சங்கம் வைத்து தமிழ் வளர்த்த வைகை நதி ஓடும் மாநகரத்தில் வாழும் எளிமையானவன். தான் அறிந்த தகவல்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் கொள்பவன்
Friday, December 3, 2010
1994ல் 175...............இன்று 1 லட்சம்!!
புதுடில்லி : அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் கன்சல்டிங் சேவை வழங்கும் முன்னணி நிறுவனமான காக்னிஜண்ட், 1 லட்சம் ஊழியர்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளது. இதன்மூலம், இந்த சேவை வழங்கும் மற்ற ஜாம்பவான் நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ் மற்றும் விப்ரோ நிறுவனங்களுடன் கைகோர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக, காக்னிஜண்ட் நிறுவன தலைவரும் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான பிரான்சிஸ்கோ டி ஷோசா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : 1994ம் ஆண்டு 175 ஊழியர்களுடன் துவங்கப்பட்ட தங்கள் நிறுவனம், 16 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி பெற்று, தற்போது 1 லட்சம் ஊழியர்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளதாகவும், இது தங்கள் நிறுவனத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்றும், இந்த 1 லட்சம் ஊழியர்களில் இந்தியாவின் பங்கு 75 சதவீதம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மைல்கல் வெற்றியைத் தொடர்ந்து, (அடைப்புக்குறிக்குள் ஊழியர்களின் எண்ணிக்கை) மற்ற முன்னணி நிறுவனங்களான டிசிஎஸ் (1.74 லட்சம்), இன்போசிஸ் (1.22 லட்சம்) மற்றும் விப்ரோ (1.15 லட்சம்), தங்கள் நிறுவனம் நான்காவது இடத்தை காக்னிஜண்ட் ( 1 லட்சம்) பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
இதை நான் இன்னைக்கு கண்டுபுடிச்சது
தென்மாவட்டத்தைச் சேர்ந்த பெரும்பாலான ஆண்களின் குரல் கொஞ்சம் கரடு முரடாக ரொம்ப Deep Base குரலாக இருக்கிறது...குறிப்பாக மதுரை, தேனி, திருநெல...
-
மும்பை : இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான முகேஷ் அம்பானி சமீபத்தில் புதிதாக குடியேறிய அரண்மனை வீட்டின் முதல் மாத மின் கட்டணம் ரூ.70 லட்சம் ...
-
அரசியல் தலைவர்கள், கல்விச்சேவை, மனிதநேய சேவை உள்ளிட்ட சேவைகளை செய்யும் சமூக சேவையாளர்கள், சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்படும் கவுரவ டாக்டர் ...
-
டுவிட்டர் சோஷியல் நெட்வொர்க் தளமானது வெகு விரைவில் செய்திச் சேவையினை ஆரம்பிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த இணையத்தளத்தில் பல லட்சக்...

No comments:
Post a Comment