நியூயார்க் : இயற்கை பேரிடர்கள், ஊழல் விவகாரங்கள், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, மின்வெட்டு பிரச்னை என பல்வேறு பிரச்னைகளால் மக்கள் அவதிப்பட்டு இருந்தபோதிலும், உலகத்திலேயே மிகவும் மகிழ்ச்சியானவர்கள் பட்டியலில் இந்தியர்களும் இடம்பெற்றுள்ளது கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
2007ம் ஆண்டு துவங்கி, இதுவரை 24 நாடுகளில் சுமார் 18 ஆயிரம் மேற்பட்டவர்களிடம் நடத்திய கருத்துக்கணிப்பின் படி இம்முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக கருத்துக்கணிப்பு நடத்திய நிறுவனமான இப்சோஸ் குளோபல் நிறுவனத்தின் மூத்த துணை தலைவர் ஜான் ரைட் கூறியுள்ளார்.
இதன்படி, உலகிலேயே மகிழ்ச்சியான மக்கள் வாழும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இந்தோனேஷியாவும், 2ம் இடத்தில் இந்தியாவும், 3ம் இடத்தில் மெக்ஸிகோவும் உள்ளது. முறையே 4ம் மற்றும் 5ம் இடத்தில் பிரேசில் மற்றும் துருக்கி நாடுகள் உள்ளன.
மகிழ்ச்சி குறைவாக உள்ள மக்கள் உள்ள நாடுகள் பட்டியலில், ஹங்கேரி, தென்கொரியா, ரஷ்யா, ஸ்பெயின், இத்தாலி உள்ளிட்ட நாடுகள் உள்ளதாக ஜான் ரைட் கூறினார்.
2007ம் ஆண்டு துவங்கி, இதுவரை 24 நாடுகளில் சுமார் 18 ஆயிரம் மேற்பட்டவர்களிடம் நடத்திய கருத்துக்கணிப்பின் படி இம்முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக கருத்துக்கணிப்பு நடத்திய நிறுவனமான இப்சோஸ் குளோபல் நிறுவனத்தின் மூத்த துணை தலைவர் ஜான் ரைட் கூறியுள்ளார்.
இதன்படி, உலகிலேயே மகிழ்ச்சியான மக்கள் வாழும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இந்தோனேஷியாவும், 2ம் இடத்தில் இந்தியாவும், 3ம் இடத்தில் மெக்ஸிகோவும் உள்ளது. முறையே 4ம் மற்றும் 5ம் இடத்தில் பிரேசில் மற்றும் துருக்கி நாடுகள் உள்ளன.
மகிழ்ச்சி குறைவாக உள்ள மக்கள் உள்ள நாடுகள் பட்டியலில், ஹங்கேரி, தென்கொரியா, ரஷ்யா, ஸ்பெயின், இத்தாலி உள்ளிட்ட நாடுகள் உள்ளதாக ஜான் ரைட் கூறினார்.