Wednesday, April 27, 2011

கர்ப்பம் தரித்து குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆண் உயிரினம்


கண்களை எந்தப் பக்கமும் திருப்புதல், குதித்து குதித்து ஓடும் ஒருவகை மீன் இனம், குதிரை போன்ற முக அமைப்பு, குரங்கு போன்ற வால், ஆண் இனங்கள் இனப்பெருக்கம் செய்தல் இப்படியாக பல்வேறு சிறப்புகளையுடைய அரியவகை கடல்வாழ் உயிரினமான கடல் குதிரைகள் பல்வேறு காரணங்களால் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவருவதை அரசு தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.


உடலமைப்பை பொருத்தவரை நன்கு நீண்டு வளையங்களால் அமைந்தது போன்றும் வாய் நீண்டு குழல் போலவும் மார்புப் பகுதி சற்று அகன்று விரிந்தும் காணப்படுகிறது. உடலில் பக்கவாட்டுக் கோடுகள் மற்றும் நீண்ட புள்ளிகள் தென்படுகின்றன. சுமார் 6 செ.மீ முதல் 17 செ.மீ வரை நீளமும் எடை 4 கிராம் முதல் 14 கிராம் வரையும் இருக்கிறது.


பெண் கடற்குதிரைகள் தங்களின் முட்டைகளை (200) ஆண்களின் வால் பகுதியில் உள்ள இனப்பெருக்கப் பைகளில் விட்டுவிடும். அதனை ஆண் கடற்குதிரைகள் கங்காரு போல நன்கு பேணி ஆறு வாரங்கள் பாதுகாத்து குஞ்சுகளாகப் பொரிக்கின்றன. குஞ்சுகளின் எண்ணிக்கையும் 50 முதல் 100 வரை இருக்கும். பிறக்கும் குஞ்சுகளின் நீளம் ஏறத்தாழ ஒரு செ.மீட்டராக இருந்தாலும் பெற்றோரின் பாதுகாப்பு அதிகமாகவே இருக்கும்.


மீன் இனத்தைச் சேர்ந்த உயிரினம்தான் கடல்குதிரை. பார்ப்பதற்கு முதலைக் குட்டியைப் போலிருக்கும். ஆண் கடல் குதிரையின் வாலின் கீழே பை போன்ற அமைப்பு இருக்கும். ஆண் கடல் குதிரைகளின் இந்தப் பையில்தான் பெண் கடல் குதிரைகள் முட்டையிடுகின்றன. முட்டைகள் பொரிவதும் வெளிவரும் குஞ்சுகள் சிறிது காலம் வளர்வதும் இந்தப் பையில்தான். முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவரும் நேரத்தில் அப்பா கடற்குதிரைக்கு பிரசவ வலி வரும். அப்போது அது நீருக்கடியில் உள்ள புதற்களுக்கிடையே கிடந்து மிகவும் சிரமப்படும். உடலை முன்னும் பின்னுமாக அசைத்து வளைக்கும். இப்படி வளையும்போது பையின் தசைகள் விரிவடையும். ஒவ்வொரு முறை வளையும்போதும் ஒவ்வொரு குஞ்சு வெளிவரும்.


இதில் பிரச்சனை என்னவென்றால் கடல்குதிரையின் இனப்பெருக்க வேகம் மிகவும் குறைவு. மனிதர்களுக்கு வேகத்தைத் தரும் கடல் குதிரைகளுக்குத் தான் வேகம் வருவதில்லை. இப்படியே போனால் எதிர்காலத்தில் கடல் குதிரைகள் என்கிற இனம் என்ன ஆகுமென்று யாருக்கும் தெரியாது.


"உலகத்திலேயே கடல் குதிரை தான் ஆண் வர்க்கத்தில் கர்ப்பம் தரித்து குழந்தை பெற்று கொள்ள முடியும்"

Tuesday, April 19, 2011

வருமானம் குறைந்தாலும் மில்லியனராக வலம்வரும் ஒபாமா

வாஷிங்டன் : கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல, நிதியாண்டில் வருமானம் குறைந்தாலும் மில்லியனராகவே நீடித்துக் கொண்டிருக்கிறார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா. சமீபத்தில், அதிபர் ஒபாமா, அவரது மனைவி மிச்செல் ஒபாமா, இருவரும் சேர்ந்து வருமான வரியை தாக்கல் செய்துள்ளனர். அதில் அவர்களின் வருமானம் மூ்னறில் 2 பங்கு கு்றைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, வெள்ளை மாளிகையின் செய்தித்தொடர்பாளர் ஜே கார்னி வெளியிட்டுள்ள ‌அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அதிபர் ஒபாமா, அவரது மனைவி மிச்செல் ஒபாமா இருவரும் இணைந்து, 2010ம் ஆண்டிற்கான வருமானவரி கணக்கை தாக்கல் செய்துள்ளனர். இதில், 2009ம் ஆண்டில் இருந்ததைவிட, 2010ம் ஆண்டில் தங்களது வருமானம் மூன்றில் 2 பங்கு சரிந்துள்ளதாக தெரிவித்தனர். 2009ம் ஆண்டில், 5.5 மிலலியன் அமெரிக்க டாலர்களாக இருந்த ஒபாமா குடும்பத்தின் வருமானம், இந்த ஆண்டில் 1.73 மில்லியன் அமெரிக்க டாலர்களாக காட்டப்பட்டுள்ளது. அதிபர் புத்தகங்களை விற்பனை செய்ததன் மூலம‌ே, வருமானத்தின் பெரும்பகுதி ஈட்டபட்டதாகவும், ஒபாமா குடும்பத்தினர் மொத்த பெடரல் வரியாக 4,53,770 அமெரிக்க டாலர்களை கட்டியுள்ளனர். மேலும் அவர்கள் தங்களது வருமானத்தில் 14.2 சதவீதம் அதாவது, 2,45,075 அமெரிக்க டாலர்களை தொண்டு நிறுவனங்களுக்கு நிதியுதவி செய்துள்ளனர். இவற்றில், பிஷ்ஷர் ஹவுஸ் பவுண்டேசனுக்கு அதிக அளவாக 1,31,075 அமெரிக்க டாலர்களாக நிதியுதவியாக வழங்கியுள்ளனர். இல்லினாய்ஸ் நகரில் இவர்கள் தாக்கல் அறிக்கையில், மாகாண வருமான வரியாக 51,568 அமெரிக்க டாலர்களை செலுத்தியுள்ளனர். அதேபோல், துணை அதிபர் ஜோ பீடன் மற்றும் அவரது மனைவி இருவரும் சேர்ந்து வருமான வரியை தாக்கல் செய்துள்ளனர். 3,79,178 அமெரிக்க டாலர்களை வருமானமாக காட்டியுள்ள அவர்கள், மொத்த பெடரல் வரியாக 86,626 அமெரிக்க டாலர்களை கட்டியதாகவும், தொண்டு மற்றும் மற்ற நிறுவனங்களுக்கு உதவி செய்த விதமாக 5,350 அமெரிக்க டாலர்களை அவர்கள் கணக்கில் காட்டியுள்ளனர். இது‌போல, மற்ற நாட்டின் தலைவர்களும் தங்களது வருமான வரிக் கணக்கை காட்ட முன் வருவார்களா? என்பதே மக்களின் ஏகோபித்த கேள்வியாக உள்ளது.

Tuesday, February 8, 2011

கார் இன்சூரன்ஸ் பிரிமியம் தொகை குறைப்பது எப்படி?

சொந்தமாக கார் வாங்குவது பெரிய விஷயமல்ல. அதற்கு இன்சூரன்ஸ் எடுத்து முறையாக பிரிமியம் தொகை கட்டுவது தான் பெரிய விஷயம். அந்த வகையில் கார்களுக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள், பிரிமியம் தொகையை கணக்கிட பல அம்சங்களை எடுத்துக் கொள்கின்றன. காரின் மாடல், எந்த ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்டது, பெட்ரோல், டீஸல் அல்லது காஸில் ஓடுவதா, பெட்ரோல் டேங்கின் அமைப்பு, பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் கருவிகள் ஆகிய விஷயங்களை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கவனிக்கின்றன. இதன் காரணமாக, இன்சூரன்ஸ் பிரிமியம் தொகையில் 2.5 சதவீதத்தில் இருந்து 15 சதவீதம் வரை மாறுபாடு காணப்படுகிறது.
டீஸல், சி.என்.ஜி., அல்லது எல்.பி.ஜி.,யில் ஓடும் காரை விட, பெட்ரோலில் ஓடும் காருக்கு பிரிமியம் தொகை குறைவாக இருக்கும். டீஸல் இன்ஜின் காரை பயன்படுத்துபவர், அந்த காரை கூடுதலாக பயன்படுத்துவார். ஆனால், பெட்ரோலில் ஓடும் காரின் பயன்பாடு குறைவாகவே இருக்கும். எனவே, டீஸல்  பெட்ரோலில் ஓடும் கார்களுக்கு இடையே, இன்சூரன்ஸ் பிரிமியம் தொகையில் 10 முதல் 15 சதவீதம் வரை வேறுபாடு உள்ளது. இதே போல பைபரில் உள்ள பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்ட கார் என்றால், 3 முதல் 4 சதவீதம் கூடுதல் பிரிமியம் தொகை வசூலிக்கப்படுகிறது.

பாதுகாப்பு அம்சங்கள்: காரில், கியர் மற்றும் ஸ்டியரிங் வீல் லாக்குகள், ஏர் பேக்ஸ், சென்ஸார்கள், திருட்டை தடுக்கும் கருவிகள், உயிர் காக்கும் கருவிகள் இருந்தால், பிரிமியம் தொகை குறைவாக இருக்கும். மாருதி கார்களில், கார் நிறுவனம் தரும் உண்மையான சாவியை போட்டு காரை ஸ்டார்ட் செய்யாமல், மாற்று வழியில் காரை இயக்க முற்பட்டால், காரை இயங்க விடாமல் செய்யும் அளவுக்கு," ஐகேட் சிஸ்டம்' என்ற பாதுகாப்பு அம்சம் உள்ளது. எனவே, மற்ற நிறுவன கார்களை விட மாருதி கார்களுக்கு 10 சதவீதம் குறைவாகவே பிரிமியம் தொகை வசூலிக்கப்படுகிறது. அடுத்து இன்சூரன்ஸ் நிறுவனங்கள், காரின் ரீசேல் மதிப்பை கணக்கிடுகின்றனர். கார் திருடர்கள், ஸ்போர்ட்ஸ் யுடிலிட்டி வைக்கிள்(எஸ்.யு.வி.,) பிரிவை சேர்ந்த கார்களையே அதிகம் திருடுகின்றனர். மேலும், இவ்வகை கார்கள், நாட்டின் பல இடங்களில் வர்த்தக வாகனமாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாகவே வட மாநிலங்களில் எஸ்.யு.வி., கார்களுக்கு 20 சதவீதம் கூடுதல் பிரிமியம் வசூலிக்கப்படுகிறது.
கார் உரிமையாளர்கள் தங்களின் கார்களில் விலை உயர்ந்த கருவிகளை பொருத்துகின்றனர். குறிப்பாக, விலை உயர்வான ஆடியோ சிஸ்டம் பொருத்துவதில் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், இதுபோன்ற விலை உயர்வான கருவிகளால், பிரிமியம் தொகையும் அதிகரிக்கும் என்பதே உண்மை.

சில கார்களின் விலை குறைவாக இருக்கும். ஆனால், அந்த கார்களின் உதிரி பொருட்களின் விலை அதிகமாக இருக்கும். குறிப்பாக, இறக்குமதி செய்யப்படும் கார்களின் உதிரி பாகங்கள் விலை அதிகமாகவே இருக்கும். இந்த கார்களுக்கு கூடுதல் பிரிமியம் தொகை வசூலிக்கப்படும். அதே நேரத்தில் உள் நாட்டில் கிடைக்கும் உதிரி பாகங்களை கொண்டு உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் கார்களுக்கு, 10 முதல் 20 சதவீதம் குறைத்து பிரிமியம் தொகை வசூலிக்கப்படுகிறது.
வெளிநாடுகளில் காரின் வண்ணமும் இன்சூரன்ஸ் பிரிமியம் தொகையை அதிகரிக்க செய்கிறது. குறிப்பாக சிவப்பு நிற கார்களுக்கு பிரிமியம் தொகை அதிகமாக இருக்கும். இந்தியாவிலும் இந்த நடைமுறை விரைவில் அமலுக்கு வர உள்ளது. பளீச்சென இருக்கும் வண்ணம் கொண்ட கார்கள் அடிக்கடி விபத்துக்களில் சிக்குகின்றன என்பதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

இந்திய ஆட்டோமொபல் சங்கம் நடத்தும் பாதுகாப்பான பயணம் தொடர்பான கருத்தரங்குகளில் பங்கேற்பவர்களுக்கு, பிரிமியம் தொகை குறையும். இதே போல டாக்டர், ஆடிட்டர் போன்றவர்களுக்கு குறைந்த அளவு பிரிமியம் தொகை வசூலிக்கப்படுகிறது. இவர்கள் சாலையில் செல்லும் போது மிகவும் கவனமாக செல்வார்கள், கார்களை மிகவும் கவனத்துடன் கையாளுவார்கள் என்ற நம்பிக்கையே இந்த சலுகைக்கு காரணமாக கூறப்படுகிறது. இதே போல காரின் உரிமையாளர் 45 வயதுக்கு மேலாக இருந்தால், கூடுதல் தொகை வசூலிக்கப்படுகிறது.

சில இன்சூரன்ஸ் நிறுவனங்கள், குறைந்த அளவு பிரிமியம் தொகை என்ற கவர்ச்சி திட்டங்களை அறிவிப்பார்கள். ஆனால், அந்த இன்சூரன்ஸ் பிரிவில், சில விபத்துக்களுக்கு காப்பீடு கிடைக்காது என்பதே உண்மை. மும்பையில் சில ஆண்டுகளுக்கு முன் மழை வெள்ளம் ஏற்பட்டு பல கார்கள் பாதிப்புக்குள்ளாகின. அதன் உரிமையாளர்கள் காப்பீடு கேட்டு இன்சூரன்ஸ் நிறுவனங்களை அணுகிய போது, அவர்கள் சேர்ந்துள்ள இன்சூரன்ஸ் திட்டத்தில் வெள்ள பாதிப்பு சேர்க்கப்படவில்லை என்பது தெரிய வந்தது. எனவே, கவனமாக கார் ஓட்டுவது மட்டும் முக்கியமல்ல. காருக்கு சரியான இன்சூரன்ஸ் திட்டத்தில் சேர்ந்து இருக்க வேண்டும் என்பது முக்கியம் தான்.

Saturday, February 5, 2011

"நண்பேன்டா"வுக்கு இதுதான் காரணம்

லண்டன்: தனக்கு ஏற்ற நண்பராக யாரை தேர்வு செய்ய வேண்டும் என்பதை ஒருவரது மரபணு தான் தீர்மானிப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிந்துள்ளது. மனிதர்கள் ஒவ்வொருவரும் தனிப்பட்ட குணநலன்கள், தனிப்பட்ட பழக்க வழக்கங்களை கொண்டுள்ளனர். அவர்களின் குணநலன்கள், பழக்க வழக்கங்கள் மற்றும் ஒழுக்கம் சார்ந்த
இயல்புகளை அவனது மரபணு தீர்மானிப்பதாக, மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதே போன்று, ஒருவர் தனக்கு ஏற்ற நண்பர்கள் யார் என்பதை தேர்வு செய்ய வேண்டும் என்பதை, அவரது மரபணு தான் தீர்மானிப்பதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
மரபியல் பண்பு அல்லது மரபணு வகைகளின்படி, குறிப்பிட்ட ஆறு மரபணுக்கள், தங்களுக்கு ஏற்ற நண்பன் யார் என்பதை தீர்மானிப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இளம் வயதில், எதிர் பாலினத்தவரிடம் ஏற்படும் ஆர்வம் அல்லது இனக்கவர்ச்சியைப் போன்றும், இனம் இனத்தோடு சேரும் என்பது போன்றும் இந்த மரபணுக்கள், தங்களுக்கு ஏற்ற நண்பர்கள் இவர்தான் என்று அடையாளம் காணுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Friday, February 4, 2011

மக்களின் மனம் கவர்ந்த ஐடியா!

புதுடில்லி : மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டியின் மூலம், மற்ற முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி, அதிக வாடிக்கையாளர்களை தன்வசம் ஈர்த்துள்ளது ஐடியா நிறுவனம். மொபைல் போன் எண்ணை மாற்றாமல், தான் விரும்பும் நெட்வொர்க்கை மாற்றிக்கொள்ளும் மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டி, சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஹரியானாவில் முதல்கட்டமாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சேவை‌‌ பெரும் வரவேற்பை பெற்றது. இதன்பின், நாடு முழுமைக்கும் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு தொலைதொடர்பு நிறுவனமும், தங்கள் நிறுவனத்தில் சேர்ந்துள்ள வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை தொலைதொடர்பு கட்டுப்பாடு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) வழங்க உத்தரவிட்டுள்ளது. அந்த தகவலின் அடிப்படையில், மொபைல்நம்பர் போர்டபிலிட்டி வசதி மூலம் அதிகம் பயனடைந்த தொலைதொடர்பு நிறுவனமாக ஐடியா நிறுவனம் உள்ளது. டிராய் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஐடியா நிறுவனத்தில் 35 ஆயிரம் பேரும், வோடபோன் நெட்வொர்க்கில்  30 ஆயிரம், ஏர்செல் நெட்வொர்க்கில் 12 ஆயிரம் பேரும், ஏர்டெல் நெட்வொர்க்கில் 8 ஆயிரம் பேரும் புதிதாக இணைந்துள்ளனர்.

Monday, January 17, 2011

ஜல்லிக்கட்டு : காளைகளை அடக்கும் காளையர்கள்

உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் , அவனியாபுரம் மற்றும் பாலமேட்டில் நடைபெற்ற தமிழர்களின் வீரவிளையாட்டான "ஜல்லிக்கட்டு" விளையாட்டின் போது துள்ளி எழுந்த காளைகளை அடக்க முயலும் கட்டிளங்காளையர்கள்............







Tuesday, January 11, 2011

2020ல் இந்தியாவில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் : ஐசிஏஆர்

 2020ல் இந்தியா வல்லரசு ஆகும் என்று கூறிய முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் கூறியதை, நாம் நனவாக்கும் முயற்சியில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், 2020ல் இந்தியாவில் உணவுப்பற்றாக்குறை ஏற்படும் என்று இந்தியன் கவுன்சில் ஆப் அக்ரிகல்சுரல் ரிசர்ச் கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரிசா மாநிலம் புவனேஸ்வரில், இந்திய - சர்வ‌தேச பயிர் மாநாடு நடைபெற்றது. இதில் தலைமையுரையாற்றிய இந்தியன் கவுன்சில் ஆப் அக்ரிகல்சுரல் ரிசர்ச் மையத்தின் துணை உதவி இயக்குனர் சுவபன் கே தத்தா கூறியதாவது : நாட்டில், உணவு பாதுகாப்பு முறைகள் மற்றும் உணவு உற்பத்தியில் பெரும் மாற்றங்களை ‌கொண்டு வர வேண்டும், நவீன தொழில்நுட்பங்களை அதில் புகுத்த வேண்டும். அவ்வாறு இல்லையெனில், இந்தியா 2020ம் ஆண்டில் வல்லரசு ஆவதற்குப் பதிலாக, உணவிற்காக, பிற நாடுகளிடம் கையேந்தும் நிலை ஏற்படும் என்று கூறினார். அவர் மேலும் கூறியதாவது, 2009ல், நம்நாட்டில் 100 மில்லியன் டன் அரிசி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது, 2020ல் இதன் தேவை 130 மில்லியன் டன்னாக அதிகரிக்கும், அதேபோல், கோதுமையின் ‌தேவையும் 110 மில்லியன் டன் என்ற அளவைத் தொடும் என்றும், 2009ம் ஆண்டில் 80 மில்லியன் டன் கோதுமை மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. பருப்புகள் மற்றும் எண்ணெய் வித்துக்களின் தேவையும், 140 மற்றும் 243 சதவீதம் அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார். ஐசிஏஆர் கணித்துள்ளபடி, வரும் ஆண்டுகளில் வறட்சி, அசாதாரணமான சூழ்நிலை காரணமாக அரிசி உற்பத்தி 15 முதல் 42 சதவீதம் வரை சரியும். கோதுமை உற்பத்தி 34 சதவீதம் வரை குறையும். இதனை எதிர்‌கொள்ளும் பொருட்டு, நாம், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனே கையாள வேண்டும், பார்லிமென்டில் அடுத்த கூட்டத்தொடரில், உணவு உற்பத்தி குறித்த கொள்கை வகுக்கப்பட்டு அதனை நடைமுறைப்படுத்த மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Friday, January 7, 2011

உலகிலேயே குறைந்த வயதில் விமான கேப்டனான பெண்

உலகிலேயே மிக குறைந்த வயதில் விமான கேப்டனாகி, நெல்லை மாவட்டம் காவல்கிணற்றை சேர்ந்த பவிகா பாரதி சாதனை புரிந்துள்ளார்.
நெல்லை மாவட்டம் காவல்கிணற்றை சேர்ந்தவர் பாரதி. நாடார் சமுதாயத்தை சேர்ந்த இவர், மும்பையில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். அவரது மனைவி பெயர் ஜூடித். இவர்களுக்கு பவிகா பாரதி என்ற ஒரே மகள் இருக்கிறார். பவிகாவுக்கு 18 வயதாகும்போது விமான ஓட்டியாக பயிற்சி பெற விரும்பினார். எனவே, அவரது தாயார் ஜூடித் விமானம் ஓட்டுவதற்கு பயிற்சி அளிக்கும் பிளையிங் கிளப்புக்கு அழைத்து சென்றார்.¬ அப்போது 39 வயதாகி இருந்த ஜூடித் அங்கு அளிக்கப்படும் பயிற்சிகளைப்பார்த்து, நானும் பயிற்சி பெற சேரலாமா? என்று கேட்டார். பிளையிங் கிளப் அதிகாரிகள் நீங்களும் சேரலாம் என்று கூறினர். தொடர்ந்து தாயும், மகளும் விமானம் ஓட்டும் பயிற்சியில் சேர்ந்து ஒரே நேரத்தில் 2007&ம் ஆண்டு மே மாதம் கமர்ஷியல் பைலட் லைசென்சை பெற்றனர். அப்போது தொடர்ந்து இருவரும் கோபைலட்டாக கிங்பிஷர் விமான நிறுவனத்தில் பணியில் சேர்ந்தனர்.
விமான கேப்டன் : பவிகா பாரதி சென்னை&தூத்துக்குடி ரூட்டில் கோபைலட்டாக பணியாற்றினார். அவருடைய பணியாற்றல், பல கேப்டன்களை வெகுவாக கவர்ந்தது. 2,400 மணி நேரம் விமானத்தில் பறந்து, முதுநிலை பைலட் லைசென்சை (அட்வான்ஸ்டு ட்ரெயினிங் பைலட் லைசன்சு) பெற்றார். தற்போது அவர் தன்னுடைய 21 வயதில் விமான கேப்டனாக தலைமை பொறுப்பில் விமானம் ஓட்டுகிறார்.
முதன் முதலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பவிகா பாரதி பெங்களூர்&ஐதராபாத்&பெங்களூர் ரூட்டில், கிங்பிஷர் விமான நிறுவனத்தில் கேப்டனாக விமானத்தை ஓட்டி, உலகிலேயே குறைந்த வயது விமான கேப்டன் என்ற பெருமையை தமிழ்நாட்டுக்கு தேடித்தந்துள்ளார்.

பைலட்டுகள் வாழ்த்து : அவருடைய இந்த சாதனையை பார்த்து, விமான பைலட்டுகள் பலர் வாழ்த்து தெரிவித்தனர். 18 வயதில் கோபைலட்டாக சேர்ந்து, 21 வயதில் பைலட்டாக விமானத்தை ஓட்டி வரும் பவிகாவின் மற்றொரு ஆசை, தான் கேப்டனாகவும், தனது தாயார் ஜூடித் கோபைலட்டாகவும் பணியாற்றி, ஒரு விமானத்தை ஓட்டி சாதனை புரியவேண்டும் என்பதுதான். பவிகா பாரதிக்கு விமானத்தை ஓட்டுவதோடு மட்டும் ஆசை நின்றுவிடவில்லை. நன்றாக ஓவியம் வரைவார், கர்நாடக இசையில் பாடுவார், பியானோ இசை கருவியை மீட்டுவதிலும் வல்லவர்.
லண்டனில் உள்ள டிரினிடி இசை கல்லூரி நடத்திய தேர்வில் சமீபத்தில் தேர்வு பெற்றுள்ளார். அமெரிக்காவில் புகழ்பெற்ற பல்கலைக்கழகம் நடத்தும் எம்.பி.ஏ. படிப்பையும் படித்து வருகிறார்.

Thursday, January 6, 2011

சிறந்த நகைச்சுவை

ஆற்றோரத்தில் ஜெபம் கூட்டம் ஒன்று நடைபெறுகிறது. ஒரு குடிகாரனும் ஜெபத்தில் கலந்துக்கொள்ள நேறிடுகிறது வருகிறான்.குடிகாரன் பாதிரியாரின் அருகில் நிற்க நேரிடுகிறது.குடிகாரனை கவனித்த பாதிரியார்,”நீ இயேசுவை பார்க்க விரும்புகிறாயா?” என்று கேட்கிறார்.

அதற்கு குடிகாரனும் “ஆம் பார்க்க விரும்புகிறேன்” என்கிறான்.

பாதிரியார் குடிகாரனின் தலையினை பிடித்து ஆற்றுக்குள் அழுத்திவிட்டு பிறகு வெளியே இழுத்து "இயேசுவை பார்த்தாயா?" என்கிறார்.

குடிகாரன் “இல்லை இயேசுவை பார்க்கல”

மறுபடியும் நீருக்குள் குடிகாரனை முன்பை விட கொஞ்சம் அதிக நேரம் அழுத்திவிட்டு

இப்போது “இயேசுவை பார்த்தாயா” என்கிறார் பாதிரியார்.

குடிகாரன் “இப்போதும் பார்க்கவில்லை”

இப்போது குறைந்தபட்சமாக 30 நொடிகள் நீருக்குள் அழுத்திவிட்டு வேளியே எழுந்ததும்

“இப்போது இயேசுவை பார்த்தாயா?” என்கிறார் பாதிரியார்.

குடிகாரன் “நிச்சயமாக சொல்லுங்க இயேசு இங்கே தான் தொலைந்தாரா?”

(குறிப்பு : சிறந்த நகைச்சுவைகளில் ஒன்று என்று ஆங்கில தளத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டது)

சூரிய கிரகணம் - கிரகணநாளில் பிறந்த புதிய கண்டுபிடிப்புகள்....

Photo courtesy NBC news வான்பரப்பில், சந்திரன் சூரியனை விட 400 மடங்கு சிறியதாக உள்ளது. இதன் காரணமாக, சந்திரன் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே...