Wednesday, December 8, 2010

சிசேரியனுக்கு போட்டியாக ஹிப்னோபெர்த்திங்.........

இந்தியாவில் சுமார் 18- 25% பிறப்புகள் சிசேரியன் என்றாலும்,சில நாடுகளில் 50 -50% பிஸ்கேட் அளவிற்கு சிசேரியன் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.

இதை எப்படிக் குறைக்கலாம் என்று ரூம் போட்டு யோசித்துகொண்டிருக்கிறார் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குனர் டாக்டர். மார்கரெட் சேன்.

சிசேரியன் தேவைப்பாடாத சூழலில் வலுக்கட்டாயமாக செய்வது இரண்டு விதத்தில் பாதிக்கும். ஒன்று தாயின் ஆரோக்கியம் கெடும். இரண்டு பிறக்கும் பிள்ளையின் உளவியலை பாதிக்கும். அதாவது குழந்தை பிறக்கும் காலம் நெருங்கும்போது உள்ளுணர்வாக அதன் வெளியேறும் பாதையை பற்றி உணர்ந்து,நாம் இப்படி தான் வெளியே செல்லவேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும்,திடீரென பிளேடு போட்டு பாதையை மாற்றினால் வயிற்றில் இருக்கும் பச்சைபிள்ளைக் குழம்பிபோகும். நினைத்தது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கிறதே என்ற முரண்பட்ட எண்ணம் அங்கே உருவாகும். மேலும் பிரசவ காலத்தில் தாயின் வேதனைகள் ஒரு அலை இயக்கமாக குழந்தைகள் மனதில் பதியும்.மேலும் C-Section பண்ணும்போது பயன்படுத்தபடும் ஆயுதங்கள், பூ போல வர வேண்டிய குழந்தைக்கு ஒரு மிரட்சியான உணர்வை தந்து மிரட்டும். இப்போது சொல்லுங்கள் உங்கள் செல்லக் குழந்தை உளவியல் ரீதியாக பயப்பட உங்கள் தாய்மை உணர்வு அனுமதிக்குமா?

“..........................................?!!!!! ”

கவலைபடாதீர்கள் ! என்னிளம் தாய்மார்களே....உங்களை இந்த கவலையில் இருந்து மீட்க வருகிறது ஹிப்னோபர்த்திங் என்றொரு உளவியல் பயிற்சி.

அதென்ன ஹிப்னோபர்த்திங்....?.

“ஹய்யா பிள்ளை இனி நாங்க பெத்துக்க தேவலையா? ”என்று குதிக்கும் இளம் தோழிகளே ஒரு நிமிடம்...!..நாட்டுக்கு ராணியாக இருந்தாலும் வீட்டுக்கு பிள்ளையை நீங்கள்தான் பெற்றுதரவேண்டும்..! ஆனால் குறைந்த வலியோடு நிறைந்த ஜாலியான அனுபவமாக,அதாவது பிள்ளையார் கோயிலுக்கு சென்று சுண்டல் வாங்கி சாப்பிடுவது எப்படி சுலபமோ அத்தனை சுலமாக....? இல்லை ! இல்லை! சுகமாக அத்தனை சுலமாக பிள்ளை பெற்றுக்கொள்ளும் நுட்பம்தான் ஹிப்னோபர்த்திங்.

அந்த காலத்தில் கூட்டு குடும்பமாக இருக்கும். நாலைந்து பிள்ளை பெற்ற பெரிய மனுஷிகள் நாலு பேர் இருப்பார்கள்.அதைவிட பழம் தின்று கொட்டை போட்ட பாட்டி என்ற ஒரு உறவு இருக்கும்.கர்ப்பிணிகள் வீட்டில் இருக்கும்போது,இந்த சொந்த பந்தங்கள் சூழ்ந்தகொண்டு சொந்த கதை சோகக் கதையோட பத்து பிள்ளை பெத்த கதையும் சொல்லி திரியும். புதிதாக கருத்தரித்த பெண்கள் இந்த கதைகளை அதில் உள்ள சவால்களை கேட்டுகொண்டு வரும்போது உளவியல் ரீதியாக பிள்ளை பேறுக்கு தயாராகிவிடுவார்கள். அந்த பரவசமான அனுபவத்தை உணரவேண்டும் என்ற ஆவல் மேலோங்கி நிற்கும். மேலும் பிரசவங்கள் பெண்கள் பிறந்த வீட்டில் நிகழ்ந்தன.ஏனெனில் முன்பின் தெரியாத மருத்துவமனை சூழலில், பிள்ளை பெற்றுக் கொள்வதை விட வீட்டில் பெண்களின் மனோநிலை மிக இளகுவாக இருக்கும். குழந்தை எந்தவிதமான சிரமும் இன்றி வெளியேறி விடும் காலப்போக்கில் வீட்டில் நிகழும் பிரசவங்களில் சரியான அனுபவமின்றி அணுகியதால் உயிரழப்புகள் நிகழ்ந்தன. அதன் பின்பு மருத்துவமனைகளில் பெற்றுக்கொள்வதுதான் பாதுகாப்பு என்று வலியுறுத்தப்பட்டது.

கூட்டுக் குடும்ப உறவுகள் முறிந்தபின் பெரும்பாலும் தனிமைதான்.இறுக்கமான மனநிலை,மற்றும் தேவையற்ற தகவல்களை மனதில் போட்டு உளைத்துகொள்ள நிறைய சந்தர்ப்பங்கள் வர, பிள்ளைப்பேறு கடினமான ஒன்றாகிவிட்டது.

சரி இது வர்த்தக உலகம். இதில் என்ன செய்யமுடியும் !

எளிதான பிள்ளைப்பேறுக்கு யோகாவெல்லாம் இருக்கிறதே என்கிறீர்களா ? அதைவிட மிகவும் சுலபமான உளவியல் முறைதான் ஹிப்னோபர்த்திங்.

பிரசவங்களின் போது எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கெல்லாம் காரணம், பிரசவத்தை பற்றிய தேவையற்ற அச்சம்,தவறான தகவல்களை ஆழ்மனதில் பதிந்து கொள்வது. தேவையற்ற குழப்பங்கள், இதன் தொடர்ச்சியாக வரும் மன அழுத்தம்தான்.

சரி...! ஹிப்னோபர்த்திங்கில் என்ன நடைபெறுகிறது. இந்தியாவில் ஹிப்னோபர்த்திங் பயிற்சி தருவதில் முன்னனி வகிக்கும் உளவியல் சிகிச்சை நிபுணர் திருமதி.அனுராதா ஜெயச்சந்தர் ( info@basixinc.org ) என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

மனதில் இரண்டு வகை உண்டு. ஒன்று மேல் மனம், இதனை (Conscious Mind ) என்றும், இரண்டாவது ஆழ்மனம் (Sub Conscious Mind ).மேல் மனம் எப்போது கூடுதல் எச்சரிக்கை உணர்வோடு செயல் படும்.எது செய்தாலும் நூறு கேள்வி கேட்கும். இப்படி கேள்வி கேட்பதும் அதீத எச்சரிக்கை உணர்வும் சில நேரங்களில் இயல்பான பிள்ளை பேறுக்கு தடையாகிவிடும். அதாவது குழந்தை வெளியேறும் போது அதன் பாதை இலகுவாகி வழி விட வேண்டும்.மனம் இறுக்கமாகும் போது பாதை இறுக பிள்ளை பேறு சிரமமாகிவிடுகிறது.

ஏன் எனில் காலம் காலமாக பிள்ளை பேறு பற்றி கேள்விப் படும் தகவல்கள், பார்த்த அனுபவங்கள் உங்கள் மேல் மனதில் ஒரு தவறான பிம்பத்தை உண்டாக்கி அதனை ஆழ் மனதில் பதிய செய்கிறது. ஆழ்மனதில் பதியபட்ட அச்சம் தான் இத்தகைய வலிமிகு பிள்ளைப் பேற்றுக்கெல்லாம் காரணம்.

ஆனால் ஆழ்மனதின் ஒரு ஆச்சர்யதக்க இயல்பு என்னவெனில் அதில் நீங்கள் ஒரு நம்பிக்கையான பதிவை ஏற்படுத்திவிட்டீர்கள் எனில், அது கேள்வி கேட்காமல் சொன்னதை செய்யும்.
உதாரணமாக ஹிப்னோ பர்த்திங் பயிற்சியின் போது இந்த ஆழ்மனதில் குழந்தை பேறு, குழந்தை , உறவுகள் பற்றி மகிழ்ச்சியான மற்றும் மென்மையான தகவல்கள் பதியப்படும். தொடர் பயிற்சியில் வயிற்றில் உள்ள குழந்தையோடு தாய் பேசவும், அதற்கு குழந்தை ஒத்துழைப்பதையும் அனுபவப்பூர்வமாக உணரமுடியும் பிரசவகாலத்தில் அதே உணர்வோடு குழந்தையோ மானசீகமாக உரையாடி வலியின்றி,சிரமமின்றி வெளியே கொண்டு வரமுடியும்.

ஹிப்னோபர்த்திங் உளவியல்ரீதியான ஒரு அணுகுமுறை.இப்பயிற்சி பல்வேறு நிலைகளில் மனோவசிய நுட்பத்தின் அடிப்படையில் தரப்படுகிறது.

முதல் நிலை : தேவையற்ற எண்ணங்களை போக்குவது ( De Conditioning the Mind ).கருவுற்ற தம்பதிகளிடம் பேசி அவர்கள் மனதில் கர்ப்பம் பிள்ளைபேறு பற்றிய அச்சம் மற்றும் சந்தேகங்களை ஹிப்னோஸிஸ் மூலம் நீக்குவது.

இரண்டாவது நிலை : எண்ணத்தை நெறிப்படுத்துவது ( Re Conditioning the Mind ) கர்ப்பம் குறித்து ஆரோக்கியமான எண்ணங்களை மனதில் பதியசெய்வது.

மூன்றாவது நிலை : மூச்சு பயிற்சி உட்பட எளியமுறையில் உடல்வலிமை காக்கும் பயிற்சிகள்.

நான்காவது நிலை : வயிற்றில் உள்ள குழந்தையுடன் மானசிகமாக பேசுவது. நாம் புராணக்கதைகளில், அபிமன்யூ சக்கரவியூகம் பற்றி அறிந்த கதை படித்துள்ளோம் அல்லவா அதுபோலதான் இதுவும். ஆச்சர்யத்தக்க செய்தி என்னவெனில் நீங்கள் மானசீகமாக பேசத்தொடங்கிய சில நாட்களில் உங்கள் செல்லபிள்ளை நீங்கள் சொல்வதை கேட்பதை அசைவின் மூலம் உணரமுடியம். கதையல்ல நிஜம்...உங்கள் குரல் அல்லது உங்கள் கணவரின் குரலை கேட்கும்போது வயிற்றில் குழந்தையின் அசைவின் மூலம் அதன் செயல்பாட்டை உணரமுடியும்.

ஐந்தாவது நிலை : மனோவசியகலையில் சுயவசியம் என்று ஒரு நுட்பம் உள்ளது. குறிபிட்ட முறையில் உங்கள் ஆழ்மனதை அறிந்து உங்களுக்கு தேவையான கட்டளைகளை தரமுடியும். ஏறக்குறைய நாம் தியானம் செய்து சங்கல்பம் மேற்க்கொள்வது போலதான். சுயவசிய முறையில் ஒரு கற்பனை பிள்ளை பேற்றை நீங்களே பாவனையில் அனுபவிக்கவேண்டும். அவ்வாறு அணுகும்போது அது எத்தனை சுலமாக அமையவேண்டுமோ அத்தனை சுலபமான நிகழ்வாக பாவனை செய்யுங்கள். நீங்கள் தரும் கட்டளைதான் உங்கள் ஆழ்மனம் செயல்படுத்தும்.

கவலைவேண்டாம் மேற்கண்ட நான்கு பயிற்சிக்கு பின் உங்கள் மனம் நீங்கள் சொல்வதை மட்டுமே கேட்கும் என்பதால்,பாவனையான பிள்ளைபேற்றில் ஆழ்மனதில் ஆரோக்கியமான பதிவை மட்டுமே செய்யும்.

ஒரு குழந்தை வெளிவரும் போது சிரமமின்றி ஒரு இணக்கமான சூழலில் தாயின் மனம் இருக்கும்போது, குழந்தை இயல்பாகவே மனவலிமை மற்றும் ஆரோக்கியத்துடன் இருக்கும்.ஹிப்னோபர்த்திங் மூலம் பிறக்கும் குழந்தைகள், சாதாரணமான முறையில் பிறக்கும் குழந்தைகளைவிட கூடுதல் அறிவுக் கூர்மையுடன் இருக்கும்.வயிற்றில் இருக்கும்போதே தாய் தன் குழந்தையுடன் உரையாட தொடங்கிவிடுவதால்,குழந்தை பிறந்தவுடன் பெற்றோரின் சொல்லுக்கு மறுவார்த்தை பேசாமல் சமர்த்தாக இருக்கிறது என்கிறார்கள் பிள்ளைப் பெற்றவர்கள்.

மேற்கத்திய நாடுகளில் பரவி வரும் இந்த ஹிப்னோ பர்த்திங் முறை இப்போது இந்தியாவிலும் பரவி வருகிறது. மேற்கத்திய நுட்பத்துடன் இந்தியாவின் பாரம்பர்யமான யோகமுறைகளையும் இணைத்து பயிற்சி தருவதால் வெளிநாட்டினரும் இங்கே படையெடுக்கின்றனர்.

குழந்தைகள் உலகின் எதிர்கால நட்சத்திரங்கள்.குழந்தை பெற்றுக்கொள்வதில் ஒரு திட்டமிடல் வேண்டும். “SUNDAY- னா ரெண்டு” என்ற அலைபாய்ந்துவிட்டு MONDAY வில் இருந்து ஓய்ந்துவிடக்கூடாது. குடும்பவாழ்க்கையை தேர்ந்தெடுத்தபின் எதிர்கால ஆரோக்கியமான நிர்மாணிக்கும் பொறுப்பும் ஆற்றலும் இருக்கிறது என்பதை உணர்ந்து செயல்படவேண்டும்.

நீங்கள் உங்கள் வாரிசை உருவாக்கவில்லை, தேசத்தின் ஏன் உலகின் வருங்காலத் தலைவர்களை உருவாக்குகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment

தென்கலை - வடகலை பஞ்சாயத்துதான் என்ன?

இன்று சைவம் - வைணவம் ஆகிய இரு மதங்களே இந்தியாவின் பெரும்பான்மை மதங்களாக உள்ளன. இந்த இரண்டு மதங்களுடன் "ஸ்மார்த்தம்"  எனும் வட வேத ...