லண்டன் : உலகிலேயே முதல்முறையாக, ஸ்மார்ட்போனை, பிரிட்டிஷ் பல்கலைக்கழக மாணவர் மூங்கிலில் உருவாக்கி உள்ளார். இந்த ஸ்மார்ட்போனை, இந்தாண்டின் இறுதிக்குள் ஐரோப்பாவில் விற்பனைக்கு கொண்டுவர அம்மாணவர் திட்டமிட்டுள்ளதாக டெய்லி மெயில் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இங்கிலாந்து தலைநகர் லண்டனை பூர்வீகமாக கொண்ட கெய்ரோன்-ஸ்காட் வுட்ஹவுஸ், மிடில்செக்ஸ் பல்கலைக்கத்தில் படித்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, சிறுவயதில் இருந்தே, தனக்கு மூங்கிலின் மீது தீராத பற்று இருந்தது. எனது ஓய்வுநேரங்களில், கிடைக்கும் மூங்கிலினை சீவி ஏதாவது ஒருபொருள் செய்து கொண்டிருப்பேன். அந்த வகையில் உருவானது தான் இந்த ஸ்மார்ட்போன். மற்ற மொபைல்போன்களைப் போலவே, இதிலும் கேமரா உள்ளிட்ட வசதிகள் உள்ளது. ஆட்ஜிரோ என்ற தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்படுகிறது. எனவே, சாதாரணமாக போட்டோ எடுக்கும்போது, ஏற்படும் குறைபாடுகள் இதில் ஏற்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மூங்கில், மற்ற பொருட்களை ஒப்பிடும்போது வலிமையானதும், மற்றும் உறுதியானதும் ஆகும். இந்த மூங்கிலில், ஸ்மார்ட்போன் செய்வேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால், தற்போது தான் உருவாக்கியுள்ள மூங்கில் ஸ்மார்ட்போன் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்தாண்டின் இறுதிக்குள் இந்த மூங்கில் ஸ்மார்ட்போனை வர்த்தகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த வைகை நதி ஓடும் மாநகரத்தில் வாழும் எளிமையானவன். தான் அறிந்த தகவல்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் கொள்பவன்
Monday, February 6, 2012
மூங்கிலினாலான ஸ்மார்ட்போன் : பிரிட்டிஷ் மாணவர் சாதனை
லண்டன் : உலகிலேயே முதல்முறையாக, ஸ்மார்ட்போனை, பிரிட்டிஷ் பல்கலைக்கழக மாணவர் மூங்கிலில் உருவாக்கி உள்ளார். இந்த ஸ்மார்ட்போனை, இந்தாண்டின் இறுதிக்குள் ஐரோப்பாவில் விற்பனைக்கு கொண்டுவர அம்மாணவர் திட்டமிட்டுள்ளதாக டெய்லி மெயில் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இங்கிலாந்து தலைநகர் லண்டனை பூர்வீகமாக கொண்ட கெய்ரோன்-ஸ்காட் வுட்ஹவுஸ், மிடில்செக்ஸ் பல்கலைக்கத்தில் படித்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, சிறுவயதில் இருந்தே, தனக்கு மூங்கிலின் மீது தீராத பற்று இருந்தது. எனது ஓய்வுநேரங்களில், கிடைக்கும் மூங்கிலினை சீவி ஏதாவது ஒருபொருள் செய்து கொண்டிருப்பேன். அந்த வகையில் உருவானது தான் இந்த ஸ்மார்ட்போன். மற்ற மொபைல்போன்களைப் போலவே, இதிலும் கேமரா உள்ளிட்ட வசதிகள் உள்ளது. ஆட்ஜிரோ என்ற தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்படுகிறது. எனவே, சாதாரணமாக போட்டோ எடுக்கும்போது, ஏற்படும் குறைபாடுகள் இதில் ஏற்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மூங்கில், மற்ற பொருட்களை ஒப்பிடும்போது வலிமையானதும், மற்றும் உறுதியானதும் ஆகும். இந்த மூங்கிலில், ஸ்மார்ட்போன் செய்வேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால், தற்போது தான் உருவாக்கியுள்ள மூங்கில் ஸ்மார்ட்போன் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்தாண்டின் இறுதிக்குள் இந்த மூங்கில் ஸ்மார்ட்போனை வர்த்தகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
தென்கலை - வடகலை பஞ்சாயத்துதான் என்ன?
இன்று சைவம் - வைணவம் ஆகிய இரு மதங்களே இந்தியாவின் பெரும்பான்மை மதங்களாக உள்ளன. இந்த இரண்டு மதங்களுடன் "ஸ்மார்த்தம்" எனும் வட வேத ...

-
காதலித்து மணந்தவளை இறந்து விட்டாள் என நினைத்து சந்தர்ப்பவசத்தால், வேறு ஒரு பெண்ணை மணப்பார். இறந்தவளாக கருதப்பட்டவர் பார்வை இழந்த நிலையில் ...
-
விண்டோஸ் 8 இயங்குதளமானது (Operating System) 2012 இல் வெளியிடப்படுமென மைக்ரோசொப்ட் தெரிவிக்கின்றது. இது தொடர்பான செய்தியை மைக்ரோசொப்ட் தனத...
-
ஒன்று இரண்டு படங்களில் தலை காட்டிய ஹீரோக்கள் கூட இன்று விளம்பரப் படவுலகில் சிறந்த வியாபாரிகளாக வலம் வந்துகொண்டிருக்க, ஐம்பது வருடத்தை கடந்து...
No comments:
Post a Comment