செய்துள்ளனர். 3,79,178 அமெரிக்க டாலர்களை வருமானமாக காட்டியுள்ள அவர்கள், மொத்த பெடரல் வரியாக 86,626 அமெரிக்க டாலர்களை கட்டியதாகவும், தொண்டு மற்றும் மற்ற நிறுவனங்களுக்கு உதவி செய்த விதமாக 5,350 அமெரிக்க டாலர்களை அவர்கள் கணக்கில் காட்டியுள்ளனர். இது‌போல, மற்ற நாட்டின் தலைவர்களும் தங்களது வருமான வரிக் கணக்கை காட்ட முன் வருவார்களா? என்பதே மக்களின் ஏகோபித்த கேள்வியாக உள்ளது.

சூரிய கிரகணம் - கிரகணநாளில் பிறந்த புதிய கண்டுபிடிப்புகள்....

Photo courtesy NBC news வான்பரப்பில், சந்திரன் சூரியனை விட 400 மடங்கு சிறியதாக உள்ளது. இதன் காரணமாக, சந்திரன் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே...