திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக ரூபாய் நோட்டுகள், சில்லறை நாணயங்களை செலுத்தி வருகின்றனர். இந்த சில்லறைகளை ஏழுமலையானின் தன பிரசாதமாக பக்தர்களுக்கே வழங்கும் திட்டத்தை தேவஸ்தானம் புதிதாக தொடங்கியுள்ளது. உண்டியல் மூலம் தினசரி ₹10 லட்சம் முதல் ₹20 லட்சம் வரை சில்லறைகள் கிடைக்கின்றன. ரூபாய் நோட்டுகள் மட்டும் வங்கிகளில் முதலீடு செய்யப்படுகிறது. சில்லறைகளை வங்கிகள் வாங்க முன்வராததால், தேவஸ்தானத்தின் பாதுகாப்பில் அவை குவிக்கப்பட்டுள்ளன.
இதனால், இந்த சில்லறைகளை ரூபாய் நோட்டுகளாக மாற்றவே, ‘தன பிரசாதம்’ திட்டத்தை தேவஸ்தானம் இன்று முதல் தொடங்குகிறது. அதன்படி, தேவஸ்தான ஓய்வறைகளுக்கு பக்தர்களிடம் இருந்து ஒரு அறைக்கான வாடகை கூடுதலாக முன்பணமாக பெறப்படுகிறது. பக்தர்கள் தரிசனத்துக்குப் பிறகு அறைகளை காலி செய்து செல்லும்போது, இனிமேல் கூடுதலாக பெறப்பட்ட முன்பணம் இன்று முதல் சில்லறைகளாக சிறிய மூட்டைகளில் வழங்கப்பட உள்ளது. உண்டியலில் சில்லறை தொடர்ந்து குவிந்தால், கூகுள் பே போன்ற ஆப்கள் மூலம் காணிக்கை செலுத்தும் திட்டத்தை கொண்டு வர பரிசீலிக்கப்படுகிறது....