Saturday, December 18, 2010

"மகளிர் மட்டும்" வங்கிகள் : கர்நாடகா அதிரடி

கர்நாடக மாநிலத்தில், பெண்கள் தன்னம்பிக்கை உடையவர்களாக திகழ்வதாகவும், அவர்‌களை மேலும் மேம்படுத்தும் பொருட்டு, மாநிலத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் பெண்கள் மட்டும் செயலாற்றத்தக்க வகையிலான கட்டமைப்புடன் கூடிய "மகளிர் மட்டும்" வங்கிகளை அமைக்க தீர்மானித்திருப்பதாக, முதல்வர் எ‌டியூரப்பா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, முதல்வர் எடியூரப்பா பிறப்பித்துள்ள அறிக்கையில் தெரிவித்துளளதாவது : தங்களது அரசு, ஏற்கனவே, மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு உதவி செய்து வருவதாகவும், இதுவரை கிராம பஞ்சாயத்துகளுக்கு, பெண்கள் சுய உதவிகுழுக்களின் மூலம், ரூ. 5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. பெண்கள் நலன் தொடர்பான திட்டங்களில் தமது அரசு தீவிர கவனம் செலுத்தி வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, December 14, 2010

புதுமனை புகுவிழா : பசு நுழைவதன் பலன்

கட்டடம் உறுதியாக இருக்க வேண்டும் என்பதற்காக நாம் பசுவை கொண்டு செல்வது கிடையாது. விருத்தி அம்சத்திற்காகத்தான் பசுவை நாம் கொண்டு செல்கிறோம். இந்தக் கட்டடம் 200 வருடம் இருந்தது, 300 வருடம் இருந்தது என்பது முக்கியம் கிடையாது. இப்பவும், சில இடங்களுக்கு, சில வீடுகளுக்கு இந்த வீட்டிற்கு வந்தோம், 4 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்தது. தற்பொழுது குழந்தை பிறந்திருக்கிறது. அது அந்த வீட்டின் ராசி என்றெல்லாம் சொல்கிறார்கள்.

சிலரெல்லாம் வீடு கட்டி கோலாகலமாக கிரகப் பிரவேசம் செய்து குடியேறுகிறார்கள். ஆனால் அங்கு சென்ற பிறகு ஒவ்வொன்றாக இழக்கிறார்கள். சிலர் ஒவ்வொன்றாய் பெறுகிறார்கள். பசு என்பது விருத்தி அம்சத்திற்குரிய ஜீவராசி. அது காலடி எடுத்து வைத்தால் விருத்தி வரும். நிறைய பணம் வைத்திருப்பார்கள். ஆனால் நோயாளியாக இருப்பார்கள். பசுவை கொண்டு செல்வது சாந்தம், சாத்வீகம், செளபாக்கியம் என எல்லா அம்சங்களும் வரவேண்டும் என்பதற்காகத்தான். பணம், குணம், நிம்மதி என அனைத்து செளபாக்கியமும் பெறவேண்டும் என்ற காரணத்தினால்தான் பசுவை கொண்டு செல்கிறோம்.

இந்திய மண் என்பது பரிகார பூமி. இன்றைக்கும் சொல்கிறார்கள், தொழிலைக் கற்றுக்கொள்ள வேண்டுமா? சீனாவிற்குப் போ, படிப்பு சம்பந்தப்பட்டதற்கு அமெரிக்காவிற்குப் போ, ஆன்மீகத்தைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டுமா? இந்தியா போ என்று ஆன்மீகத்திற்கு இனம்காட்டக் கூடிய நாடாகத்தான் இந்த நாடு இருக்கிறது. அப்படிப்பட்ட இந்த நாட்டில் பசுவினுடைய பங்களிப்பு என்பது மிக அதிகம்.

எனக்குத் தெரிந்த வேற்று மத சாமியார் ஒருவர், எங்களுடைய வழக்கப்படி பசுவை வைத்தெல்லாம் செய்ய முடியாது. ஆனால் எனக்குப் பசு மீது பெரிய நம்பிக்கை உண்டு. அதை நான் யதார்த்தமாகவும் பார்த்திருக்கிறேன். ஒரு வேலையாகப் கிளம்பும் போது எதிராக பசு வந்தால் அது எவ்வளவு பெரிய வேலையாக இருந்தாலும் அன்றைக்கு அது முடிந்துவிடும். ஆனால் எங்களுடைய மதத்தவர்களிடம் சொன்னால், என்னை மதத்தை விட்டே தள்ளி வைத்துவிடுவார்கள். அதனால், இப்பொழுது கிரகப் பிரவேசம் செய்யலாம் என்று இருக்கிறேன். பசுவை வரவழைத்தால் என்னை ஒதுக்கியே வைத்துவிடுவார்கள். வேறு எதாவது செய்ய முடியுமா என்று கேட்டார்.

பசு மடத்தில் பசு 10, 15 வருடமாக படுத்திருந்த ஒரு கல், பெரிய பாறையை எப்படியாவது கேட்டு வாங்கித் தருகிறேன். அதை நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னேன். அவரும் ஒருவரிடத்தில் கேட்டு வாங்கி கொண்டு சென்று அதை வைத்துக்கொண்டு சிலவற்றை செய்து கொண்டிருக்கிறார். இப்படி பல சொல்ல முடியாத விஷயங்களெல்லாம் கூட, நம்பிக்கையே இல்லாதவர்கள் கூட சிலவற்றைப் பார்த்துவிட்டு இதுமாதிரி இருந்தால் நன்றாக இருக்கும் என்றெல்லாம் கேட்கிறார்கள்.

அதனால், பசு என்பது விருத்தி அம்சத்திற்கான அடையாளம். முழுமை, ஒரு பசு ஒரு வீட்டில் காலடி வைக்கிறதென்றால் ஒரு முழுமை பெறுகிறது. அங்கு ஒரு ஜீவ சக்தி உருவாகிறது. தானாக பசு வருவதும். வந்த இடத்தில் பசு தானாக கோமியம் இடுவது என்பதும், சாணமிடுவது என்பதும் பெரிய விஷயம். ஆனால், தற்பொழுது அதை வரவழைக்கிறோம். விருப்போ, வெறுப்போ ஏதாவது ஒரு வகையில் பசு வந்துவிட்டாவது செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் கிரகப் பிரவேசத்தில் அதுபோல செய்கிறோம்.

Friday, December 10, 2010

ஊழலில் இந்தியாவிற்கு 9வது இடம்

புதுடில்லி : காமன்வெல்த் போட்டி ஊழல், ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழல், 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு என நாடே ஊழலில் திளைத்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவில் சர்வதேச ஊழல் ஒழிப்பு தினம் கொண்டாடப்படுவது அதைவிட கேலிக்குரியது. சர்வதேச அளவில் இந்தியா ஊழலில் 9வது இடத்தைப் பிடித்திருப்பது மக்களுக்கு சற்று ஆதரவளி்க்கும் செய்தியாக உள்ளது. சர்வதேச அளவில், 91 ஆயிரம் பேரிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டதாகவும், தேசிய அளவில் ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், இந்தியாவில் 54 சதவீதம் லஞ்சம் தருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் (அடைப்புக்குறிக்குள் சதவீதம்) முதலிடத்தில் லைபீரியா (89%), அதனைத்தொடர்ந்து வரும் இடங்களில் உகாண்டா (86%), கம்போடியா (84%), சியரோ லியோன் (71%), நைஜீரியா (63%),  ஆப்கானி்ஸ்தான் (61%), போர் பதற்றமிக்க ஈராக் மற்றும் செனகல் (56%), இதற்கடுத்து இந்தியா (54%) உள்ளது.  கல்வி, நீதித்துறை, மருத்துவ சேவைகள், காவல்துறை, பத்திரப்பதிவு மற்றும் அனுமதி சேவைகள், வசதிகள், வரி, நிதி மற்றும் சுங்க துறைகளை கணக்கில் கொண்டு நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில் இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் கடந்த 3 ஆண்டுகளில் லஞ்சம் பெறுவது பெருமளவில் அதிகரித்து வருவதாகவும், இந்தியாவில் கடந்த 12 மாதங்களில் இது உச்சகட்ட அளவை எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில், இதில் இந்தியாவின் பங்கு 25 சதவீதமாகவும், ஆசிய பசிபிக் நாடுகளின் அடிப்படையில் 11 சதவீதமாக உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லஞ்சம் பெறுவதில் அரசியல்வாதிகளை மிஞ்ச யாருமில்லை என்ற கருத்து இந்திய மக்களிடையே மேலோங்கி இருப்பதாகவும், 5 துறைகளை மட்டும் கணக்கில் கொண்டதில், அரசியல்வாதிகள் 5க்கு 4.2 சதவீதமும், காவல் துறை (4.1 சதவீதம்), பார்லிமெண்ட் மற்றும் சட்டத்துறை (4 சதவீதம்), அரசு அதிகாரிகள் (3.5 சதவீதம்), தனியார் துறை, என்ஜிஓ மற்றும் நீதித்துறை (3.1 சதவீதம்), மீடியா துறை (3 சதவீதம்) , மத சார்பிலான அமைப்புகள் (2.9 சதவீதம்), ராணுவம் (2.8 சதவீதம்) என்ற அளவில், சர்வதேச அளவில் லஞ்சம்/ஊழல் நீக்கமற நிறைந்திருப்பதாக அந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற உலகின் விலையுயர்‌ந்த கோட் சூட்

புதுடில்லி பைனஸ்ட் பேப்ரிக் ஆடைகள் தயாரிப்பில் சர்வதேச அளவில் முன்னணியில் உள்ள இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் டோர்மியூலி நிறுவனம், உலகிலேயே விலையுயர்ந்த கோட் சூட்டை அறிமுகம் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது..இந்த விலையுயர்ந்த கோட் சூட் "வான்குஷ் 2" என்ற பேப்ரிக்கால் தயாரிக்கப்பட்டு உள்ளதாகவும், அனைவரையும் கவரும் வகையில் இதன் வேலைப்பாடு உள்ளதாகவும் விலையின் அடிப்படையில், இது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்க உள்ளதாக இந்த ஆடையை வடிவமைத்த ஆடை கலை நிபுணர் அலெக்சாண்டர் அமோசு தெரிவித்தார். இதுகுறித்து, நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : இந்த கோட் சூட்டின் விலை ரூ. 51 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது (அமெரிக்க டாலர்கள் மதிப்பில் 1,13,000 டாலர்கள்). இந்தியாவில் பொருளாதார ஸ்திரத்தன்மை உள்ளதாகவும், இதனை கருத்தில் கொண்டு இந்தியாவில் மார்க்கெட்டிங் துறையை அமைக்க திட்டமிட்டுள்ளது. தற்போது இந்திய சந்தையில் களமிறங்கி உள்ள தங்கள் நிறுவனம், அண்டை நாடுகளான இலங்கை, நேபாளம் உள்ளிட்ட நாடுகளில களம் காண இருப்பதாக அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, December 9, 2010

காதலுக்கு ஒரு சோதனை கதை...

ஒரு அரசன் தன் மகள் ஒரு எழ்மையானவனை காதலிக்கிறாள். என்று தெரிந்து தன் மகளிடம் பேசிபார்த்தார் ஆனால் மகள் பிடிவாதமாக"அவனைத்தான் கல்யாணம் செய்து கொள்வேன். இல்லையென்றால் நான் செத்துவிடுவேன்" என்று மிரட்டினால்...'காதல் சாகவும் துணியும்' என்று எண்ணிய அரசன் மகளின் காதலின் உண்மை தன்மையை புரியவைக்கவேண்டும். என எண்ணி தன் மகளிடம் ஒரு நிபந்தனை வைத்தார். அதாவது "உங்களை ஒருநாள் 24 மணிநேரம் முழுவதும் ஒருவர் ஒருவரை  பார்க்க முழு நிர்வாணமாக கட்டி வைத்து விடுவோம்...நீங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து  அந்த 24 மணி நேரத்தை கடந்தால் உங்கள் காதலுக்கு எனக்கு முழுசம்மதம்" என்கிறார். இதற்கு காதலர்கள் சம்மதிக்கிறார்கள். ஏனென்றால் அந்த காதல் பல கவிதைகள் எழுதி, பாடி, பேசி வாழ்ந்த காதல் அல்லவா.."இது என்ன பெரிய நிபந்தனை  நாங்க வெற்றிபெற்று காதலில் ஜெயித்து காட்டுகிறோம்" என்று காதலர்கள் சொல்ல...அரசன் இருவரையும் எதிர் எதிரே கட்டி போடா ஆணையிட்டான். இருவரையும் முழு நிர்வாணமாக ஒரு தூணில் நிற்கவைத்து கட்டி போட்டார்கள். அப்போது இருவருக்கும் கொஞ்சம் வெட்கி தலை குனிந்து ஒருவரை ஒருவர் ஓரக்கண்னால் பார்த்து தம் காதல் வெற்றியடையும் என்று எண்ணி பூரிப்பில் இருந்தார்கள். நேரம் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்துகொண்டிருந்தது. இப்போது சில நேரம் சென்றுவிட்டது. காதலனுக்கு சிறுநீர் கழிக்கணும் போல ஒரு உணர்வு ஆனால் அதை அடக்கி கொண்டான். இதேபோன்று அந்த பெண்ணுக்கும்...இருவரும் அடக்க முயற்சி செய்து பார்த்தார்கள். முடியவில்லை வெளியேற்றி விட்டார்கள். இப்போது வெளியேறிவிட்டது. அந்த இடமே நாற்றம் அடிக்க ஆரம்பித்து விட்டது. இருந்தும் முக சுளிப்புடன் சமாளித்தார்கள். ஆனால் காதலனின் வயிறு சாமாளிக்க முடியவில்லை அடுத்த மலகடனை வெளிற்ற நேரம் வந்து விட்டது. இந்த முறை அவன் முயற்சி செய்தும் பலன் இல்லை மலத்தை வெளியேற்றிவிட்டான். நாற்றம் முன்னரை விட இப்போது ரொம்ப அதிகமாகிவிட்டது. என்ன செய்வான்பாவம் அவன் முயற்சிக்கு இயற்கை உபாதைகள் கட்டுப்படவில்லை அந்தவேளையில் கட்டுபாட்டை மீறி கொண்டு வந்துவிட்டது. இப்போது காதலின் முகம் பல கோணல்களை வெளிபடுத்தி விட்டது. "என்னடா நம் காதலன் இப்படி ஒரு நிலையில் இருக்கிறானே..என்ன ஒரு அருவருப்பான நிலை" என்று மனதுக்குள் எண்ணி வெறுப்படைந்தால். இப்போது காதலர்கள் ஒரு முகத்தை ஒருவர் பார்க்கவே அருவருப்பாக இருந்த நிலை முகத்தை திருப்பி கொண்டு தங்களை விடுவித்தால் போதும் என்று எண்ணினார்கள். காதலர்களை விடுவித்தாகிவிட்டது. ஆனால் அவர்களுக்குள் முன்னே இருந்த காதல் இல்லை...

காதல் எனபது உணர்வில் ஏற்படுவதை விட கவர்சியில்தான் ஏற்படுகிறது. அது கவிதையாக, வசனமாக, வீரமாக எல்லாம்  ஒன்றன் பின் ஒன்றாக கொழுந்துவிட்டு எறியும் ஆனால் அவையெல்லாம் உடல் சூட்டின் வேகம் தணியும் வரை...நடைமுறையில் உள்ள காதலர்களை எது சொல்லியும் சமாதானபடுத்த முடியாத சூழ்நிலைதான்  இருக்கும். அவர்களே உண்மை தன்மை உணர்ந்துவிட்டால். உணர்ந்து ஒருவேளை கடந்துவிட்டால்  உண்மை காதலையும் அவர்கள் உணரலாம்...அதன்பின் அந்த காதலில் 'பிரிவு' என்றுமே இருப்பதில்லை. அதனால் உண்மை காதலை காதலியுங்கள். கவர்ச்சி ஒரு தேவைமட்டும்தான் அது என்றுமே காதலுடன் வருவதில்லை....

Wednesday, December 8, 2010

சிசேரியனுக்கு போட்டியாக ஹிப்னோபெர்த்திங்.........

இந்தியாவில் சுமார் 18- 25% பிறப்புகள் சிசேரியன் என்றாலும்,சில நாடுகளில் 50 -50% பிஸ்கேட் அளவிற்கு சிசேரியன் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.

இதை எப்படிக் குறைக்கலாம் என்று ரூம் போட்டு யோசித்துகொண்டிருக்கிறார் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குனர் டாக்டர். மார்கரெட் சேன்.

சிசேரியன் தேவைப்பாடாத சூழலில் வலுக்கட்டாயமாக செய்வது இரண்டு விதத்தில் பாதிக்கும். ஒன்று தாயின் ஆரோக்கியம் கெடும். இரண்டு பிறக்கும் பிள்ளையின் உளவியலை பாதிக்கும். அதாவது குழந்தை பிறக்கும் காலம் நெருங்கும்போது உள்ளுணர்வாக அதன் வெளியேறும் பாதையை பற்றி உணர்ந்து,நாம் இப்படி தான் வெளியே செல்லவேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும்,திடீரென பிளேடு போட்டு பாதையை மாற்றினால் வயிற்றில் இருக்கும் பச்சைபிள்ளைக் குழம்பிபோகும். நினைத்தது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கிறதே என்ற முரண்பட்ட எண்ணம் அங்கே உருவாகும். மேலும் பிரசவ காலத்தில் தாயின் வேதனைகள் ஒரு அலை இயக்கமாக குழந்தைகள் மனதில் பதியும்.மேலும் C-Section பண்ணும்போது பயன்படுத்தபடும் ஆயுதங்கள், பூ போல வர வேண்டிய குழந்தைக்கு ஒரு மிரட்சியான உணர்வை தந்து மிரட்டும். இப்போது சொல்லுங்கள் உங்கள் செல்லக் குழந்தை உளவியல் ரீதியாக பயப்பட உங்கள் தாய்மை உணர்வு அனுமதிக்குமா?

“..........................................?!!!!! ”

கவலைபடாதீர்கள் ! என்னிளம் தாய்மார்களே....உங்களை இந்த கவலையில் இருந்து மீட்க வருகிறது ஹிப்னோபர்த்திங் என்றொரு உளவியல் பயிற்சி.

அதென்ன ஹிப்னோபர்த்திங்....?.

“ஹய்யா பிள்ளை இனி நாங்க பெத்துக்க தேவலையா? ”என்று குதிக்கும் இளம் தோழிகளே ஒரு நிமிடம்...!..நாட்டுக்கு ராணியாக இருந்தாலும் வீட்டுக்கு பிள்ளையை நீங்கள்தான் பெற்றுதரவேண்டும்..! ஆனால் குறைந்த வலியோடு நிறைந்த ஜாலியான அனுபவமாக,அதாவது பிள்ளையார் கோயிலுக்கு சென்று சுண்டல் வாங்கி சாப்பிடுவது எப்படி சுலபமோ அத்தனை சுலமாக....? இல்லை ! இல்லை! சுகமாக அத்தனை சுலமாக பிள்ளை பெற்றுக்கொள்ளும் நுட்பம்தான் ஹிப்னோபர்த்திங்.

அந்த காலத்தில் கூட்டு குடும்பமாக இருக்கும். நாலைந்து பிள்ளை பெற்ற பெரிய மனுஷிகள் நாலு பேர் இருப்பார்கள்.அதைவிட பழம் தின்று கொட்டை போட்ட பாட்டி என்ற ஒரு உறவு இருக்கும்.கர்ப்பிணிகள் வீட்டில் இருக்கும்போது,இந்த சொந்த பந்தங்கள் சூழ்ந்தகொண்டு சொந்த கதை சோகக் கதையோட பத்து பிள்ளை பெத்த கதையும் சொல்லி திரியும். புதிதாக கருத்தரித்த பெண்கள் இந்த கதைகளை அதில் உள்ள சவால்களை கேட்டுகொண்டு வரும்போது உளவியல் ரீதியாக பிள்ளை பேறுக்கு தயாராகிவிடுவார்கள். அந்த பரவசமான அனுபவத்தை உணரவேண்டும் என்ற ஆவல் மேலோங்கி நிற்கும். மேலும் பிரசவங்கள் பெண்கள் பிறந்த வீட்டில் நிகழ்ந்தன.ஏனெனில் முன்பின் தெரியாத மருத்துவமனை சூழலில், பிள்ளை பெற்றுக் கொள்வதை விட வீட்டில் பெண்களின் மனோநிலை மிக இளகுவாக இருக்கும். குழந்தை எந்தவிதமான சிரமும் இன்றி வெளியேறி விடும் காலப்போக்கில் வீட்டில் நிகழும் பிரசவங்களில் சரியான அனுபவமின்றி அணுகியதால் உயிரழப்புகள் நிகழ்ந்தன. அதன் பின்பு மருத்துவமனைகளில் பெற்றுக்கொள்வதுதான் பாதுகாப்பு என்று வலியுறுத்தப்பட்டது.

கூட்டுக் குடும்ப உறவுகள் முறிந்தபின் பெரும்பாலும் தனிமைதான்.இறுக்கமான மனநிலை,மற்றும் தேவையற்ற தகவல்களை மனதில் போட்டு உளைத்துகொள்ள நிறைய சந்தர்ப்பங்கள் வர, பிள்ளைப்பேறு கடினமான ஒன்றாகிவிட்டது.

சரி இது வர்த்தக உலகம். இதில் என்ன செய்யமுடியும் !

எளிதான பிள்ளைப்பேறுக்கு யோகாவெல்லாம் இருக்கிறதே என்கிறீர்களா ? அதைவிட மிகவும் சுலபமான உளவியல் முறைதான் ஹிப்னோபர்த்திங்.

பிரசவங்களின் போது எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கெல்லாம் காரணம், பிரசவத்தை பற்றிய தேவையற்ற அச்சம்,தவறான தகவல்களை ஆழ்மனதில் பதிந்து கொள்வது. தேவையற்ற குழப்பங்கள், இதன் தொடர்ச்சியாக வரும் மன அழுத்தம்தான்.

சரி...! ஹிப்னோபர்த்திங்கில் என்ன நடைபெறுகிறது. இந்தியாவில் ஹிப்னோபர்த்திங் பயிற்சி தருவதில் முன்னனி வகிக்கும் உளவியல் சிகிச்சை நிபுணர் திருமதி.அனுராதா ஜெயச்சந்தர் ( info@basixinc.org ) என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

மனதில் இரண்டு வகை உண்டு. ஒன்று மேல் மனம், இதனை (Conscious Mind ) என்றும், இரண்டாவது ஆழ்மனம் (Sub Conscious Mind ).மேல் மனம் எப்போது கூடுதல் எச்சரிக்கை உணர்வோடு செயல் படும்.எது செய்தாலும் நூறு கேள்வி கேட்கும். இப்படி கேள்வி கேட்பதும் அதீத எச்சரிக்கை உணர்வும் சில நேரங்களில் இயல்பான பிள்ளை பேறுக்கு தடையாகிவிடும். அதாவது குழந்தை வெளியேறும் போது அதன் பாதை இலகுவாகி வழி விட வேண்டும்.மனம் இறுக்கமாகும் போது பாதை இறுக பிள்ளை பேறு சிரமமாகிவிடுகிறது.

ஏன் எனில் காலம் காலமாக பிள்ளை பேறு பற்றி கேள்விப் படும் தகவல்கள், பார்த்த அனுபவங்கள் உங்கள் மேல் மனதில் ஒரு தவறான பிம்பத்தை உண்டாக்கி அதனை ஆழ் மனதில் பதிய செய்கிறது. ஆழ்மனதில் பதியபட்ட அச்சம் தான் இத்தகைய வலிமிகு பிள்ளைப் பேற்றுக்கெல்லாம் காரணம்.

ஆனால் ஆழ்மனதின் ஒரு ஆச்சர்யதக்க இயல்பு என்னவெனில் அதில் நீங்கள் ஒரு நம்பிக்கையான பதிவை ஏற்படுத்திவிட்டீர்கள் எனில், அது கேள்வி கேட்காமல் சொன்னதை செய்யும்.
உதாரணமாக ஹிப்னோ பர்த்திங் பயிற்சியின் போது இந்த ஆழ்மனதில் குழந்தை பேறு, குழந்தை , உறவுகள் பற்றி மகிழ்ச்சியான மற்றும் மென்மையான தகவல்கள் பதியப்படும். தொடர் பயிற்சியில் வயிற்றில் உள்ள குழந்தையோடு தாய் பேசவும், அதற்கு குழந்தை ஒத்துழைப்பதையும் அனுபவப்பூர்வமாக உணரமுடியும் பிரசவகாலத்தில் அதே உணர்வோடு குழந்தையோ மானசீகமாக உரையாடி வலியின்றி,சிரமமின்றி வெளியே கொண்டு வரமுடியும்.

ஹிப்னோபர்த்திங் உளவியல்ரீதியான ஒரு அணுகுமுறை.இப்பயிற்சி பல்வேறு நிலைகளில் மனோவசிய நுட்பத்தின் அடிப்படையில் தரப்படுகிறது.

முதல் நிலை : தேவையற்ற எண்ணங்களை போக்குவது ( De Conditioning the Mind ).கருவுற்ற தம்பதிகளிடம் பேசி அவர்கள் மனதில் கர்ப்பம் பிள்ளைபேறு பற்றிய அச்சம் மற்றும் சந்தேகங்களை ஹிப்னோஸிஸ் மூலம் நீக்குவது.

இரண்டாவது நிலை : எண்ணத்தை நெறிப்படுத்துவது ( Re Conditioning the Mind ) கர்ப்பம் குறித்து ஆரோக்கியமான எண்ணங்களை மனதில் பதியசெய்வது.

மூன்றாவது நிலை : மூச்சு பயிற்சி உட்பட எளியமுறையில் உடல்வலிமை காக்கும் பயிற்சிகள்.

நான்காவது நிலை : வயிற்றில் உள்ள குழந்தையுடன் மானசிகமாக பேசுவது. நாம் புராணக்கதைகளில், அபிமன்யூ சக்கரவியூகம் பற்றி அறிந்த கதை படித்துள்ளோம் அல்லவா அதுபோலதான் இதுவும். ஆச்சர்யத்தக்க செய்தி என்னவெனில் நீங்கள் மானசீகமாக பேசத்தொடங்கிய சில நாட்களில் உங்கள் செல்லபிள்ளை நீங்கள் சொல்வதை கேட்பதை அசைவின் மூலம் உணரமுடியம். கதையல்ல நிஜம்...உங்கள் குரல் அல்லது உங்கள் கணவரின் குரலை கேட்கும்போது வயிற்றில் குழந்தையின் அசைவின் மூலம் அதன் செயல்பாட்டை உணரமுடியும்.

ஐந்தாவது நிலை : மனோவசியகலையில் சுயவசியம் என்று ஒரு நுட்பம் உள்ளது. குறிபிட்ட முறையில் உங்கள் ஆழ்மனதை அறிந்து உங்களுக்கு தேவையான கட்டளைகளை தரமுடியும். ஏறக்குறைய நாம் தியானம் செய்து சங்கல்பம் மேற்க்கொள்வது போலதான். சுயவசிய முறையில் ஒரு கற்பனை பிள்ளை பேற்றை நீங்களே பாவனையில் அனுபவிக்கவேண்டும். அவ்வாறு அணுகும்போது அது எத்தனை சுலமாக அமையவேண்டுமோ அத்தனை சுலபமான நிகழ்வாக பாவனை செய்யுங்கள். நீங்கள் தரும் கட்டளைதான் உங்கள் ஆழ்மனம் செயல்படுத்தும்.

கவலைவேண்டாம் மேற்கண்ட நான்கு பயிற்சிக்கு பின் உங்கள் மனம் நீங்கள் சொல்வதை மட்டுமே கேட்கும் என்பதால்,பாவனையான பிள்ளைபேற்றில் ஆழ்மனதில் ஆரோக்கியமான பதிவை மட்டுமே செய்யும்.

ஒரு குழந்தை வெளிவரும் போது சிரமமின்றி ஒரு இணக்கமான சூழலில் தாயின் மனம் இருக்கும்போது, குழந்தை இயல்பாகவே மனவலிமை மற்றும் ஆரோக்கியத்துடன் இருக்கும்.ஹிப்னோபர்த்திங் மூலம் பிறக்கும் குழந்தைகள், சாதாரணமான முறையில் பிறக்கும் குழந்தைகளைவிட கூடுதல் அறிவுக் கூர்மையுடன் இருக்கும்.வயிற்றில் இருக்கும்போதே தாய் தன் குழந்தையுடன் உரையாட தொடங்கிவிடுவதால்,குழந்தை பிறந்தவுடன் பெற்றோரின் சொல்லுக்கு மறுவார்த்தை பேசாமல் சமர்த்தாக இருக்கிறது என்கிறார்கள் பிள்ளைப் பெற்றவர்கள்.

மேற்கத்திய நாடுகளில் பரவி வரும் இந்த ஹிப்னோ பர்த்திங் முறை இப்போது இந்தியாவிலும் பரவி வருகிறது. மேற்கத்திய நுட்பத்துடன் இந்தியாவின் பாரம்பர்யமான யோகமுறைகளையும் இணைத்து பயிற்சி தருவதால் வெளிநாட்டினரும் இங்கே படையெடுக்கின்றனர்.

குழந்தைகள் உலகின் எதிர்கால நட்சத்திரங்கள்.குழந்தை பெற்றுக்கொள்வதில் ஒரு திட்டமிடல் வேண்டும். “SUNDAY- னா ரெண்டு” என்ற அலைபாய்ந்துவிட்டு MONDAY வில் இருந்து ஓய்ந்துவிடக்கூடாது. குடும்பவாழ்க்கையை தேர்ந்தெடுத்தபின் எதிர்கால ஆரோக்கியமான நிர்மாணிக்கும் பொறுப்பும் ஆற்றலும் இருக்கிறது என்பதை உணர்ந்து செயல்படவேண்டும்.

நீங்கள் உங்கள் வாரிசை உருவாக்கவில்லை, தேசத்தின் ஏன் உலகின் வருங்காலத் தலைவர்களை உருவாக்குகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Monday, December 6, 2010

மக்களின் ஒழுக்கத்தை சோதிக்கும் அரசு!

சென்னையில், யோகிராம் சுரத்குமார் ஜெயந்தி விழா சமீபத்தில் நடந்தது. இதில், "அமுதசுரபி' ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் பேசும் போது, "தனியே நடந்து சென்ற பிரம்மசாரி ஒருவனை, அவ்வழியே, தலையில் கள் பானை, இடுப்பில் குழந்தை, கையில் அரிவாளுடன் சென்ற வேசி இடைமறித்தாள். "உனக்கு மூன்று வாய்ப்பு தருகிறேன். ஒன்று, என் ஆசைக்கு இணங்கு அல்லது இந்த மதுவை குடி, இல்லை இந்த குழந்தையை கொல். ஏதேனும் ஒன்றை செய்தால் தான், உன்னை போக விடுவேன் என்றாள். ஆசைக்கு இணங்கினால், பிரம்மசாரியத்திற்கு இழுக்கு; குழந்தையை கொன்றால் பாவம்; மது குடித்தால் பிரச்னை இல்லை என நினைத்து, அதை குடித்தான். "போதை தலைக்கேறியது; முதலில், ஆசைக்கு தடையாக இருந்த குழந்தையை கொன்றான்; பின் வேசியை அடைந்தான். எந்த பாவமும் செய்யக்கூடாது என நினைத்த பிரம்மசாரியை, அனைத்து பாவங்களையும் செய்ய வைத்தது மது' என்றார். இதை கேட்ட ஒருவர், "மக்களோட ஒழுக்கத்தை சோதிக்க தான், நம்ம அரசே மது விற்பனை செய்யுது போல...' என, முணுமுணுத்தார்.

Saturday, December 4, 2010

கும்பாபிஷேகம் : சில தகவல்கள் ...

கும்பாபிஷேகத்தின் போது என்னென்ன சடங்குகள் நடத்தப்படும் என்பதை பார்த்திருப்பீர்கள். அவற்றிற்குரிய விளக்கத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

ஆவாஹனம்

ஆவாஹனம் என்றால் கும்பத்தில் உள்ள நீருக்குள் மூர்த்திகளை எழுந்தருள செய்தல் என்பது பொருள். கும்பத்தை முதலில் கோயிலில் உள்ள தெய்வத்திருவின் அருகில் வைத்து தர்ப்பை, மாவிலை ஆகியவற்றைக் கொண்டு மந்திரங்கள் ஓதி, பிம்பத்தில் விளங்கும் மூர்த்தியை கும்பத்தில் எழுந்தருளச் செய்வார்கள். பிறகு அந்த கும்பத்தை யாகசாலைக்கு எழுந்தருளச் செய்வார்கள். தர்ப்பையின் மூலம் கும்பத்தில் உள்ள தெய்வீக சக்தியை பிம்பத்திற்கு மீண்டும் செலுத்துவார்கள்.

கும்பம்

யாகசாலையில் மந்திரம், கிரியை, தியானம் ஆகியவற்றுடன் வளர்க்கப்பட்டு எழும் புகையுடன் வேத ஒலி, சிவாகம ஒலி, மறை ஒலி ஆகியவற்றுடன் பக்தர்களின் நல்ல எண்ணங்களும், எங்கும் நிறைந்திருக்கின்ற திருவருள் சக்தியை தூண்டிவிட்டு கும்பத்தில் விளங்கச் செய்யும். அப்போது கும்பம் தெய்வீக சக்தி பெறும். இந்த கும்பத்தை சிவனின் வடிவமாக ஆகமங்கள் கூறுகின்றன.

பாலாலயம்

கும்பத்தை கோயிலில் உள்ள தெய்வச்சிலை அருகில் வைப்பார்கள். தர்ப்பை, மாவிலை கொண்டு மந்திரங்கள் ஓதி, தெய்வ வடிவில் விளங்கும் மூர்த்தியை கும்பத்திற்கு மாற்றுவார்கள். பின்பு அதை வேறிடத்திற்கு எழுந்தருளச் செய்வார்கள். இதை  பாலாலய பிரவேசம் என்பர்.

கிரியைகள்

கும்பாபிஷேகம் நடக்கும்போது ஒரு காலத்தில் 64  கிரியைகள் செய்யப்பட்டன. காலப்போக்கில் 55 கிரியைகள் செய்யப்பட்டன. ஆனால் தற்போது எல்லா கிரியைகளும் செய்யப்படுவதில்லை. 64ல் முக்கியமான 13 கிரியைகளை மட்டும் தேர்ந்தெடுத்து கும்பாபிஷேகத்தை நடத்துகின்றனர்.

ஆசாரியவர்ணம்

கும்பாபிஷேகத்திற்கென கிடைக்கும் பொருளுக்கு பூஜை செய்ய வேண்டும். இதை தன பூஜை என்பர். பூஜை செய்த பணம் அல்லது பொருளில் ஒரு பகுதியை கட்டட வேலைக்கும், ஒரு பகுதியை நித்திய, மாதாந்திர, விசேஷ நட்சத்திர பூஜை உற்சவத்திற்கும், மூன்றாவது பாகத்தை ஆபரணங்கள் வாங்கவும் ஒதுக்குவார்கள். இப்படியே கோயில் காரியங்கள் சம்பந்தப்பட்ட 11 பாகமாக இந்த செல்வத்தை பிரிப்பார்கள். கும்பாபிஷேகத்தை நடத்தும் பிரதான ஆசாரியரை வணங்கி, இந்த செல்வத்தைக் கொண்டு குடமுழுக்கு நடத்தி தாருங்கள் என கேட்டுக்கொள்ள வேண்டும். இதையே ஆசாரியவர்ணம் என்பர்.

அனுக்ஞை

கோயில் பழுது பார்க்கப்பட்டு திருப்பணிகள் நிறைவு பெற்ற பிறகு, ஒரு நல்ல நாளில் கும்பாபிஷேக நிகழ்ச்சியை முன்னின்று நடத்தி வைப்பதற்கு தகுதியான ஒருவரை தேர்ந்தெடுப்பதையே அனுக்ஞை என்கிறார்கள். விநாயகர் சன்னதி முன்பு இந்த நிகழ்ச்சி நடக்கும். சம்பந்தப்பட்டவரே கும்பாபிஷேகத்தை நடத்தித் தர அனுமதி தரவேண்டும் என விநாயகரிடம் வேண்டி கேட்டுக்கொள்வதே அனுக்ஞை ஆகும்.

பிரவேசபலி

கும்பாபிஷேகம் செய்யும் இடத்திலிருந்து எட்டு திசைகளிலும் வசிக்கின்ற ராட்சதர் முதலான தேவதைகளுக்கு உணவு கொடுத்து எழுப்பி, அவர்களை கடல், மலை, காடு, ஆறு, மயானம் ஆகிய இடங்களில் சென்று இருங்கள் என திருப்திப்படுத்தி வழி அனுப்புவதே பிரவேச பலி ஆகும். கும்பாபிஷேகங்களில் மட்டுமின்றி, கோயில்களில் திருவிழா நடக்கும்போதுகூட இதை செய்ய வேண்டுமென்று ஆகமங்கள் கூறுகின்றன.

வாஸ்துசாந்தி

ஆகமங்களிலும், சிவமகா புராணத்திலும் வாஸ்து பற்றி கூறப்பட்டுள்ளது. அந்தகாசுரன் என்பவனை கொல்வதற்காக தேவர்கள் சிவபெருமானிடம் கோரிக்கை வைத்தனர். சிவபெருமான் தனது வியர்வைத் துளியிலிருந்து ஒரு பூதத்தை உருவாக்கி அந்தகாசுரனை வதைத்தார். அந்த பூதம் சிவனிடம் பல வரங்கள் பெற்று உலகத்தை வருத்தியது. சிவபெருமான் பூதத்தை அடக்க அதிபவன் என்பவரை சிருஷ்டித்து அனுப்பினார். அதிபவன் அந்த பூதத்தின் உடலின்மீது 53 தேவதைகளை வசிக்க செய்து, மாயக்கயிறுகளால் கட்டினார். இதனால் இவர் வாஸ்துபுருஷன் என பெயர் பெற்றார். வாஸ்து புருஷனால் குடமுழுக்கு கிரியைக்கு இடையூறு நேராதபடி 53 தேவதைகளுக்கும் பூஜை, பலி, ஹோமம் ஆகியவற்றால் சாந்தி செய்ய வேண்டும். இதுவே வாஸ்துசாந்தி ஆகும்.

ரக்ஷா பந்தன்

காப்பு கட்டுதல் என இதற்கு பொருள். சிவாச்சாரியார்கள் நாகராஜனுக்கு பூஜை செய்து, மந்திரித்த மஞ்சள்கயிறை வலது மணிக்கட்டில் கட்டிக்கொள்வார்கள். கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ளும் சிவாச்சாரியார்களின் குடும்பத்தில் எதிர்பாராதவகையில் ஏதாவது தீட்டு ஏற்பட்டால் காப்பு அவிழ்க்கப்படும்வரை அந்த தீட்டு அவர்களை பாதிக்காது.

கடஸ்தாபனம்

கும்பாபிஷேகத்தில் மிக முக்கியமானது கடஸ்தாபனம்.  கலசம் நிறுவுதல் என்பது இதன் பொருள். தங்கம், வெள்ளி, தாமிரம், மண் ஆகிய ஏதாவது ஒன்றில் கும்பங்கள் செய்யப்படும். கும்பங்களை இப்படித்தான் அமைக்க வேண்டும் என்ற வரையறைகள் உள்ளன. இவ்வாறு அமைக்கப்பட்ட கும்பங்களை குறைகள் இல்லாமல் மந்திரித்து, அக்னியில் காட்டுவார்கள். சிவப்பு மண்ணை கும்பத்தின் மீது பூசி, நூல் சுற்றி ஆற்றுநீர் அல்லது ஊற்று நீரால் நிரப்புவார்கள். கும்பத்தின் மேல் வாய் பகுதியில் மாவிலைகளை செருகி, தேங்காய் வைப்பார்கள். கும்பத்திற்குள் நவரத்தினம், தங்கம், வெள்ளி, நவதானியம் ஆகியவற்றை பரப்புவார்கள். எந்த மூர்த்திக்கு குடமுழுக்கு நடக்கிறதோ அந்த மூர்த்தியின் உடலாக அந்த கும்பம் கருதப்படும்.

அஷ்டபந்தனம்

கும்பாபிஷேகத்தை அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் என சொல்வதுண்டு. பீடத்தின்மீது வைக்கப்படும் தெய்வ திருவுருவங்கள் அசையாமல் உறுதியுடன் நிலைத்து நிற்க, கொம்பரக்கு, சுக்கான்தான், குங்குலியம், கற்காவி, செம்பஞ்சு, ஜாதிலிங்கம், தேன்மெழுகு, எருமையின் வெண்ணெய் ஆகிய எட்டுவகை மருந்துகளை கலந்து சார்த்துவார்கள். அஷ்டம் என்றால் எட்டு என பொருள். இந்த எட்டுவகை மருந்துகளை சார்த்துவதற்கே அஷ்ட பந்தனம் என பெயர்.

மிகுத்சம்கிரஹணம்

இதற்கு மண் எடுத்தல் என பொருள். கும்பாபிஷேகத்தின்போது அங்குரார்ப்பணம் எனப்படும் முளையிடுதல் நிகழ்ச்சி நடக்கும். மண்ணைத்தோண்டி பாலிகைகளில் இட்டு, நவதானியங்களை தெளித்து, முளைப்பாலிகை அமைப்பார்கள். இதுவே மிகுத்சம் கிரகஹணம் எனப்படும்.

Friday, December 3, 2010

நிகழ்கால பீனிக்சாக உருவெடுத்த விக்கிலீக்ஸ்

ஸ்டாக்ஹோம் : அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் இரகசிய பரிமாற்றங்களை வெளியிட்டுவரும் விக்கிலீக்ஸின் இணையத் தள முகவரி ‘கொல்லப்பட்ட’ 6 மணி நேரத்தில் புதிய இணைய முகவரியுடன் அது உயிர்த்தெழுந்துள்ளது. விக்கிலீக்ஸ் இணையத் தளத்தின் சர்வர்களை ‘கொல்ல’ முயன்று அது முடியாமல் போன நிலையில், அதன் இணைய முகவரியான wikileaks.org கொல்லப்பட்டது. இப்படியெல்லாம் தாக்குதல் வரலாம் என்பதை எதிர்பார்த்து காத்திருந்ததுபோல், ஒரு புதிய இணைய முகவரியுடன் wikileaks.ch என்ற பெயரில் 6 மணி நேரத்தில் அந்த இணையத் தளம் மீண்டும் உயிர்பெற்றுள்ளது. விக்கிலீக்ஸ் இணையத் தளத்தின் நிறுவனர் ஜூலியன் அசாங்காவை சர்வதேச போலீஸ் சிவப்பு அறிக்கை வெளியிட்டுத் தேடிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.க்யூ

' ஐ.க்யூ ' வளர்க்கச் சில ஐடியாக்கள்...
* நிறைய வாசியுங்கள்.
* இளமையோடு இருக்க வேண்டும் என்றால், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் ஆர்வமாக இருங்கள். காரணம், வயதான நரி புதிய தந்திரங்களைக் கற்றுக்கொள்ளாது.
* நீங்கள் வலது கைப் பழக்கம் உடையவராக இருந்தால், இடது கையாலும்.... இடது கைப் பழக்கம் உடையவராக இருந்தால் வலது கையாலும் எழுதிப் பழகுங்கள். இதன் மூலம் மூளையின் வேகமும் கவனமும் அதிகரிக்கும். தர்க்க அறிவை வளர்த்துக்கொள்வதற்கு இது ஒரு சின்ன எக்சர்சைஸ் !
* குறுக்கெழுத்துப் புதிர்கள், சுடோகு புதிர்கள் ஆகியவற்றுக்கு விடை காண முயலுங்கள்.
* ஒரு பிரச்சனைக்குத் தீர்வு காணாமல், இன்னொன்றுக்கு தாவிப் பழகாதீர்கள் !

நோபல் பரிசுக்கு தகுதியானவர் கருணாநிதி : ஜெ.,

உண்மையைச் சொல்லப் போனால் கோயில் பிரசாதத்தை சாப்பிட்டு வளர்ந்தவர் தான் கருணாநிதி, அவர் கூட்டங்களில் பேச ஆரம்பித்த போது அவருக்குக் கிடைத்த சம்பளம் ஒரு சிங்கிள் டீயும், இரண்டு வடையும் தான் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கருணாநிதியிடம் கணக்கு கேட்டு அதைத் தராததன் காரணமாக எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட இயக்கம் தான் அதிமுக. அதை மறந்து, 'கணக்கு காட்டுகிறேன்; கண்ணுடையோர் காண' என்ற தலைப்பிலே கருணாநிதி தன்னுடைய கணக்கைக் காட்டியிருப்பது நகைப்புக்குரியதாக இருக்கிறது. இதை கடந்த நூற்றாண்டு மற்றும் இந்த நூற்றாண்டின் இணையற்ற ஜோக் என்று சொல்லலாம்.

இப்படிப்பட்ட சிறந்த நகைச்சுவைக்காக மாநில அளவிலோ, தேசிய அளவிலோ, ஏன் உலக அளவிலோ கூட கருணாநிதிக்கு விருது கிடைத்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

திருவாரூரில் இருந்து திருட்டு ரயில் மூலம் சென்னைக்கு வந்ததாக கருணாநிதியே பல முறை பேசி இருக்கிறார். இது குறித்து 'வனவாசம்' புத்தகத்தின் முதல் பதிப்பில் கருணாநிதியின் நெருங்கிய நண்பராக இருந்த கவியரசர் கண்ணதாசன் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார். உண்மையைச் சொல்லப் போனால் கோயில் பிரசாதத்தை சாப்பிட்டு வளர்ந்தவர் கருணாநிதி.

இவர் கூட்டங்களில் பேச ஆரம்பித்த போது இவருக்குக் கிடைத்த சம்பளம் ஒரு சிங்கிள் டீயும், இரண்டு வடையும் தான். இப்படிப்பட்ட கருணாநிதி இப்பொழுது திடீரென்று 'கணக்கு காட்டுகிறேன்' என்ற தலைப்பில், தன்னுடைய குடும்பம் ஓரளவு வசதியுள்ள குடும்பம் என்று ஒரு புதிய தகவலை தற்போது வெளியிட்டு இருக்கிறார்.

16.1.1946 அன்று கமலாம்பிகா கூட்டுறவு நகர வங்கியில் பங்காளியாக சேர விண்ணப்பித்த போது, அந்த விண்ணப்பப் படிவத்தில் தனக்கு நஞ்சை, புஞ்சை நிலங்கள் ஏதுமில்லை என்றும், வீட்டு மனை ஏதுமில்லை என்றும் தெரிவித்து, தன் வசம் 'நகை, பாத்திரம் வகையறா சுமார் ரூ. 1,000' இருக்கிறது என்று கருணாநிதியே கைப்பட எழுதியிருக்கிறார்.

கருணாநிதியின் தந்தை முத்துவேலர் வசம் என்ன இருந்தது என்பதெல்லாம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த கூட்டுறவு மாத இதழில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

கருணாநிதியும், கவியரசர் கண்ணதாசனும் சென்னையில் இருந்து சேலத்திற்கு ரயிலில் பயணம் செய்த போது, உணவு வாங்கி சாப்பிட பணமில்லாத நிலை இருந்த போது, 'தனக்கு பசி தாங்கவில்லை' என்று கவியரசர் கண்ணதாசன் கருணாநிதியிடம் சொன்னதாகவும், அதற்கு பதில் அளித்த கருணாநிதி, அருகில் இருந்த பழக் கூடையை காட்டி 'திருடலாமா?' என்று கேட்டதாகவும், கவியரசர் கண்ணதாசன் தன்னுடைய 'வனவாசம்' புத்தகத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.

கருணாநிதி தன்னுடைய அறிக்கையில் 1949ம் ஆண்டே மாத ஊதியமாக 500 ரூபாய் சம்பாதித்ததாக கூறியிருக்கிறார். 'மணமகள்' திரைப்படத்திற்கு கதை வசனம் எழுதி 10,000 ரூபாய் பெற்றதாகவும், 'இருவர் உள்ளம்' திரைப்படத்திற்காக 20,000 ரூபாயை பெற்றதாகவும் கருணாநிதி கூறி இருக்கிறார். அப்படி என்றால் கருணாநிதி எந்த ஆண்டிலிருந்து வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்து கொண்டு வருகிறார்? முதன் முதலில் வருமான வரி தாக்கல் செய்த போது அவருடைய ஆண்டு வருமானம் என்ன? அப்போது எவ்வளவு வருமான வரி கட்டினார்? ஆண்டுதோறும் செலுத்திய வருமான வரி எவ்வளவு? என்பதை முதலில் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதல்வர்களுடைய வீடுகளை விட வசதி குறைவான வீட்டில் எளிமையாக வாழ்ந்து வருவதாகவும், அரசு நிலத்தை ஆக்கிரமிக்கவில்லை என்றும் கருணாநிதி தன்னுடைய அறிக்கையில் கூறியிருக்கிறார்.

கருணாநிதிக்கு கோபாலபுரத்திலே ஒரு வீடு, சி.ஐ.டி. காலனியில் ஒரு பங்களா; கருணாநிதியின் மகன் மு.க. ஸ்டாலினுக்கு வேளச்சேரியில் ஒரு பங்களா; சென்னை போட் கிளப்பில் ஒரு மாளிகை; பேரன் கலாநிதி மாறனுக்கு சென்னை போட் கிளப்பில் பிரம்மாண்டமான மாளிகை, பேரன் தயாநிதி மாறனுக்கு போட் கிளப்பில் மிகப் பெரிய பங்களா, மகள் செல்விக்கு பெங்களூரில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் மாளிகைகள், பண்ணை வீடுகள்; தென் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் 25க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி சேனல்கள், நாளிதழ்கள், வார இதழ்கள், பேரன் பெயரில் ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம், சன் ஏர்லைன்ஸ்,

மு.க. அழகிரிக்கு மதுரையில் பல ஏக்கர் நிலங்கள், பண்ணை வீடுகள்; வர்த்தக பலமாடி கட்டடங்கள்; பொறியியல் கல்லூரி; மு.க. தமிழரசு, மு.க. முத்து, கனிமொழி என அனைவரும் மாடமாளிகைகளில் வாழ்ந்து கொண்டு மக்கள் சொத்தை கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றனர்.

பேரன்கள், பேத்திகள் உட்பட, கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தனித் தனி ஆடம்பர மாளிகைகளும் ஏராளமான அசையா சொத்துக்களும் உள்ளன.

கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து சினிமாத் துறையையே கபளீகரம் செய்துவிட்டனர். தன்னுடைய கோபாலபுரத்தின் பின் பகுதியில் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 700 சதுர அடி நிலத்தை கருணாநிதி ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்.

டாடா நிறுவனம் கருணாநிதியின் துணைவிக்கு ரூ. 300 கோடி மதிப்பில் மிகப் பெரிய மாளிகை கட்டித் தர இருப்பதாக நீரா ராடியா- ராசாத்தி உரையாடல்களில் இருந்து தெரிய வருகிறது.

செல்வி மற்றும் ஸ்டாலின் மூலமாக ரூ. 600 கோடியை தயாளு பெற்றுக் கொண்டுதான் தயாநிதி மாறனுக்கு மந்திரி பதவியை கொடுத்ததாக அதே நீரா ராடியா உரையாடல்கள் தெரிவிக்கின்றன.

உண்மை நிலை இவ்வாறிருக்க, கருணாநிதி தன்னை யோக்கியர் போல சித்தரித்துக் கொண்டிருப்பது எள்ளி நகையாடத்தக்கது.

கருணாநிதி தன்னுடைய அறிக்கையில், 2005ம் ஆண்டு அக்டோபர் மாதம், சன் தொலைக்காட்சி நிறுவனத்தின் சார்பில் ரூ. 100 கோடி தரப்பட்டதாகவும், அதில் ரூ. 22 கோடி அளவிற்கு வருமான வரி கட்டியதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார். பத்திரிகை எரிப்பு சம்பவத்திற்கு பிறகு, 200ம் ஆண்டு இறுதியில், 'முழு' தொகை கருணாநிதிக்கு தரப்பட்டதாக பத்திரிகையில் செய்தி வெளியானது.

அதனையடுத்து 'கண்கள் பனித்தன, இதயம் இனித்தது' என்று கருணாநிதியும் அறிவித்தார். அதற்கு வருமான வரி கட்டியதாக கருணாநிதி அறிவிக்கவில்லையே?.

இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி கருணாநிதியின் ஆட்சி. வீராணம் ஊழல், பூச்சிகொல்லி மருந்து ஊழல், மஸ்டர் ரோல் ஊழல், மணல் கொள்ளை, ரேஷன் பொருட்கள் கடத்தல், கள்ள லாட்டரி சீட்டு விற்பனை என அனைத்திற்கும் மூலக் காரணமானவர் கருணாநிதி. விஞ்ஞானப் பூர்வமாக ஊழல் செய்வதில் வல்லவர் என்று சர்க்காரியா கமிஷனிடம் சான்றிதழ் பெற்றவர்.

இப்படி இருக்கும் கருணாநிதி, லஞ்சம், ஊழல் ஆகியவற்றைப் பொறுத்தவரை தான் ஒரு நெருப்பு என்று கூறியிருப்பது நகைப்புக்குரியதாக உள்ளது. பஞ்சுப் பொதியிலே தீப்பொறி பட்டால் எப்படி தீப்பிடித்துக் கொள்ளுமோ அது போல, தன்னிடம் உள்ள ஊழலை உலகம் முழுவதும் பரப்புவதில் தான் ஒரு நெருப்பு என்ற அர்த்தத்தில் கூறி இருக்கிறார் போலும்!.

பொருளாதாரம், விஞ்ஞானம், இலக்கியம், சமாதானம் போன்றவற்றிற்காக நோபல் பரிசு கொடுக்கப்படுகிறது. சிறந்த நகைச்சுவைக்கு நோபல் பரிசு கொடுக்கப்பட்டால், அந்தப் பரிசுக்குத் தகுதியானவர் கருணாநிதி தான். அந்த அளவுக்கு 'கணக்கு காட்டுகிறேன்; கண்ணுடையோர் காண' என்ற தலைப்பில் வெளி வந்துள்ள கருணாநிதியின் அறிக்கையை படித்து தமிழக மக்கள் விலா எலும்பு வலிக்க சிரித்து உடல் வலி வந்தது தான் மிச்சம்!.

தனது 60 ஆண்டுகால பொது வாழ்வில், ஏழை மக்களை ஏமாற்றி, 'தன்' குடும்ப மக்களை ஏற்றிவிட்டிருக்கும் கருணாநிதி, ஆட்சி முடியும் தருவாயில் பொய்க் கணக்கை காட்டி மீண்டும் மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்.

கருணாநிதியின் பொய்க் கணக்கிற்கு பலமான பதிலடி கொடுக்க மக்கள் தயாராகிவிட்டார்கள். இவ்வாறு தனது அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

1994ல் 175...............இன்று 1 லட்சம்!!

புதுடில்லி : அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் கன்சல்டிங் சேவை வழங்கும் முன்னணி நிறுவனமான காக்னிஜண்ட், 1 லட்சம் ஊழியர்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளது. இதன்மூலம், இந்த சேவை வழங்கும் மற்ற ஜாம்பவான் நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ் மற்றும் விப்‌ரோ நிறுவனங்களுடன் கைகோர்க்கும் நி‌லை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக, காக்னிஜண்ட் நிறுவன தலைவரும் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான பிரான்சிஸ்கோ டி ஷோசா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : 1994ம் ஆண்டு 175 ஊழியர்களுடன் துவங்கப்பட்ட தங்கள் நிறுவனம், 16 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி பெற்று, தற்போது 1 லட்சம் ஊழியர்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளதாகவும், இது தங்கள் நிறுவனத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்றும், இந்த 1 லட்சம் ஊழியர்களில் இந்தியாவின் பங்கு 75 சதவீதம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மைல்கல் வெற்றியைத் தொடர்ந்து, (அடைப்புக்குறிக்குள் ஊழியர்களின் எண்ணிக்கை) மற்ற முன்னணி நிறுவனங்களான டிசிஎஸ் (1.74 லட்சம்), இன்போசிஸ் (1.22 லட்சம்) மற்றும் விப்ரோ (1.15 லட்சம்), தங்கள் நிறுவனம் நான்காவது இடத்தை காக்னிஜண்ட் ( 1 லட்சம்) பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, December 1, 2010

எல்லாப் புகழும் தமிழகத்துக்கே!!!!

மற்ற மாநிலங்களை விட, தொழில் துறையில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. தமிழகத்தில் தான், மின் கட்டணம், பஸ் கட்டணம் குறைவு. மத்திய அரசுக்கு நிகரான சம்பளத்தை உயர்த்தும் முதல் மாநிலம் தமிழகம். மற்ற ஊழல்களை விட, அதாவது மாட்டுத் தீவன ஊழல், 1,000 கோடி ரூபாய் (பீகார்), நில ஊழல், 400 கோடி (மகாராஷ்டிரா), மருத்துவ உபகரண ஊழல், 500 கோடி, போபர்ஸ் ஊழல், 65 கோடி, சர்க்கரை ஊழல், 650 கோடி ரூபாயை விட, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவால், தமிழகம் ஊழலிலும் முதலிடம் பிடித்துள்ளது. சுதந்திரம் பெற்ற பின், தமிழகத்தில் காங்கிரசை ஓரம் கட்டிவிட்டு, கழக ஆட்சி வந்தது. அன்று முதல் முதலாக, விஞ்ஞானப்பூர்வ ஊழலை செய்தது
ம், "கழகம்' தான். அதிலும், தமிழகம் தான் முதல் இடம். ராஜா, ஸ்பெக்ட்ரம் ஊழல் செய்த பின்தான், "சொல்லாததையும் செய்வோம்' என்பதின் அர்த்தம் புரிகிறது. இப்போது விலைவாசியெல்லாம் ஏறிவிட்டது. எனவே, வரும் தேர்தலில், ஓட்டுக்கு ஐந்தாயிரம் ரூபாய் என்ற கணக்கில் தி.மு.க., தரும். அதையும் நிறைவேற்றி, தமிழகம் முதலிடம் என்பதை தக்க வைத்துக்கொள்ள வேண்டுகிறேன்.

எஸ்டிடிக்கு "கதம் கதம்" : ‌அசத்தியது பிஎஸ்என்எல்

புதுடில்லி: அனைத்து மாநிலங்களுக்குகிடையேயான எஸ்டிடி அழைப்பு கட்டணத்தை பிஎஸ்.என்.எல்., நிறுவனம் குறைத்துள்ளது.இந்த  கட்டணம குறைப்பு  தரைவழி தொலைபேசிக்கு மட்டுமே பொருந்தும். நாடு முழுவதும்பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு  32 மில்லியன் சந்தாதாரர்கள் உள்ளனர். இவற்றில் 26.2 மில்லியன் மக்கள் லேண்ட்லைன் எனப்படும் தரைவழி தொலைபேசியையும்,5.8 மில்லியன் மக்கள் வில் என்றழைக்கப்படும் வசதியை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது 2 நிமிடங்கள் வரை பயன்படுத்தும் எஸ்டிடி கட்டணம் 80 பைசா என  வசூலிக்கப்படுகிறது. இனிமேல் இவை 3 நிமிடங்களுக்கு 80 பைசா என வசூலிக்கப்பட உள்ளது. இந்த கட்டணம்  அனைத்து பிசிஓக்களுக்கும் பொருந்தும். முதல் 300 கால்களுக்கு , 3 நிமிட கால அளவிற்கு 80பைசா என்ற கட்டணத்திலும், அதற்குமேல் பயன்படுத்ததும் போது அதிகபட்சமாக ஒரு ரூபாய் இருபது பைசா என்ற விகிதத்தில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம்  எஸ்டிடி கட்டணம்  நீக்கப்பட்டு உள்ளூர் அழைப்பு கட்டணமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சூரிய கிரகணம் - கிரகணநாளில் பிறந்த புதிய கண்டுபிடிப்புகள்....

Photo courtesy NBC news வான்பரப்பில், சந்திரன் சூரியனை விட 400 மடங்கு சிறியதாக உள்ளது. இதன் காரணமாக, சந்திரன் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே...