Monday, April 8, 2024

சூரிய கிரகணம் - கிரகணநாளில் பிறந்த புதிய கண்டுபிடிப்புகள்....



Photo courtesy NBC news

வான்பரப்பில், சந்திரன் சூரியனை விட 400 மடங்கு சிறியதாக உள்ளது. இதன் காரணமாக, சந்திரன் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நேர்கோட்டு புள்ளியாக வரும்போது, ​​அது சூரியனை மறைப்பதால்,  நாம் கிரகணத்தைக் காண்கின்றோம்.

ஒவ்வொரு 18 மாதங்களுக்கும், பூமியின் ஒரு பகுதியில் சூரிய கிரகணம் ஏற்படுகிறது.  அந்த வகையில், ஏப்ரல் 8 ஆம் தேதி அரிய முழு சூரிய கிரகணம் ஏற்படுகிறது.

சூரிய கிரகணத்தைப் பொறுத்தவரை சில நேரங்களில் தெரியும், சில நேரங்களில் தெரியாது.  இந்த  சூரிய கிரகணம் இந்திய நேரப்படி இரவில் நிகழும் என்பதால், இந்தியாவில் அதனை பார்க்க முடியாது.

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகளில் மட்டுமே இந்த அரிய  முழு சூரிய கிரகணத்தைக் காண முடியும். 

கிரகணத்தின் போது அறிவியல் நிறைஞர்களால் தோற்றுவிக்கப்பட்ட அரிய கண்டுபிடிப்புகள்..

1919ஆம் ஆண்டில், ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் கோட்பாடு,முழு சூரிய கிரகணத்தின் போதுதான் ஆர்தர் எடிங்டன் எடுத்த புகைப்படத்தின் மூலம் தான் உறுதிப்படுத்தப்பட்டது.

1866 - சூரிய கிரகணத்தைப் பதிவு செய்யும் போது ஹீலியம் கண்டுபிடிக்கப்பட்டது.

சந்திர கிரகணத்தின் போது பூமியில் வளைந்த நிழலைப் பார்த்த பிறகுதான்,  அரிஸ்டாட்டில் பூமி தட்டையானது அல்ல, வட்டமானது என்பதை நிரூபித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


Monday, December 13, 2021

அடுத்த ஜென்மத்திலாவது குவைத் பிரஜையாக இருக்கோணும் சாமியோவ்!!!!

நீங்கள் குவைத் நாட்டு குடிமகனாக  இருந்தால்....





குவைத் நாட்டில் 45 லட்சம் ஜனத்தொகை.. அதில் குடிமக்கள் 10 லட்சம்தான். மீதமுள்ளவர்கள் குடியேறிகள்.


பெட்ரோல் பணம் புழங்குவதால் நாட்டின் பொருளாதாரம் ஜம் என இருக்கும். அதை அப்படியே மக்களுக்கு செலவு செய்து புரட்சி எதுவும் வராமல் பார்த்துக்கொள்கிறது குவைத்.

குவைத் தினார் ஒன்று 250 ரூ. தனிநபர் வருமானம் அடிப்படையில் உலகிலேயே எட்டாவது நாடு

குடிமகன்கள் மட்டுமே அரசுவேலை பார்க்கமுடியும். அரசு வேலை இல்லை என்றால் குவைத்தில் கம்பனி ஆரம்பிக்கும் அனைவரும் குவைத்திகளை வேலைக்கு எடுக்கவேண்டும். அதுவும் சாதா வேலை அல்ல. டைரக்டர், மேனேஜர்..இப்படி பெரிய பதவிகளுக்கு எடுக்க வேண்டும்.

பல கம்பனிகளில் குவைத்திகளை வேலைக்கு எடுத்தபின் அதே வேலைக்கு ஒரு வெளிநாட்டவரையும் எடுத்துவிடுவார்கள். காரணம் குவைத்தி அதன்பின் ஆபிசுக்கு வரமாட்டார். அவரது வேலையை குடியேறி தான் செய்யணும். குவைத்திக்கு சம்பளம் தவறாமல் போய்விடும். அவரை டிஸ்மிஸ் எல்லாம் செய்யவே முடியாது.

கல்யானம் செய்துகொன்டால் திருமண பரிசாக அரசே வீடுகட்ட சொந்த வீடு வாங்க 60,000 தினார்களை வழங்கும் (சுமார் 1.5 கோடி:-). அதுக்கு மேல் பெரிய வீடாக வாங்கவேண்டுமெனில் வட்டியில்லா கடன் கிடைக்கும். பெட்ரோல் விலை உயர்ந்து நாட்டின் வருமானம் அதிகரிக்கும் ஆண்டுகளில் முழு கடனையும் தள்ளுபடி செய்துவிடுவார்கள்.




மருத்துவசெலவு இலவசம் மட்டுமல்ல. குவைத்தில் சிகிச்சை பெறமுடியாத அளவு சிக்கலான வியாதி என்றால் நாம் விரும்பும் நாட்டுக்கு போய் சிகிச்சை பெறலாம். அதற்கான மருத்துவ செலவு அரசினுடையது. அதுமட்டும் அல்ல நம்முடன் இருவரை கூட்டி செல்லலாம். அவர்களின் செலவும் அரசினுடையது

கல்வி இலவசம். வெளிநாட்டில் போய்கூட படிக்கலாம். அரசின் செலவுதான். தவிர வெளிநாட்டில் தங்கிபடிக்க மாதம் ஒன்றுக்கு $2000 கூட அரசே வழங்கும்.

மின்கட்டனம், தண்ணீர் பில் எல்லாம் பெயரளவுக்குதான். அதைகூட பலரும் கட்டமாட்டார்கள். அதை அரசு அவ்வபோது தள்ளுபடி செய்துவிடும்.

வீட்டுக்கு வீடு பிலிப்பினோ வேலைகாரர்கள் இருப்பார்கள். பாகிஸ்தானி, இந்திய டிரைவர்கள். வேலைக்காரரும், டிரைவரும் இல்லாத வீடுகள் இல்லை. 

ஆனால் நாட்டில் செய்யகூடாத ஒரே தவறு அமீர் (மன்னரை) விமர்சிப்பதுதான். சும்மா இருக்காமல் ட்விட்டரில் மன்னரை, அரசை விமர்சித்தவர்களை பிடித்து ஜெயிலில் போட்டு இருக்கு குவைத்

குவைத் குடிமகன் எப்படி ஆகணும்னு கேட்ககூடாது :-) இத்தனை சலுகைகள் இருக்கையில் எப்படி அவர்கள் மற்றவர்களை குடிமக்கள் ஆக்குவார்கள்? உலகிலேயே கிடைப்பதற்கு அரிய பாஸ்போர்ட் குவைத்தி பாஸ்போர்ட்தான். குவைத்திக்கு பிறப்பதுதான் குவைத் குடிமகன் ஆவதற்கு ஒரே வழி.

குடிமக்களுக்கு தான் இத்தனை சலுகையும். வேலைக்கு போனால் இது எல்லாம் கிடையாது :-)


Tuesday, October 5, 2021

இவர்கள் நினைப்பது நடக்கக் கூடாது...நடக்கவே கூடாது!!!!

 மூன்றாவது அலை வரக்கூடாது


இவர்கள் நினைப்பது நடக்கக்கூடாது 


ஒரு சாதாரண Surgical Trader கூட 3 வது அலையை எதிர்பார்த்து, கிட்டத்தட்ட 50 இலட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை மதிப்பிலான பொருட்களை வாங்கி Godown ல் குவித்து வைத்துள்ளார்கள். 


செப்டம்பரில் 3 வது அலை வரும் என்று கணித்தார்கள். ஆனால் அது அக்டோபர்- நவம்பருக்கு தள்ளிப்போவது போல் தெரிகிறது. 


இதில் கொடுமை என்னவெனில் 2 ஆம் அலை முடிந்ததும் பல உற்பத்தியாளர்களும் ஜூலை மாதத்தில், தங்களிடம் உள்ள பொருட்களை Clearance Sale, Great Deal என்ற அடைமொழி வைத்து தங்களிடம் இருந்த Mask, Sanitizer, Gloves, Pulse Oxymeter என்று அனைத்து Surgical & Pharma Traders தலையில் கட்டிவிட்டார்கள்.


ஜூன் மாதம் 560/- ரூபாய் வரை விற்ற Latex Examination Gloves Box, தற்போது 270 ரூபாய்களுக்கே கிடைக்கிறது. ( 2019 ல் இதன் விலை வெறும் ரூபாய் 130/- மட்டுமே).   





தற்போது மிகத்தரமான 3 Ply Mask எல்லாம் ரூபாய் 1.30 க்கு கிடைக்கிறது. இதை கடந்த ஜூன் - ஜூலையில் 2/- ரூபாய் கொடுத்து வாங்கினார்கள். 


International Standard N95 எல்லாம் ரூபாய் 10/- க்கும் கீழே போய்விட்டது. வெறும் 5/- ரூபாய்க்கெல்லாம் ஓரளவு ஒத்துக்கொள்ளக்கூடிய தரத்திலே N95 கிடைக்கிறது. 


தற்போது Pulse Oxymeter வெறும் 250/- ரூபாய்க்கும் கீழே சென்று, 2 மாதங்களுக்கு முன்பு 350/- ரூபாய் கொடுத்து வாங்கியவர்களை பரிகாசம் செய்கிறது.


உச்சகட்ட கொடுமை என்பது எல்லா Surgical ம், குறைந்தது ஒரு Oxygen Concentrator ஆவது கையிருப்பாக வைத்திருக்கிறார்கள்.  எனக்கு தெரிந்து இனி அது புதிதாய் யாருக்கும் தேவைப்படாது. மொத்தமாக ரூபாய். 50,000/- முதல் 75,000/- வரை முதலீடு செய்திருக்கிறார்கள்.


47 கிலோ ஆக்ஸிஜன் சிலிண்டர் ரூபாய் 13,000/- லிருந்து தற்போது வெறும் 9,000/- க்கு கீழே போய்விட்டது. 


----

2 ஆம் அலை முடிந்ததில் இருந்து தற்போது வரையிலே, இவ்வளவு விலை குறைவு நடந்திருக்கிறது. உற்பத்தியாளர்கள் மற்றும் Importers அதிகமாகிவிட்டார்கள். 


3 ஆம் அலை மட்டும் வரவில்லையெனில், எங்கள் கதை கந்தலாகிவிடும் என்று வெளிப்படையாகவே புலம்புகிறார்கள்...

-----

இப்படி எல்லோரும் Stock Maintenace என்கிற பெயரில் பெரும்பணத்தை பொருட்களின் மீது முடக்கியதால், மற்ற மருத்துவப்பொருட்கள் உற்பத்தியாளர்களுக்கு Payment என்பது வருவதே அபூர்வமாகிவிட்டது. Liquid Cash என்பதே துடைத்து போட்ட மாதிரி இருக்கிறது. 


அனைத்து வர்த்தகர்களும் மிகவும் நம்பியிருப்பது தசரா & தீபாவளி பண்டிகைகளைத்தான். எல்லோரும் கும்பலாக ஒன்றாய் கூடுவார்கள், குறுக்கே, நெடுக்குமாய் சொந்த ஊர்களுக்கு பயணிப்பார்கள். நம் ஊர் பண்டிகைகளால் மட்டுமே கொரோனாவை மீண்டும் கொண்டு வந்து நம்மை வாழ வைக்க முடியும் என்று தீவிரமாய் நம்புகிறார்கள்..


இதற்கு நாம் இடம் கொடுத்து விடாதீர்......


முகக் கவசம் இல்லாமல் வெளியில் செல்லாதீர் இந்த 2021ஆண்டு இறுதிவரை.....*

Thursday, September 2, 2021

திருமலை திருப்பதியில் ஸ்ரீவாரி தன பிரசாத திட்டம் துவக்கம்..


திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக ரூபாய் நோட்டுகள்,  சில்லறை நாணயங்களை செலுத்தி வருகின்றனர். இந்த சில்லறைகளை ஏழுமலையானின் தன பிரசாதமாக பக்தர்களுக்கே வழங்கும்  திட்டத்தை தேவஸ்தானம் புதிதாக தொடங்கியுள்ளது. உண்டியல் மூலம் தினசரி ₹10 லட்சம் முதல் ₹20 லட்சம் வரை சில்லறைகள் கிடைக்கின்றன. ரூபாய் நோட்டுகள் மட்டும் வங்கிகளில் முதலீடு செய்யப்படுகிறது. சில்லறைகளை  வங்கிகள் வாங்க முன்வராததால், தேவஸ்தானத்தின்  பாதுகாப்பில் அவை குவிக்கப்பட்டுள்ளன.  



இதனால், இந்த  சில்லறைகளை ரூபாய் நோட்டுகளாக மாற்றவே, ‘தன பிரசாதம்’ திட்டத்தை தேவஸ்தானம் இன்று முதல் தொடங்குகிறது.  அதன்படி, தேவஸ்தான ஓய்வறைகளுக்கு பக்தர்களிடம் இருந்து ஒரு அறைக்கான வாடகை கூடுதலாக முன்பணமாக பெறப்படுகிறது. பக்தர்கள் தரிசனத்துக்குப் பிறகு அறைகளை காலி செய்து செல்லும்போது, இனிமேல் கூடுதலாக பெறப்பட்ட முன்பணம் இன்று முதல் சில்லறைகளாக சிறிய மூட்டைகளில் வழங்கப்பட உள்ளது. உண்டியலில் சில்லறை தொடர்ந்து குவிந்தால், கூகுள் பே போன்ற ஆப்கள் மூலம் காணிக்கை செலுத்தும் திட்டத்தை கொண்டு வர பரிசீலிக்கப்படுகிறது....

Monday, August 30, 2021

Universal pass cum certificate

 UNIVERSAL PASS CUM CERTIFICATE





நமது இந்திய அரசு கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸும் போட்டவர்களுக்கு ஒரு பாஸ் கம் சர்டிபிகேட் ஐ ஆன்-லைன் மூலமாகவே பெற ஏற்பாடு செய்திருக்கிறது.


இந்த பாஸ் & சர்டிபிகேட் ஐ பெறுவதால் நீங்கள் அரசு போக்குவரத்து, பொது இடங்கள், பேருந்து-ரயில்-விமான நிலையம் மற்றும் மால் போன்ற அனைத்து இடங்களிலும் உங்களது புகைப்படத்துடன் கூடிய இந்த பாஸை வைத்து எந்த தடங்களின்றியும் நுழையலாம் - பயணிக்கலாம்.


கீழே நான் தந்துள்ள லிங்க் ஐ க்ளிக் செய்து உங்களது பதிவு செய்த மொபைல் எண் ஐ தந்து OTP பெற்று Enter செய்தால் உங்களது பாஸ் & சர்டிபிகேட் அடுத்த 30 நிமிடங்களுக்குள் டவுன்லோடு ஆகும்.


Link ஐ க்ளிக் செய்வதற்கு முன்னர் உங்களது போனில் உங்களது பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை தயார்நிலையில் வைத்துக் கொள்ளுங்கள்.

பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இல்லாதிருந்தால் ஷோக்கா ஒரு செல்ஃபி எடுத்தும் அனுப்பலாம்.


உங்களது சர்டிபிகேட் ஐ  வெளிநாடு செல்வதற்குக் கூட PASS ஆக பயன்படுத்தலாம்.


கிளிக் செய்ய வேண்டிய லிங்க்👇

https://epassmsdma.mahait.org/LoginHandler.htm?_qc=c910551a103a49ceac8ec5e4d72273c5

Wednesday, August 18, 2021

சிவாஜிராவ் கெய்க்வாட் ரஜினி ஆக மாறிய நாள் இன்று

 



சென்னையில் உள்ள பிலிம்சேம்பர் வளாகத்தில் நடிப்பு, டைரக்ஷன், எடிட்டிங், ஒளிப்பதிவு முதலியவற்றில் பயிற்சி பெற, விண்ணப்பம் அனுப்பலாம் என்று பத்திரிகையில் விளம்பரம் வந்ததைக் கண்டு, அதற்கு ரஜினி விண்ணப்பித்தார். 


நேர்காணலில் தேர்வு செய்யும் அதிகாரிகளைக் கவர்ந்த ரஜினி, நடிப்பு பயிற்சி பெறும் வாய்ப்பை பெற்றார். கண்டக்டர் வேலைக்கு நீண்ட விடுப்பு எடுத்துக் கொண்டு நடிப்பு பயிற்சி பெற்றார். 


அமிஞ்சிகரையில் தங்கி தினமும் அண்ணாசாலையில் உள்ள பயிற்சி நிலையத்திற்கு பஸ்ஸில் சென்ற ரஜினி, சினிமாவில் எப்படி நடிக்க வேண்டும், எப்படி வசனம் பேச வேண்டும் என்றெல்லாம் அங்கு பயிற்சி பெற்றார். அவருடன் 36 மாணவர்கள் பயிற்சிபெற்றனர். 


அங்கு, உலகப் புகழ் பெற்ற திரைப்படங்களை பார்க்கிற வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. சினிமா உலகைச் சேர்ந்த நடிகர் - நடிகைகள், டைரக்டர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் அடிக்கடி பயிற்சி நிலையத்திற்கு வந்து கலந்துரையாடுவார்கள். இவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பார்கள். சந்தேகங்களைத் தீர்த்து வைப்பார்கள்.


அப்படி ஒருமுறை இயக்குநர் கே.பாலசந்தர் வருகை தந்து, மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது ரஜினியும் அவரிடம் கேள்வி எழுப்பினார். "ஒரு நடிகனிடம் அவன் நடிப்பைத் தவிர வேறு எதை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?'' என்று ஆங்கிலத்தில்  வேகமாகக் கேட்டதால், கே.பாலசந்தருக்கு புரியவில்லை.

பிறகு நிறுத்தி - நிதானமாக மீண்டும் அந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறார். 


பாலசந்தர் சிரித்துக்கொண்டே, "நடிகன் வெளியே நடிக்கக்கூடாது'' என்று கூறியாவர், உன் பெயர் என்ன என்று கேட்டிருக்கிறார்.  "சிவாஜிராவ்'' என்று பதில் சொல்லி இருக்கிறார், ரஜினி. 


நிகழ்ச்சி முடிந்து புறப்பட்ட பாலசந்தர், ரஜினியை நோக்கி கையை நீட்டினார். ரஜினியும் கை நீட்ட, கை குலுக்கி இருக்கிறார். 


பயிற்சி ஆசிரியர் அருகே வந்து “இவனுக்கு உங்க படங்களை ரொம்பப் பிடிக்கும் "சார்! உங்கப்படம் என்றால் இவனுக்கு உயிர். அவள் ஒரு தொடர்கதை படத்தை ஆறு தடவை பார்த்திருக்கிறான்!'' என்று பாலசந்தரிடம் கூறி இருக்கிறார். 


பாலசந்தர் சிரித்தபடி, "உனக்கு தமிழ் தெரியுமா?'' என்று ரஜினியிடம் கேட்க, "கொஞ்சம் கொஞ்சம் தெரியும்'' என்று ரஜினி சொல்லி இருக்கிறார். 


"உனக்குத் தமிழ் தெரியாது என்பது உன் பேச்சில் இருந்தே தெரிகிறது!'' என்று சொன்ன பாலசந்தர், பிறகு, "நான் வருகிறேன்'' என்று விடைபெற்றுக்கொண்டு ஆசிரியருடன் கார் வரை பேசிக் கொண்டே சென்றார். 


கே.பாலசந்தர் சென்ற பிறகு, திரும்பி வந்த ஆசிரியர், "பாலசந்தர் சார் உன்னை பார்க்க விரும்புகிறார். நீ போய் அவரை ஒரு நாள் அவருடைய ஆபிசில் பாரு” என்று கூறி இருக்கிறார். 


ரஜினிக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. பாலசந்தர் சார் நம்மை பார்க்க விரும்புகிறார்? பட சான்ஸ் தேடி வருகிறது என்று நெகிழ்ந்து போனார். 


ஆனால், ஊரில் இருந்து ரஜினிக்கு ஒரு கடிதம் வந்தது. "உடனே புறப்பட்டு வா!'' என்று அதில் அவர் அண்ணன் எழுதியிருந்தார். 


இரண்டு வருடங்களுக்கு மேலாக விடுமுறையில் இருந்ததால், மேற்கொண்டு அனுமதிக்க முடியாது என்று உன்னை கண்டக்டர் வேலையில் இருந்து டிஸ்மிஸ் செய்து விட்டார்கள் என்கிற தகவல் கிடைத்தது. 


பஸ் டெப்போவுக்கு சென்ற போது, அங்கிருந்தவர்கள் ரஜினியை பரிதாபமாகப் பார்த்தார்கள். "கவலைப்படாதே. நீ பெற்ற நடிப்பு பயிற்சி, உன்னை கைவிட்டு விடாது'' என்று நண்பர் புட்ராஜ் ஆறுதல் கூறி இருக்கிறார். 


முன்பு ரஜினியை புகழ்ந்து பேசியவர்கள் இப்போது, "நடிகனாக வேண்டும் என்று மெட்ராஸ் போனான். இவன் மூஞ்சிக்கு நடிகனாக முடியுமா? யார் - யார் எங்கே இருக்க வேண்டுமோ அங்கே இருக்கணும்!'' என்று ரஜினியின் காதுபடவே பேசினார்கள்.


ரஜினி அப்போது ஒரு உறுதியான முடிவை எடுத்தார். நடிகனாகாமல் இனி பெங்களூருக்குத் திரும்பக்கூடாது!' என்று. அன்று இரவே சென்னைக்கு ரெயில் ஏறினார். 

திரைப்பட பயிற்சி பெற்றால் தேடி வந்து வாய்ப்பு தரமாட்டார்கள். நாம் தான் சினிமா உலகை தேடிப் போக வேண்டும் என்று படக் கம்பெனிகளுக்கு செல்ல முடிவு செய்தார்.  


ஒரு நாள் மாலை ஐந்து மணி அளவில் நண்பன் சதீஸ் ஒடி வந்து, "சிவாஜி! பாலசந்தர் சார் ஆபீசில் இருந்து, அசோசியேட் டைரக்டர் சர்மா வந்திருக்கிறார். பாலசந்தர் சார், உன்னை உடனே அழைத்து வரச் சொன்னாராம்!'' என்று கூறி இருக்கிறார். 


கே.பாலசந்தரின் அலுவலகத்தில் அவரை சந்தித்த ரஜினி, அவர் முன் அமர தயங்கி இருக்கிறார். 

என்ன படிச்சிருக்கீங்க?' என்று பாலசந்தர் கேட்டிருக்கிறார்.


 `எஸ்.எஸ்.எல்.சி. பாஸ்!'' என்றதும், `நான் இதுவரை உங்கள் நடிப்பைப் பார்த்ததில்லை. ஏதாவது நடித்துக் காட்டுங்கள்!' என்று கூறி இருக்கிறார். 

`எனக்குத் தமிழ் தெரியாதே!' என்று ரஜினி சொன்னதும், பரவாயில்லை. கன்னடத்தில் பண்ணுங்க!' என்று பாலசந்தர் கூறி இருக்கிறார். 


கிரீஷ்கர்னாட் எழுதிய "துக்ளக்'' நாடகத்தில் இருந்து ஒரு காட்சியை நடித்துக் காட்டி இருக்கிறார், ரஜினி. 

பாலசந்தருக்கு பிடித்திருந்தது. `ரொம்ப நல்லா இருக்கு' என்று பாராட்டி இருக்கிறார். 


`இப்போது, அபூர்வ ராகங்கள்' என்ற படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறேன். அதில் ஒரு ரோல். அது சின்ன ரோல் என்றாலும், ரொம்ப பவர்புல் ரோல். அந்த ரோலில் உங்களை அறிமுகம் செய்யப்போகிறேன். அடுத்து, `அவள் ஒரு தொடர்கதை' படத்தை தெலுங்கில் எடுத்துக் கொண்டிருக்கிறேன். தமிழில் ஜெய்கணேஷ் நடித்த ரோல் உங்களுக்கு!'' என்று சொன்ன பாலசந்தர், "உங்களுக்கு தெலுங்கு தெரியுமா?'' என்று கேட்டிருக்கிறார். 


தெலுங்கில் சில வார்த்தைகள்தான் தெரியும் என்றதும், "மூன்றாவது ஒரு கதை இருக்கு. அதில் ஆண்டி ஹீரோ ரோலை உங்களுக்குக் கொடுக்கலாம் என்று இருக்கிறேன்'' என்று கூறிவிட்டு, "நீங்கள் மட்டும் தமிழை நன்றாகக் கற்றுக் கொண்டால், உங்களை எங்கேயோ கொண்டு போய் விட்டு விடுவேன்'' என்று தெரிவித்திருக்கிறார். 


3 படங்களில் நடிக்க வைக்கப் போவதாக இயக்குநர் கே.பாலசந்தர் கூறியதால் மகிழ்ச்சியின் உச்சிக்குச் சென்ற ரஜினிகாந்த், நேராக டிரைவ்-இன்-உட்லண்ட்ஸ் ஓட்டலுக்குச் சென்று நண்பர்களுக்கு சுவிட், மசாலா தோசை, காபி வாங்கிக் கொடுத்து கொண்டாடி இருக்கிறார். 


"அபூர்வ ராகங்கள் படத்தின் ஷூட்டிங் நாளைக்கு நடக்கிறது. உங்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளை பாலசந்தர் எடுக்கப்போகிறார். ஸ்டூடியோவுக்கு வந்துவிடுங்கள்'' என்று கூறினார்கள்.


அவர்கள் சொன்னபடியே ரஜினி ஸ்டூடியோவுக்கு சென்றார். ஆனால், அன்று அவரது காட்சிகள் எடுக்கப்படவில்லை. மறுநாளும் போனார். அன்றும், அதற்கு அடுத்த நாளும் கூட அவருக்கு படப்பிடிப்பு இல்லை. நான்காவது நாள் அவருக்கான காட்சிகளை படமாக்கினார் பாலசந்தர். 


ஒரு பெரிய பங்களா. அதற்கு ஒரு பெரிய கதவு. அதைத் திறந்துகொண்டு, தாடி-மீசையுடன் உள்ளே நுழைகிறார், ரஜினி. 


"பைரவி வீடு இதுதானா? நான் பைரவியோட புருஷன்!'' என்று கமலஹாசனிடம் கூறுகிறார். ரஜினி பேசிய முதல் வசனம் இதுதான்.


படப்பிடிப்புக்கு முன், இந்த வசனத்தை பல தடவை பேசிப் பேசி ஒத்திகை பார்த்திருந்தார், ரஜினி. 


"கிளாப்!'' என்று இயக்குநர் கூறியதும், பதற்றத்தில் வசனத்தை உளறி இருக்கிறார், ரஜினி. தான் அவ்வளவு சரியா செய்யவில்லை என்பதை, பாலசந்தர் முகத்திலிருந்து தெரிந்து கொண்ட ரஜினி, அடுத்த ஷாட்டில் பாராட்டும் படி நடித்திருக்கிறார். 


அபூர்வராகங்கள் படத்தின் படப்பிடிப்பு முடிந்து தனது காட்சிகளுக்கு டப்பிங் பேச சென்ற ரஜினி,  ஜெமினி ஸ்டூடியோவில் அப்போது கமலஹாசனும், ஸ்ரீவித்யாவும் `டப்பிங்' பேசிக் கொண்டிருபாதை கண்டு, தன்னுடைய காட்சி எப்போது வரும் என்று காத்திருந்தார். 


திடீரென்று திரையில் ஒரு காட்சி. கோட்டு போட்ட ஒரு தாடி ஆசாமி, கதவைத் திறந்து கொண்டு வருகிறான். ஏதோ பேசுகிறான். ரஜினியால் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்புறம்தான் தெரிந்தது - அது தான்தான் என்று! தன்னை மறந்து, அந்தக் காட்சியைப் பார்த்திருக்கிறார். 


தன் உருவத்தை திரையில் பார்த்தபோது உடம்பெல்லாம் சிலிர்த்துப் போக நின்று கொண்டிருந்த ரஜினியை கவனித்த கே.பாலசந்தர், "என்ன! சிவாஜி டப்பிங் போகலாமா என்று கேட்டிருக்கிறார். 


ரஜினிக்கு தமிழ் சரிவரத் தெரியாததால், வேறு யாரையாவது அவருக்கு குரல் கொடுக்கச் சொல்லலாம் என்று சிலர் கூறினார்கள். பாலசந்தர் அதை ஏற்கவில்லை. `கூடவே கூடாது. ஒரிஜினல் வாய்ஸ்தான் வேண்டும்' என்று கூறி ரஜினிய பேச அழைத்திருந்தார். 


ரஜினி முதல் முறையாக டப்பிங் பேசினார். எப்படி உச்சரிக்க வேண்டும் என்று பாலசந்தர், சொல்லிக் கொடுத்தார். அதை அப்படியே வாங்கி பேசினார் ரஜினி. 


நடிகர் திலகம் சிவாஜிகணேசன் என்கிற புகழ் பெற்ற நடிகர் இருப்பதால், சிவாஜி என்ற பெயர் உனக்கு வேண்டாம். `ராவ்' என்கிற பெயரும், தமிழ்நாட்டுக்குப் பொருந்தாது. `டைட்டிலில் எப்படி பெயர் போட வேண்டும் என்று பாலசந்தர் கேட்ட போது, நண்பர்களை கலந்து கொண்டு, `சரத்', `ஆர்.எஸ்.கெய்க்வாட்' என்ற இரண்டு பெயர்களை தெரிவித்திருக்கிறார். 


நண்பர்களுக்கு அந்த பெயர்கள் பிடிக்கவில்லை. 


அதனால், "நீங்களே ஆசீர்வாதம் செய்து, ஒரு பெயர் வையுங்க!'' என்று ரஜினி கூறி இருக்கிறார். 


"என்னுடைய மேஜர் சந்திரகாந்த் நாடகத்தில், சந்திரகாந்துக்கு இரண்டு பிள்ளைகள். ஒருவன் ஸ்ரீகாந்த், மற்றவன் ரஜினிகாந்த். ஸ்ரீகாந்த் என்ற பெயரை ஏற்கனவே ஒருவருக்கு வைத்தாகிவிட்டது. ரஜினிகாந்த் என்ற பெயரை யாருக்கு வைக்கலாம் என்று ரொம்ப நாளா நினைத்துக் கொண்டிருந்தேன். அதை உனக்கு வைக்கிறேன். என்று கூறியவர், ரஜினிகாந்த் என்று கூறியதும், ரஜினி, பாலசந்தரின் காலைத் தொட்டுக் கும்பிட, நல்ல வரணும் என்று வாழ்த்தி இருக்கிறார். 


1975 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18-ந்தேதி அபூர்வராகங்கள் படம் வெளியானது. தான் நடித்த அந்த முதல் படத்தைப் பார்க்க ரஜினி தி.நகர் கிருஷ்ணவேணி தியேட்டருக்குத்தான் சென்றார். ஆனால் டிக்கெட் கிடைக்கவில்லை. பிறகு தியேட்டர் மானேஜரை சந்தித்து, தான் இந்தப் படத்தில் நடித்திருப்பதை தெரிவித்து அவரிடம் டிக்கெட் பெற்று அபூரவராகங்கள் படத்தைப் பார்த்திருக்கிறார், ரஜினி. 


படம் மிகச் சிறப்பாக அமைந்திருந்ததால், நூறு நாட்களைக் கடந்து அபூர்வ ராகங்கள் படம் ஓடியது. முதல் படமே நூறு நாள் படமாக அமைந்தது ரஜினிக்கு பெருமையாக இருந்தது. 


இன்று இந்தப் படம் வெளியான 47 வது ஆண்டு....

Saturday, June 19, 2021

காதலிக்காக உருவாக்கப்பட்ட ATM - A to Z தகவல்கள்....

ஸ்காட்லாந்தை சேர்ந்த ஜோன் ஷெப்பர்ட் பேரோன் தன் மனைவிக்கு பிறந்தநாள் பரிசளிக்க விரும்பி, அதற்கு வங்கியில் இருந்து பணம் எடுக்க வரிசையில் நின்றார்


பொறுமையுடன் காத்திருந்த அவர் கேஷ் கவுன்டரை நெருங்கியபோது, ‘டைம் முடிந்து விட்டது’ என்று கூறி கேஷியர் கவுன்டரை அடைத்து விட்டு சென்று விட்டார் .


பெரும் ஏமாற்றம் அடைந்த ஜோன், வெறுங்கையோடு சென்று மனைவியைப் பார்க்க விரும்பவில்லை.

கையில் இருந்த கொஞச ம் சாக்லேட்களை வாங்கிக் கொடுத்து மனைவியை மகிழ்விக்கலாம் 

என நினைத்து சாக்லேட் வெண்டிங் இயந்திரத்தைத் தேடிச் சென்றார்.


இருந்த காசுக்கு கிடைத்த சாக்லேட்டை வாங்கி மனைவிக்கு கொடுத்தாலும், பணம் இருந்தும் நம்மால் விரும்பிய பரிசை மனைவிக்கு அளிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் அவருக்கு இருந்தது.





அப்போது அவர் கண் முன்னால் பூட்டிய வங்கிக் கவுண்டரும், இயந்திரத்தில் காசு போட்டவுடன் கொட்டிய சாக்லேட்களும் அவர் மனதில் மீண்டும் மீண்டும் வந்து போயின.


 பணம் போட்டால் சாக்லேட் கிடைக்கும் இயந்திரம் போல், எந்த நேரத்திலும் பணத்தையும் எடுக்க ஒரு மெசின் இருந்தால் எப்படி இருக்கும் என்று அவர் சிந்தனையில் உருவானது தான்  ஏ.டி.எம் .இயந்திரம்.


இவர் உருவாக்கிய முதல் 

ஏ.டி.எம் இயந்திரம்,   1969-ம் ஆண்டு வடக்கு லண்டனில் உள்ள பார்க்லேஸ் வங்கியில் வைக்கப்பட்டது. விரும்பிய நேரத்தில் பணத்தை எடுக்கவும் மிஷினா ?

என அனைவரும் ஆச்சரியப்பட்டனர். 


அதிலும் ஒரு சிக்கல் ஏற்பட்டது. ஜோனின் மனைவியால் ஏடிஎம் அட்டைக்கான ஆறு இலக்க ரகசிய பின் நம்பரை ஞாபகம் வைத்துக் கொள்ள முடியவில்லை.


உடனே செயலில் இறங்கிய ஜோன், அதை நான்கு இலக்கமாக குறைத்தார்.

ஏ.டி.எம் இயந்திரங்கள் காலத்திற்கேற்ப நவீன மாற்றங்களை கண்டு விட்டது என்றாலும், இதற்கெல்லாம் அடிப்படையாக இருந்தது ஜோனின் காதலில் மலர்ந்த அந்த முதல் ஏடிஎம் தான். இன்று உலகளவில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏ.டி.எம்கள் உள்ளன.


ஏ.டி.எம் மிஷின் உருவாக காரணமாக இருந்த ஜோன் ஷெப்பர்ட் பேரோன் தன் 84-வது வயதில் கடந்த 2010 மே 19-ம் தேதியன்று காலமானார்.❤

சூரிய கிரகணம் - கிரகணநாளில் பிறந்த புதிய கண்டுபிடிப்புகள்....

Photo courtesy NBC news வான்பரப்பில், சந்திரன் சூரியனை விட 400 மடங்கு சிறியதாக உள்ளது. இதன் காரணமாக, சந்திரன் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே...