சங்கம் வைத்து தமிழ் வளர்த்த வைகை நதி ஓடும் மாநகரத்தில் வாழும் எளிமையானவன். தான் அறிந்த தகவல்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் கொள்பவன்
Monday, December 6, 2010
மக்களின் ஒழுக்கத்தை சோதிக்கும் அரசு!
சென்னையில், யோகிராம் சுரத்குமார் ஜெயந்தி விழா சமீபத்தில் நடந்தது. இதில், "அமுதசுரபி' ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் பேசும் போது, "தனியே நடந்து சென்ற பிரம்மசாரி ஒருவனை, அவ்வழியே, தலையில் கள் பானை, இடுப்பில் குழந்தை, கையில் அரிவாளுடன் சென்ற வேசி இடைமறித்தாள். "உனக்கு மூன்று வாய்ப்பு தருகிறேன். ஒன்று, என் ஆசைக்கு இணங்கு அல்லது இந்த மதுவை குடி, இல்லை இந்த குழந்தையை கொல். ஏதேனும் ஒன்றை செய்தால் தான், உன்னை போக விடுவேன் என்றாள். ஆசைக்கு இணங்கினால், பிரம்மசாரியத்திற்கு இழுக்கு; குழந்தையை கொன்றால் பாவம்; மது குடித்தால் பிரச்னை இல்லை என நினைத்து, அதை குடித்தான். "போதை தலைக்கேறியது; முதலில், ஆசைக்கு தடையாக இருந்த குழந்தையை கொன்றான்; பின் வேசியை அடைந்தான். எந்த பாவமும் செய்யக்கூடாது என நினைத்த பிரம்மசாரியை, அனைத்து பாவங்களையும் செய்ய வைத்தது மது' என்றார். இதை கேட்ட ஒருவர், "மக்களோட ஒழுக்கத்தை சோதிக்க தான், நம்ம அரசே மது விற்பனை செய்யுது போல...' என, முணுமுணுத்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
இதை நான் இன்னைக்கு கண்டுபுடிச்சது
தென்மாவட்டத்தைச் சேர்ந்த பெரும்பாலான ஆண்களின் குரல் கொஞ்சம் கரடு முரடாக ரொம்ப Deep Base குரலாக இருக்கிறது...குறிப்பாக மதுரை, தேனி, திருநெல...
-
காதலித்து மணந்தவளை இறந்து விட்டாள் என நினைத்து சந்தர்ப்பவசத்தால், வேறு ஒரு பெண்ணை மணப்பார். இறந்தவளாக கருதப்பட்டவர் பார்வை இழந்த நிலையில் ...
-
சொந்தமாக கார் வாங்குவது பெரிய விஷயமல்ல. அதற்கு இன்சூரன்ஸ் எடுத்து முறையாக பிரிமியம் தொகை கட்டுவது தான் பெரிய விஷயம். அந்த வகையில் கார்களுக்க...
-
ஆற்றோரத்தில் ஜெபம் கூட்டம் ஒன்று நடைபெறுகிறது. ஒரு குடிகாரனும் ஜெபத்தில் கலந்துக்கொள்ள நேறிடுகிறது வருகிறான்.குடிகாரன் பாதிரியாரின் அருகில...

No comments:
Post a Comment