புதுடில்லி : மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டியின் மூலம், மற்ற முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி, அதிக வாடிக்கையாளர்களை தன்வசம் ஈர்த்துள்ளது ஐடியா நிறுவனம். மொபைல் போன் எண்ணை மாற்றாமல், தான் விரும்பும் நெட்வொர்க்கை மாற்றிக்கொள்ளும் மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டி, சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஹரியானாவில் முதல்கட்டமாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சேவை பெரும் வரவேற்பை பெற்றது. இதன்பின், நாடு முழுமைக்கும் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு தொலைதொடர்பு நிறுவனமும், தங்கள் நிறுவனத்தில் சேர்ந்துள்ள வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை தொலைதொடர்பு கட்டுப்பாடு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) வழங்க உத்தரவிட்டுள்ளது. அந்த தகவலின் அடிப்படையில், மொபைல்நம்பர் போர்டபிலிட்டி வசதி மூலம் அதிகம் பயனடைந்த தொலைதொடர்பு நிறுவனமாக ஐடியா நிறுவனம் உள்ளது. டிராய் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஐடியா நிறுவனத்தில் 35 ஆயிரம் பேரும், வோடபோன் நெட்வொர்க்கில் 30 ஆயிரம், ஏர்செல் நெட்வொர்க்கில் 12 ஆயிரம் பேரும், ஏர்டெல் நெட்வொர்க்கில் 8 ஆயிரம் பேரும் புதிதாக இணைந்துள்ளனர்.
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த வைகை நதி ஓடும் மாநகரத்தில் வாழும் எளிமையானவன். தான் அறிந்த தகவல்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் கொள்பவன்
Subscribe to:
Post Comments (Atom)
தென்கலை - வடகலை பஞ்சாயத்துதான் என்ன?
இன்று சைவம் - வைணவம் ஆகிய இரு மதங்களே இந்தியாவின் பெரும்பான்மை மதங்களாக உள்ளன. இந்த இரண்டு மதங்களுடன் "ஸ்மார்த்தம்" எனும் வட வேத ...

-
காதலித்து மணந்தவளை இறந்து விட்டாள் என நினைத்து சந்தர்ப்பவசத்தால், வேறு ஒரு பெண்ணை மணப்பார். இறந்தவளாக கருதப்பட்டவர் பார்வை இழந்த நிலையில் ...
-
விண்டோஸ் 8 இயங்குதளமானது (Operating System) 2012 இல் வெளியிடப்படுமென மைக்ரோசொப்ட் தெரிவிக்கின்றது. இது தொடர்பான செய்தியை மைக்ரோசொப்ட் தனத...
-
ஒன்று இரண்டு படங்களில் தலை காட்டிய ஹீரோக்கள் கூட இன்று விளம்பரப் படவுலகில் சிறந்த வியாபாரிகளாக வலம் வந்துகொண்டிருக்க, ஐம்பது வருடத்தை கடந்து...
No comments:
Post a Comment