2020ல் இந்தியா வல்லரசு ஆகும் என்று கூறிய முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் கூறியதை, நாம் நனவாக்கும் முயற்சியில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், 2020ல் இந்தியாவில் உணவுப்பற்றாக்குறை ஏற்படும் என்று இந்தியன் கவுன்சில் ஆப் அக்ரிகல்சுரல் ரிசர்ச் கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரிசா மாநிலம் புவனேஸ்வரில், இந்திய - சர்வதேச பயிர் மாநாடு நடைபெற்றது. இதில் தலைமையுரையாற்றிய இந்தியன் கவுன்சில் ஆப் அக்ரிகல்சுரல் ரிசர்ச் மையத்தின் துணை உதவி இயக்குனர் சுவபன் கே தத்தா கூறியதாவது : நாட்டில், உணவு பாதுகாப்பு முறைகள் மற்றும் உணவு உற்பத்தியில் பெரும் மாற்றங்களை கொண்டு வர வேண்டும், நவீன தொழில்நுட்பங்களை அதில் புகுத்த வேண்டும். அவ்வாறு இல்லையெனில், இந்தியா 2020ம் ஆண்டில் வல்லரசு ஆவதற்குப் பதிலாக, உணவிற்காக, பிற நாடுகளிடம் கையேந்தும் நிலை ஏற்படும் என்று கூறினார். அவர் மேலும் கூறியதாவது, 2009ல், நம்நாட்டில் 100 மில்லியன் டன் அரிசி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது, 2020ல் இதன் தேவை 130 மில்லியன் டன்னாக அதிகரிக்கும், அதேபோல், கோதுமையின் தேவையும் 110 மில்லியன் டன் என்ற அளவைத் தொடும் என்றும், 2009ம் ஆண்டில் 80 மில்லியன் டன் கோதுமை மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. பருப்புகள் மற்றும் எண்ணெய் வித்துக்களின் தேவையும், 140 மற்றும் 243 சதவீதம் அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார். ஐசிஏஆர் கணித்துள்ளபடி, வரும் ஆண்டுகளில் வறட்சி, அசாதாரணமான சூழ்நிலை காரணமாக அரிசி உற்பத்தி 15 முதல் 42 சதவீதம் வரை சரியும். கோதுமை உற்பத்தி 34 சதவீதம் வரை குறையும். இதனை எதிர்கொள்ளும் பொருட்டு, நாம், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனே கையாள வேண்டும், பார்லிமென்டில் அடுத்த கூட்டத்தொடரில், உணவு உற்பத்தி குறித்த கொள்கை வகுக்கப்பட்டு அதனை நடைமுறைப்படுத்த மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். |
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த வைகை நதி ஓடும் மாநகரத்தில் வாழும் எளிமையானவன். தான் அறிந்த தகவல்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் கொள்பவன்
Tuesday, January 11, 2011
2020ல் இந்தியாவில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் : ஐசிஏஆர்
Subscribe to:
Post Comments (Atom)
தென்கலை - வடகலை பஞ்சாயத்துதான் என்ன?
இன்று சைவம் - வைணவம் ஆகிய இரு மதங்களே இந்தியாவின் பெரும்பான்மை மதங்களாக உள்ளன. இந்த இரண்டு மதங்களுடன் "ஸ்மார்த்தம்" எனும் வட வேத ...

-
காதலித்து மணந்தவளை இறந்து விட்டாள் என நினைத்து சந்தர்ப்பவசத்தால், வேறு ஒரு பெண்ணை மணப்பார். இறந்தவளாக கருதப்பட்டவர் பார்வை இழந்த நிலையில் ...
-
அரசியல் தலைவர்கள், கல்விச்சேவை, மனிதநேய சேவை உள்ளிட்ட சேவைகளை செய்யும் சமூக சேவையாளர்கள், சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்படும் கவுரவ டாக்டர் ...
-
UNIVERSAL PASS CUM CERTIFICATE நமது இந்திய அரசு கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸும் போட்டவர்களுக்கு ஒரு பாஸ் கம் சர்டிபிகேட் ஐ ஆன்-லைன் மூலமாகவே...
No comments:
Post a Comment