Photo courtesy NBC news
வான்பரப்பில், சந்திரன் சூரியனை விட 400 மடங்கு சிறியதாக உள்ளது. இதன் காரணமாக, சந்திரன் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நேர்கோட்டு புள்ளியாக வரும்போது, அது சூரியனை மறைப்பதால், நாம் கிரகணத்தைக் காண்கின்றோம்.
ஒவ்வொரு 18 மாதங்களுக்கும், பூமியின் ஒரு பகுதியில் சூரிய கிரகணம் ஏற்படுகிறது. அந்த வகையில், ஏப்ரல் 8 ஆம் தேதி அரிய முழு சூரிய கிரகணம் ஏற்படுகிறது.
சூரிய கிரகணத்தைப் பொறுத்தவரை சில நேரங்களில் தெரியும், சில நேரங்களில் தெரியாது. இந்த சூரிய கிரகணம் இந்திய நேரப்படி இரவில் நிகழும் என்பதால், இந்தியாவில் அதனை பார்க்க முடியாது.
அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகளில் மட்டுமே இந்த அரிய முழு சூரிய கிரகணத்தைக் காண முடியும்.
கிரகணத்தின் போது அறிவியல் நிறைஞர்களால் தோற்றுவிக்கப்பட்ட அரிய கண்டுபிடிப்புகள்..
1919ஆம் ஆண்டில், ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் கோட்பாடு,முழு சூரிய கிரகணத்தின் போதுதான் ஆர்தர் எடிங்டன் எடுத்த புகைப்படத்தின் மூலம் தான் உறுதிப்படுத்தப்பட்டது.
1866 - சூரிய கிரகணத்தைப் பதிவு செய்யும் போது ஹீலியம் கண்டுபிடிக்கப்பட்டது.
சந்திர கிரகணத்தின் போது பூமியில் வளைந்த நிழலைப் பார்த்த பிறகுதான், அரிஸ்டாட்டில் பூமி தட்டையானது அல்ல, வட்டமானது என்பதை நிரூபித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.