சங்கம் வைத்து தமிழ் வளர்த்த வைகை நதி ஓடும் மாநகரத்தில் வாழும் எளிமையானவன். தான் அறிந்த தகவல்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் கொள்பவன்
Saturday, November 13, 2010
இ-மெயில் சேவையை துவக்குகிறது பேஸ்புக்
சோஷியல் நெட்வொர்க் இணையதளங்களின் ஜாம்பவானாக திகழும் பேஸ்புக், விரைவில் இ-மெயில் சேவையை துவக்குகிறது. இது மைக்ரோசாப்ட, யாகூ, கூகுள் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களுக்கு கடும்போட்டியாக அமையும் என்று நாளிதழ்கள் அவ்வப்போது செய்தி வெளியிட்ட வண்ணம் உள்ளன. ஆனால் இதுகுறித்த அறிவிப்பு பேஸ்புக் தரப்பிலிருந்து வரவில்லை. இந்நிலையில், அமெரிக்காவின் சிலிக்கான வேலி பகுதியில் இருந்து வெளியாகும் தொழில்நுட்ப வலை இதழான டெக்கிரஞ்ச்சில், இதுகுறித்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில் தெரிவித்துள்ளதாவது : சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வெப் பேஸ்டு இ-மெயில் சேவையை பேஸ்புக் துவக்க இருப்பதாகவும், இந்த மெயில் அட்பேஸ்புக்.காம் என்று முடியுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக்கிற்கு, சர்வதேச அளவில் 500 மில்லியன் பயனாளர்கள் இருப்பதாகவும், மற்ற முன்னணி நிறுவன்ஙகளான கூகுள், யாகூ, மைக்ரோசாப்ட் நிறுவனங்களை முறியடிக்கும் பொருட்டு இந்த சேவை துவக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் டிராக்கிங் நிறுவனமான காம்ஸ்கோர் நிறுவனம், சமீபத்தில் நடத்திய கருத்துக்கணிப்பின்படி, கடந்த செப்டமபர் மாத நிலவரப்படி, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஹாட்மெயிலுக்கு 361.7 மில்லியன் பயனாளர்களும், யாகூமெயிலுக்கு 273.1 மில்லியன் பயனாளர்களுகும், கூகுள் நிறுவனத்தின் ஜிமெயிலுக்கு 193.3 மில்லியன் பயனாளர்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் பார்த்தால், பேஸ்புக்கிற்கு 500 மில்லியன் பயனாளர்கள் இருப்பதால், யாகூ, கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்களை எளிதில் பின்னுக்குத் தள்ளலாம் என்ற முடிவில் இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெக்கிரஞ்சில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : பேஸ்புக் நிறுவனம், இந்த திட்டத்தை ரகசியமாக வைத்திருந்ததாகவும், இந்த திட்டத்தி்ற்கு "புராஜெக்ட் டைட்டன்" என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும், சுருங்கக் கூறினால், "ஜிமெயில் கில்லர்" என்று பொருள் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இ-மெயில் சேவையை துவக்குவதற்கான பணிகள் ஆரம்பக்கட்ட நிலையிலேயே உள்ளதாகவும், விரைவில் இ-மெயில் சேவையை துவங்க உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
தென்கலை - வடகலை பஞ்சாயத்துதான் என்ன?
இன்று சைவம் - வைணவம் ஆகிய இரு மதங்களே இந்தியாவின் பெரும்பான்மை மதங்களாக உள்ளன. இந்த இரண்டு மதங்களுடன் "ஸ்மார்த்தம்" எனும் வட வேத ...

-
காதலித்து மணந்தவளை இறந்து விட்டாள் என நினைத்து சந்தர்ப்பவசத்தால், வேறு ஒரு பெண்ணை மணப்பார். இறந்தவளாக கருதப்பட்டவர் பார்வை இழந்த நிலையில் ...
-
அரசியல் தலைவர்கள், கல்விச்சேவை, மனிதநேய சேவை உள்ளிட்ட சேவைகளை செய்யும் சமூக சேவையாளர்கள், சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்படும் கவுரவ டாக்டர் ...
-
UNIVERSAL PASS CUM CERTIFICATE நமது இந்திய அரசு கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸும் போட்டவர்களுக்கு ஒரு பாஸ் கம் சர்டிபிகேட் ஐ ஆன்-லைன் மூலமாகவே...
welcome
ReplyDelete