Monday, December 13, 2021

அடுத்த ஜென்மத்திலாவது குவைத் பிரஜையாக இருக்கோணும் சாமியோவ்!!!!

நீங்கள் குவைத் நாட்டு குடிமகனாக  இருந்தால்....





குவைத் நாட்டில் 45 லட்சம் ஜனத்தொகை.. அதில் குடிமக்கள் 10 லட்சம்தான். மீதமுள்ளவர்கள் குடியேறிகள்.


பெட்ரோல் பணம் புழங்குவதால் நாட்டின் பொருளாதாரம் ஜம் என இருக்கும். அதை அப்படியே மக்களுக்கு செலவு செய்து புரட்சி எதுவும் வராமல் பார்த்துக்கொள்கிறது குவைத்.

குவைத் தினார் ஒன்று 250 ரூ. தனிநபர் வருமானம் அடிப்படையில் உலகிலேயே எட்டாவது நாடு

குடிமகன்கள் மட்டுமே அரசுவேலை பார்க்கமுடியும். அரசு வேலை இல்லை என்றால் குவைத்தில் கம்பனி ஆரம்பிக்கும் அனைவரும் குவைத்திகளை வேலைக்கு எடுக்கவேண்டும். அதுவும் சாதா வேலை அல்ல. டைரக்டர், மேனேஜர்..இப்படி பெரிய பதவிகளுக்கு எடுக்க வேண்டும்.

பல கம்பனிகளில் குவைத்திகளை வேலைக்கு எடுத்தபின் அதே வேலைக்கு ஒரு வெளிநாட்டவரையும் எடுத்துவிடுவார்கள். காரணம் குவைத்தி அதன்பின் ஆபிசுக்கு வரமாட்டார். அவரது வேலையை குடியேறி தான் செய்யணும். குவைத்திக்கு சம்பளம் தவறாமல் போய்விடும். அவரை டிஸ்மிஸ் எல்லாம் செய்யவே முடியாது.

கல்யானம் செய்துகொன்டால் திருமண பரிசாக அரசே வீடுகட்ட சொந்த வீடு வாங்க 60,000 தினார்களை வழங்கும் (சுமார் 1.5 கோடி:-). அதுக்கு மேல் பெரிய வீடாக வாங்கவேண்டுமெனில் வட்டியில்லா கடன் கிடைக்கும். பெட்ரோல் விலை உயர்ந்து நாட்டின் வருமானம் அதிகரிக்கும் ஆண்டுகளில் முழு கடனையும் தள்ளுபடி செய்துவிடுவார்கள்.




மருத்துவசெலவு இலவசம் மட்டுமல்ல. குவைத்தில் சிகிச்சை பெறமுடியாத அளவு சிக்கலான வியாதி என்றால் நாம் விரும்பும் நாட்டுக்கு போய் சிகிச்சை பெறலாம். அதற்கான மருத்துவ செலவு அரசினுடையது. அதுமட்டும் அல்ல நம்முடன் இருவரை கூட்டி செல்லலாம். அவர்களின் செலவும் அரசினுடையது

கல்வி இலவசம். வெளிநாட்டில் போய்கூட படிக்கலாம். அரசின் செலவுதான். தவிர வெளிநாட்டில் தங்கிபடிக்க மாதம் ஒன்றுக்கு $2000 கூட அரசே வழங்கும்.

மின்கட்டனம், தண்ணீர் பில் எல்லாம் பெயரளவுக்குதான். அதைகூட பலரும் கட்டமாட்டார்கள். அதை அரசு அவ்வபோது தள்ளுபடி செய்துவிடும்.

வீட்டுக்கு வீடு பிலிப்பினோ வேலைகாரர்கள் இருப்பார்கள். பாகிஸ்தானி, இந்திய டிரைவர்கள். வேலைக்காரரும், டிரைவரும் இல்லாத வீடுகள் இல்லை. 

ஆனால் நாட்டில் செய்யகூடாத ஒரே தவறு அமீர் (மன்னரை) விமர்சிப்பதுதான். சும்மா இருக்காமல் ட்விட்டரில் மன்னரை, அரசை விமர்சித்தவர்களை பிடித்து ஜெயிலில் போட்டு இருக்கு குவைத்

குவைத் குடிமகன் எப்படி ஆகணும்னு கேட்ககூடாது :-) இத்தனை சலுகைகள் இருக்கையில் எப்படி அவர்கள் மற்றவர்களை குடிமக்கள் ஆக்குவார்கள்? உலகிலேயே கிடைப்பதற்கு அரிய பாஸ்போர்ட் குவைத்தி பாஸ்போர்ட்தான். குவைத்திக்கு பிறப்பதுதான் குவைத் குடிமகன் ஆவதற்கு ஒரே வழி.

குடிமக்களுக்கு தான் இத்தனை சலுகையும். வேலைக்கு போனால் இது எல்லாம் கிடையாது :-)


தென்கலை - வடகலை பஞ்சாயத்துதான் என்ன?

இன்று சைவம் - வைணவம் ஆகிய இரு மதங்களே இந்தியாவின் பெரும்பான்மை மதங்களாக உள்ளன. இந்த இரண்டு மதங்களுடன் "ஸ்மார்த்தம்"  எனும் வட வேத ...